மந்திர ஆசைகள்

4/23/2009

மர்ம தேசம் (பாகம் 2)

ஒரு பெரிய குகை அந்த மணற்த்திட்டினுள் இருக்கும் என்று அந்த இளை ஞனுக்கு தெரிய வாய்ப்பில்லை.

மயக்கத்தில் இருந்து விழித்த அந்த இளை ஞனுக்கு பறப்பது போல் ஒரு அனுபவம். கண்ணை திறந்த அந்த நொடி ..ஒரு நெருப்பு கூட்டத்தின் மேல் அவன் மிதந்து கொண்டு இருந்தான் . கை , கால்களை அவனால் அசைக்க முடியவில்லை.

எதிரே ஒரு வயதான உருவம் தன் தலையை மட்டும் அப்படி , இப்படி அசைத்து எதோ முனு முனுத்து கொண்டு இருந்தது . அவனுக்கே தெரியாமல் அங்கே திரஜோதிக யாகம் மௌனமாய் நடந்து முடிந்தது. உயிரும் , ரத்தமும் இழந்த அவன் உடல் கசக்கி எறியப் பட்ட காகிதம் போல நெருப்பினுள் விழுகிறது .

வீரு கொண்டு எழுந்த அந்த உருவம் சிரித்துக் கொண்டே "வா, மணிகண்டா, உனகாகத்தான் இத்தனை வருடத் தவம்." என்று எங்கோ பார்த்தப்படி கொக்கரித்தது. ஹரிக்கு யரோ எதோ சொல்வது போல் ஒரு பிரமை.

தனக்கு ஒரு விடை கிடைக்க குலவஞ்ச்குறிச்சி செல்ல முடிவெடுத்தான்.
 பல சங்கிலி தொடர் பயணங்களின் முடிவில் இப்போது அவன் அந்த ஊரின் எல்லையில் நிலைக் கொண்டுள்ளான். சூரியன் மிக வேகமாக வானில் கரைந்து கொண்டு இருந்தான். மிக பலத்த காற்று வேகமாக அவன் மீது மோதி வர வேண்டம் என எச்சரித்தது .

அங்கே அமைதியும் , இருளும் ஒரு சேர அந்த பகுதியை அணைத்து கொண்டு இருந்தது.

" என்ன தம்பி , இந்த பக்கம் வழி தவறி வரீங்க, ஊருக்கு புதுசா" எனக் கரகரத்தது ஒரு குரல். குரல் வந்த திசையை நோக்கி பார்த்த ஹரி என்ன சொல்வது எனத் தெரியாமல் தடுமாறினான்.

அதை புரிந்து கொண்ட அந்த குரலின் உரிமை காரன் ஒரு மறைவிலில் இருந்து வெளியே வந்து நின்றார். 70 வயதை தாண்டிய களைப்பு அவர் முகத்தில். ஹரியின் முகத்தை பார்த்த வுடன் , ஒரு மர்ம புன்னகை அவரிடம் பூக்க துவங்கியது.

இது என்னடா புது கதை , என்று வியந்த ஹரியின் கைகளை பற்றிய அவர் " தம்பி, சீகிரம் வாங்க , நீங்க இனிமே இங்க வராதீங்க . சோமலிங்கெஷ்வரர் கோயிலுக்கு உடனே போங்க , நேரம் அதிகமில்லை ..உங்கள் கேள்விக்கு எல்லாம் இனிமே பதில் கிடைக்கும் எனக் கூறி ஒரு திசையை காட்டினார் அந்த பெரியவர்.

அந்த திசையில் ஹரி செல்வதை ஒரு வெற்றிப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சாகுண்டுலன் என்ற அந்த பெரியவர் ,"சாந்தினி ...உன் கனவு பலிக்க போகிறது .. இதோ உன் பலி உன்னைத் தேடி ...." எனக் அறிவித்து விட்டு காற்றில் கரைந்தான்.

ஹரிக்கு எதோ மனதில் தவறு நடப்பது போல் தோன்றியதால் வேறு பாதையை தேர்ந்தெடுத்து அதில் நடக்க துவங்கினான்.
சற்றுத் தொலைவில் ஒரு பாழைடைந்த சிவன் கோவில் கண்ணில் தட்டுப் பட்டது. கதவுகள் பல நாட்கள் திறக்காமல் இருந்திருக்க வேண்டும்.

ஹரியின் பலத்த முயர்ச்சிக்கு பின் அந்த கோவில் கதவு திறந்தது. கோவிலின் உள்ளே ஒரு சூன்ய அமைதி. பௌர்னமி வெளிச்சம் அந்த கோவிலை நிறைத்திறந்தது. இனி என்ன நடக்க போகிறதோ எனத் பயந்து பயந்து ஒவ்வொரு அடியாக நடந்தான் ஹரி .

திடிரென .. கிரீயீயீயீயீயீய்ச்........ கிரீயீயீயீயீயீய்ச் .. .............
அவன் முன்னே இருந்த ஒரு கல் வரிசை மெதுவாக நகரத் துவங்கியது ..

இப்போது ஒரு சிறு குகை அங்கே பிறந்தது .
அப்போது ... அப்போது .. உடல் முலுவதும் முடிகளால் மூடபட்டு , கால்கள் இழந்த ஒரு உருவம் கைகளால் வேகமாக தரையில் ஊன்றி வெடுக் , வெடுகென ஹரியை நோக்கி வரத் துவங்கியது ..

திரும்பி வேகமாக ஓடி கதவைத் திறக்க முயற்ச்சித்தான் .
ம் ஹும் ..பலனில்லை . இதயம் துடிப்பதை முதல் முறையாக கேட்க தொடங்கினான் . ஹரியின் கால்கள் சில்லிட்டன. கண்களில் அப்பட்டமாக மரண பயம் .

"நண்பா" என்று அந்த உருவம் கூப்பிட்ட போதுதான் சென்ற உயிர் மீண்டும் வந்தது ஹரிக்கு. "நான் தான் முகுந்தான் , என்னத் தெரியவில்லையா " என்று அந்த உருவம் கெஞ்சியது.

" என் பெயர் ஹரி , நான் இங்கு வந்த்து " என ஹரி முடிக்கும் முன் , " இல்லை" எனக் பெருங்க் குரலெடுத்து கத்தினான் முகுந்தன்.
(தொடரும்)


7 பதில் செப்பியவர்கள்:

Unknown சொன்னது…

சிறப்பு விருவிருப்பு



ram

மந்திரன் சொன்னது…

நன்றி ராம் ..
மீண்டும் மீண்டும் வருக ..

Bhuvanesh சொன்னது…

செம திகில் மச்சி..
செம விறுவிறுப்பு.. அடுத்த பகுதி எப்போ ?

மந்திரன் சொன்னது…

இந்த வாரமே எழுத முயற்ச்சிக்கிறேன் ..

Vadielan R சொன்னது…

மிகவும் எதிர்பார்க்கிறேன் அடுத்த பகுதியை சீக்கிரம் வெளியிடவும்

மந்திரன் சொன்னது…

வருகைக்கு நன்றி ..
விரைவில் வெளியிடுகிறேன் ...

பெயரில்லா சொன்னது…

Very nice one. Thrilling.

Keep it up friend.

- Kiri Kamal