மந்திர ஆசைகள்

6/29/2009

நாடோடிகள் இது விமர்சனம் அல்ல.

சென்ற வாரம் தான் " நாடோடிகள்" படம் பார்த்தேன் ..(போன வாரம் தான் ரிலீஸ் ஆச்சு ....)

யார் காதல் தோற்றாலும் , ஏனோ என் மனம் அதை ஒப்ப மறுக்கிறது ( பய புள்ள எங்கயோ சிக்கிட்டான் ..)

எதோ ஒரு வித பயம் , படம் பார்க்கும் போது கட்டிக்க் கொள்கிறது ..காரணம், சுப்ரமணிய புரத்தின் குரல்கள் கொஞ்சம் கூட மாறாமல் இந்த படத்திலும் ஒலிப்பதே .

காதலுக்கு கை கொடுக்கும் நண்பர்களுக்கு யார் கை கொடுப்பார்கள் ? யாரும் இல்லை என்ற உண்மையை வலி நிறைந்த நிகழ்வுகளால் நமக்கு உணர்துகிர்றார்கள் .. ( என்னடா ....விமர்சனம் இல்லைன்னு சொல்லிட்டு ..இப்படி ஆரம்பிக்கிற ??!!!???)..
அத எல்லாம் விடுங்க (டேய் , நீ எதுவுமே கொடுக்கல டா ..)

அந்த பெண் , அனன்யா , அதாங்க சசிகுமாருக்கு ஜோடி .. என்ன ஒரு நடிப்பு .. மிகை இல்லதா நடிப்பு .. குறை இல்லாத அழகு .. இப்போது ஈவு இறக்கம் இல்லாமல் என்னை தொந்தரவு செய்யும் செல்ல தேவதை ( அட நீயுமா டா ..எப்போதாண்டா திருந்துவீங்க ...#$%&& )

பெண்களிடம் சிறு குழந்தை தனம் இருந்தால் , எல்லா ஆண்களுக்கும் அவளை பிடிக்கும் .. நான் மட்டும் என்ன விதி விலக்கா என்ன ? ( என்ன ஒரு வில்லத் தனம்... )

எப்பவும் அதே மாதிரியா இருப்போம் .. இப்போ எல்லாம் காதல் பாட்டு மட்டும் தான் பிடிக்குது ,இப்போ இந்தப் பக்கமும் வந்துடுச்சுல என்று சொல்ல ஆசைதான் ..கொடுத்து வைக்கல ..( யாருக்கோ மெசேஜ் சொல்ற மாதிரி இருக்கு )

படம் பார்த்திட்டு இந்த படங்களை பாருங்க .. (யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ...) கடைசியா ஒரு தடவை .ஒரே தடவை .. I love U செல்லம் ..(மவனே .உன்னை தாண்ட தேடிகிட்டு இருக்கேன் ....)


3 பதில் செப்பியவர்கள்:

♫சோம்பேறி♫ சொன்னது…

நல்லாருக்கு மந்திரன்.. யாரும் கமெண்ட் போட்டுடக் கூடாதுனு நீங்களே எல்லா கமெண்ட்டையும் ப்ராக்கெட்ல போட்டுட்டீங்களோ?

மந்திரன் சொன்னது…

நன்றி சோம்பேறி ..
(உங்களை எப்படி மரியாதையாக கூப்பிடுவது .. உங்க பேரு கொஞ்சம் இடிக்குது ..)

பாஸ் . எங்களை எல்லாம் வெளியில் இருந்து யாரும் கேவலப் படத்த முடியாது . ஆமாம் ..

ஆண்மை குறையேல்.... சொன்னது…

ச‌சிகுமார் த‌ங்கையாக‌ ந‌டித்த‌ பெண்ணிற்கு உண்மையில் காதும் கேக்காது.வாயும் ச‌ரியாக‌ பேச‌ வ‌ராது. க‌டைசி வ‌ரை ந‌ம‌க்கு அந்த‌ மாதிரி தெரியாம‌ல் கொண்டு சென்ற‌ டைர‌க்ட‌ருக்கும் அந்த‌ பெண்ணின் ந‌டிப்புக்கும் ஒரு ச‌பாஷ் சொல்லியிருக்க‌லாமே?