மந்திர ஆசைகள்

3/16/2008

காதலும் கற்று மற (பாகம் 2)


அப்பொழுதுதான் அவளை பார்த்தேன் . மஞ்சள் சுடிதாரில் அளவாக , அழகாக ஒரு சின்ன தேவதை பக்கத்து comportment இருந்து இறங்கி வந்தாள்.



பக்கத்தில் இருப்பது வில்லன்தான் . அவள் அப்பா. வில்லனிடம் சின்ன சண்டை போட்டாள் அவள் .



கோபத்திலும் அவள் அழகுதான் .அப்போதுதான் அவள் கண்களைப் பார்த்தேன். கருப்பு நிற சூரியன்கள் அவை . இடை இளைத்திருந்தாலும் ஆண்டவன் வஞ்சம் வைக்கவில்லை நெஞ்சத்தில் .



அவள் கோபத்தில் , நெற்றியை சுருக்கி , உதட்டை பிதுக்கி காட்டும் போது , அச்சச்சோ ! அப்போது சினிமா நாயகிகள் எல்லாம் தோற்றுத்தான் போனார்கள் . திடிரன கம்பெனியில் சம்பள உயர்வு கொடுத்தால் எவ்வோளவு அதிர்ச்சியோ அதே அளவுடன் இருந்தேன் அவள் என் எதிரில் அமர்ந்த போது .





ஆரம்பமானது வில்லனிடம் இருந்து விசாரணை .



"தம்பி , நீங்க எந்த ஊரு ?"- வில்லன்



" நான் மெட்ராஸ் " -நான்



"தம்பிக்கு , எங்கே என்ன வேலை ?" - வில்லன் .



" பம்பாயில் , கணினி துறையில் " -நான் .



" அது சரி , இப்பதான் பொட்டிகடை மாதிரி உங்க தொழில்ல நிறைய பேரு இருக்காங்களே "- வில்லன் .



ஜோக் சொன்ன மாதிரி ஒரு அனோகொண்டா சிரிப்பு .



எப்படா வில்லன் கிளம்புவான் என்றது என் மனசு .



வில்லன் அவளிடம் , " கோட்சுகாதே , 2 மணி நேரம்தான் , அடுத்த சந்திப்பில் மீண்டும் அதே என்னோட கோட்சுக்கு வந்திடலாம் ".



அந்த ரோஜவிடம் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.



" என்ன கொடுமை சார் இது " என கொதித்தது என் மனசு .பின்ன என்னங்க 2 மணி நேரம்தானா என் ஆட்டோகிராப் .1 மணி நேரம் கழித்து .....



தேவதைக்கும் பசிக்கும் போல . கையில் அவள் அப்பா கொடுத்த பிரெட் + ஜாம் கூட்டணியை அமைதியாக உண்டாள்.விக்கல் எடுத்து அவளுக்கு . தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது எனக்கு .



அவள் தண்ணீர் பாட்டிலை திறக்க கஷ்டப் படுவதை பார்த்து, நான் என் தண்ணீர் பாட்டிலை தந்தேன் .



அதை வாங்காமல் , என்னை பார்த்தாலே ஒரு பார்வை . அப்போட ! அது முறைப்பா ? கோபமா ? வெட்கம்மா ? இன்னும் குழப்பம் தீரவில்லை .தண்ணீரால் ஈரமாகின அவள் உதடுகள் . ஜன்னலுக்குள் பக்கத்தில் அவள் . வேடிக்கை பார்த்துக் கொண்டே உதட்டை பிதுகினாள்.



உடைந்தது என் இதயம் . என்னை காயப்படுத்தி விட்டோமே என்ற எண்ணமே துளியும் இல்லமால் , காலை நீட்டி படுக்க தயாரானாள். ஓரயாரம் முறை துப்பாபட்டவை சரி செய்தாள். காலை நீட்டினாள் , மடக்கினாள் ..



ம்ஹூம் ..



ஒரு வில்லனை போல என்னைப் பார்த்து , எழுந்து உட்கார்ந்து விட்டாள்.என் கையில் உள்ள தண்ணீரை கேட்காமலே வாங்கி குடித்தது பக்கத்தில் இருந்த பெருசு ..



" என்ன இருந்ததாலும் , எங்க ஊரு தண்ணீ மாதிரி இல்ல " - பெரிசிடம் இருந்து இப்படி ஒரு கமெண்ட்



இப்படியே அரை மணி நேரம் போனது . இயற்கை என்னையும் விட்டு வைக்கவில்லை . பசி எடுத்தது எனக்கு . கையில் இருந்த பிஸ்கட்டை சாப்பிட்டு கொண்டு இருந்த எனக்கு , திடீரென விக்கல் .. ஐய்யோ ! சிரிக்காதிங்க . நிஜமகாவே எனக்கு விக்கல் எடுத்தது .



ஆனால் தண்ணீர் பாட்டில் காலி . பெரிசு என்னை பார்த்து ஒரு மாதிரியா சிரித்தது .கடவுளே சீக்கிரம் பூமியில் மக்கள் தொகையில் ஒன்றை குறைக்க கூடாதா ?!!!

அப்பப்ப அதிசியங்கள் நடக்கின்றன ..

தொடரும்


3 பதில் செப்பியவர்கள்:

பெயரில்லா சொன்னது…

//இடை இளைத்திருந்தாலும் ஆண்டவன் வஞ்சம் வைக்கவில்லை நெஞ்சத்தில் .//
காதல் கதைனு படிச்சா, இந்த மேட்டர் கண்டிப்பா இருக்கு! அது ஏன்!

பெயரில்லா சொன்னது…

நல்ல நடை உள்ளது! வாழ்த்துக்கள்

மந்திரன் சொன்னது…

bhuvanesh said...
//
காதல் கதைனு படிச்சா, இந்த மேட்டர் கண்டிப்பா இருக்கு! அது ஏன்!//
மேட்டர் இல்லாத கடத்தல் இருக்க என்ன ?
//நல்ல நடை உள்ளது! வாழ்த்துக்கள் //
நன்றி நண்பரே