மந்திர ஆசைகள்

3/23/2008

காதலும் கற்று மற (பாகம் 3)


ஆமாம் ..

வாய் திறந்து என்னிடம் அவள், " இந்தாங்க " என்று தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.நான் அதை வாங்காமல் , எழுந்து சென்று சற்று தொலைவில் விற்று கொண்டு இருந்த ஒருவனிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கி குடித்தேன் .

மீண்டும் அவளை பார்க்கும் போது தான் உணர்ந்தேன் . உலகிலேயே மிகச் பெரிய பாவத்தை செய்தது போல ..

அவளிடம் சென்று , " இல்லைங்க , நான் வாங்கி குடித்து விடுவேன் , பாவம் , உங்களுக்கு விக்கல் எடுத்தால் யாரிடம் வாங்குவீர்கள் ? ..

நீங்கள்தான் யாரிடமும் தண்ணீர் வாங்க மாட்டிங்களே ! அதனாலதான் " என்றேன் ..



" அப்பாதான், யாரிடம் எதுவும் வாங்காதே என்றார் " - அவள்

ஏனோ நம்பியாரின் நினைவு வந்தது . ஆஹா ! நம்பியரேதான் ..அவள் அப்பா எதிரில் நின்று கொண்டு இருந்தார் .

என்னை பார்த்து ஒரு முறைப்பு , பின் அவளிடம் " இன்னைக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகுமா !? ..என்று சமாதானம் பண்ணிக் கொண்டு இருந்தார் .ஆனால் எனக்குள்ளே ஒரே டாப்பங் குத்து பாடல்கள் ....

அவள் அப்பா சென்றப் பின் , மெதுவாக பேச்சு கொடுத்தேன் ."என்ன படிக்கிறீங்க ?" - நான் .

" இளங்கலை இறுதியாண்டு படிக்கிறேன் " -அவள் .

எதோ கணக்கு செய்தது என் மனசு .

எப்படித்தான் கடலை போடுவன்களோ ?எப்படி கடலைப் போடுவது என்று எதாவது புத்தகம் இருந்தால் என்னை மாதிரி இளைஞர் களின் புண்ணியம் கிடைக்கும் .

வேறு வழியே தெரிய வில்லை . பழைய பஞ்சாங்கம் ஸ்டைல் பயன்படுத்தி .

"உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு , ஆமாம் நீங்க எந்த ஊரு ?" -நான்
அவள் சிரித்தே விட்டாள் .பாவம் என் அறியாமை அவளையும் சிரிக்க வைத்து
விட்டது

"கொஞ்சமாவது யோசிச்சு வேற மாதிரி கேட்டு இருக்கலாம் .சரி நாங்க திருச்சி " -அவள்

"அப்ப நீங்க ஸ்ரீரங்கத்து தேவதையா ? " -நான்

" பரவா இல்லை , உங்களுக்கு கூட மூளை இருக்கே " -அவள்

பதில் கிடைத்து விட்டது . அடுத்த கேள்வி .. ஒண்ணும் தோன்ற மாட்டேங்குதே ??!!அட என்னங்க நீங்களாவது உதவி ...மன்னிக்கவும் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டு விட்டேன் .நான் குழம்பி கொண்டு இருக்கும் போது ..,

"என்ன , வீட்டு அட்ரஸ் எதாவது வேணுமா ? - அவள் .

"இல்லை , ம்ம் , ஆமாம் , இல்லை .ஐயோ ..எனக்கு தெரியவில்லை " - நான்

அவளிடம் மீண்டும் அந்த ரத்தின சிரிப்பு .

அவளை பார்த்த பின் ஒரு சந்தேகம் , கடவுள் ஒரு வேலை இருப்பரோ ?வேண்டாம் இந்த ஆன்மீக தேடல் , நாம் தேவதையை தேடுவோம் .

" இல்லைங்க , எனக்கு பெண்களிடம் அதிகமாக பேசி பழக்கமில்லை , அதான் " -நான்

" பார்த்தாலே தெரியுது " -அவள்

" போய் சேருகிற வரை கொஞ்சம் ஒரு டைம் பாஸ் போல நாம் பேசலாம் " -நான்

உடன்பாடு ஒத்துக்கொள்ள பட்டது ..

அவள் நெறைய பேசினாள். ஆனால் காதை தொட்ட பேச்சு , மூளையை தொட வில்லை . ஆமாம்ங்க , சில பேர் பேச்சில் அழகிருக்கும் . ஆனால் அவள் பேசினாலே அழகா இருகிறாள் .

எதோ பேசி கொண்டு இருக்கும் போது , மயக்கத்தில் நான் , " நீங்க ரொம்பவும் அழகா இருகிறீங்க "

அவள் என் கண்களையே பார்த்தாள் .ஒரு சின்ன புன்னகை எனக்காக .

" என்னை அடிக்கடி வெட்க பட வைக்காதிங்க " - -அவள்.

பின் அவளிடம் நான் , குடும்பம் , பாசம் , வேலை என எல்லாவற்றையும் உளறினேன் .ரொம்பவும் தயங்கி , தயங்கி அந்த கேள்வியை கேட்டேன் .

" நீங்க யாரைவது காதலிக்கீறிங்களா ?"

" ரயில் எறுகிரவரை இல்லை . ஆனால் இப்ப தெரியவில்லை "- அவள் பேசிவிட்டு என் கண்ணையே பார்த்தாள் .

என் வாழ்கையின் அர்த்தம் புரிய துவங்கியது ..அப்புறம் பேச்சு வாழ்கையை பற்றி திரும்பியது .

"நீங்க எப்ப காதலிக்க , சாரி , சாரி கல்யாணம் பண்ணிக்க போறிங்க ?" - அவள்

" முதலில் காதல், பின் கல்யாணம் " -நான்

"அப்ப , யாரை காதலிகிறீங்க ? " - அவள்

"எனக்கு தெரிய வில்லை , ஒரு பொண்ணை எனக்கு புடுச்சி இருக்கு . ஆனா அது பேரு காதலா ? - தெரிய வில்லை " - நான்

"என்ன குழப்பம் " - அவள்

(தொடரும் )


3 பதில் செப்பியவர்கள்:

பெயரில்லா சொன்னது…

Really Super da..

keep rocking da...

பெயரில்லா சொன்னது…

Thanks for your comments ..
Your comments make me happy as well as put some pressure .I will retained your invaluable appreciations in my future posts also

பெயரில்லா சொன்னது…

Dai nanba sooper da ... jus read all ur posts , exam ellam mudinju free aayittom illa ..