மந்திர ஆசைகள்

7/04/2009

அது என்ன ?

வீட்டின் முன் இருக்கும் அந்த பார்க்கில் ஹரியும் , அவன் தந்தையும் அருகருகே அமர்ந்து இருந்தார்கள் .

 நவ நாகரீக வேகத்தில் தன்னை தொலைத்து கொண்டு இருக்கும் ஹரி , அவன் அப்பா ராஜாவை எதோ கடனே என்று கூட்டி கொண்டு வந்து இருந்தான் .

  "ச்சே , ச்சே இது ஒரு வேலையா போட்சு ..சனி , ஞாயிறு இது ஒன்னு வேற ..கூட்டிட்டு போ, கூட்டிட்டு போ..அம்மாவோட புலம்பல் ..கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்ல " என்று தனக்கு தானே புலம்புவதாக எண்ணி வாய் விட்டு குமறிக் கொண்டிருந்தான் ஹரி .

 காதில் விழுந்தாலும் , அமைதியாக கேட்டு கொண்டு இருந்தார் அவன் அப்பா .. திட்டினாலும், தன் மகன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தார் .

 எதோ ஒரு நடிகனின் படத்துக்காக 3 ,4 மணி நேரம் காத்து கிடக்கும் நம்மை போன்ற ஹரி, இந்த வார குமுதத்தில் புதைந்து கொண்டிருந்தான் ... 10 ருபாய் குமுதம் , தன் மகனை தன்னிடம் இருந்து பிரிப்பதை அப்பாவால் தாங்கி கொள்ள முடியவில்லை .

 வாரம் முழுவதும் காத்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த சில மணி நேரங்கள் தான் வாழ்கையின் பிடிமானங்கள் . மணித்துளிகள் நொடி மேகங்களாக கரைந்து , மறைந்து கொண்டிருந்தது ..

 அப்போது ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து அருகே உள்ள மரகிளையில் வந்து சம்மனமிட்டது .. ஹரியின் தந்தையின் முகம் சற்றே மலர்ந்தது ..

 உடனே ஹரியிடம்,

 அது என்ன ?

நயன்தாராவின் காதலை படிக்க இடையுறாக இருக்கும் தன் தந்தையை கடுப்புடன் நோக்கினான் ஹரி ..
  என்ன ? என்றான் எரிச்சலுடன் ..

 அங்க பாரேன் என்றார் அவன் தந்தை .

  அது சிட்டுக் குருவி ..ம்கும் ..

சில நிம்டங்களுக்கு பிறகு ,அவன் தந்தை திரும்பவும் அது என்ன ?
  

அப்பா ,  உங்களோட ஒரே ரோதனையாய் போச்சு. கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க முடியாதா ?

சற்று நிறுத்தி ,,, திரும்பி பார்த்து

அதே சிட்டுக் குருவிதான் ...என்றான் கோபத்துடன் .

அடுத்த சில நிமிடங்களுக்கு பிறகு , அதே கேள்வி அவன் தந்தையிடம் இருந்து .. பொறுத்திருந்த அத்தனை கோபங்களும் மொத்தமாக வெடிக்க ,
ஹரி நிதானம் தவறினான் .
 
ஏன் என்னோட உயிரை இப்படி வாங்குறீங்க ... வாரம் , வாரம் உங்களோட இதே இழவா போச்சு .
 இனிமே அங்க கூட்டிட்டு போ , இங்க கூட்டிட்டு போ அப்படின்னு சொன்னீங்க ...அப்புறம் நான் நானாகவே இருக்க மாட்டேன் .
இம்சை பன்றதுக்குனே எனக்கு அப்பாவா வந்து வாச்சி இருக்கீங்க .. ச்சே ..
பொருமி தள்ளினான் ஹரி ..

முதுமை வலியை விட பிள்ளையின் வார்த்தைகளால் ரொம்பவே வலியை உணர்ந்தார் ஹரியின் அப்பா . வீட்டை நோக்கி , நடக்க துவங்கினார் . தன் நிம்மதி பறி போய்விட்டதாக , புலம்பினான் ஹரி .

அந்த சிட்டுக்குருவியை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் . சில நிமிடங்களில் , அவன் தந்தை மீண்டும் அவன் அருகே வந்து அமர்ந்தார் .
ஆனால் அவர் கையில் , அவரின் 1988 ஆம் வருட டைரி .
அதனை ஹரியிடம் கொடுத்து , அதன் ஒரு பக்கத்தை படிக்க சொன்னார் .
ஒன்னும் புரியவில்லை ஹரிக்கு .
சற்றே சலிப்புடன் , படிக்க துவங்கினான் ..  

கொஞ்சம் சத்தமாக என்றார் அவன் அப்பா .


" ஜூலை 10, நானும் என் பையன் ஹரியும் பார்க்கில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம் ..
இவன்தான் என் சொத்து என்று ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன் . இதோ என்னை ஓட வைக்கிறான் , சிரிக்க வைக்கிறான் ..  

என் வாழ்கையின் ஜீவ நாடியாக அவன் மாறி இருக்கிறான் ..
இல்லை . இல்லை என்னை மாற்றி இருக்கிறான் .  
எங்கள் இருவரின் முன் ஒரு சிட்டுக்குருவி வந்து அமர்ந்தது .. அவன் என்னிடம் கேட்டான். அது என்ன ?"

படிப்பதை நிறுத்தி விட்டு தன் தந்தையின் முகத்தை பார்த்தான் . அவர் கண்களில் சிறு வெள்ளம் . மேலும் படிக்க சொன்னார் அவனை .
மீண்டும் படிக்க துவங்கினான் .. ஆனால் இம்முறை குரலில் உறுதி குலைந்து இருந்தது .. தடுமாற்றத்துடன் ஆரம்பித்தான் .

"நான் சொன்னேன் , அது சிட்டுகுருவி என்று . திரும்பவும் கேட்டான் அது என்ன வென்று . பதில் சொன்னேன் அது சிட்டுகுருவி என்று .. தொடர்ந்து 28 தடவை கேட்டான் அது என்ன என்று .. நானும் நிறுத்தவில்லை பதில் சொல்வதை ..

  ஒவ்வொரு தடவை பதில் சொல்லும் போதும் , அவன் குழந்தை தனத்தை மெச்சி முத்தம் கொடுத்தேன் .. அத்தனை தடவையும் பதில் சொல்லியும் எனக்கு சலிப்பு ஏற்பட வில்லை .. ஏனெனில் அவன் என் செல்ல மகன் ..  
பதில் மறந்து என்னிடம் திரும்பி , திரும்பி கேட்டானா ? 
இல்லை என் முத்ததிற்காக கேட்டானா ..?
தெரியவில்லை .
தெரிந்துக்கொள்ளவும் விருப்பம் இல்லை .."

டைரியை மூடினான் ஹரி .. குமுதம் மண்ணை முத்தமிட்டது ..

இந்த முறை , இவன் கண்களில் கண்ணீர் ..

தன் அப்பாவை , தன் தோளோடு கட்டி பிடித்துக் கொண்டான் ..  

"அப்பா ..அப்பா ..."
வேற எதுவும் பேச வில்லை ஹரி ..  

இப்போது அவர்கள் அருகருகே இருந்தார்கள் மனதளவில் ..

டிஸ்கி : இது ஒரு ஆங்கில குறும் படத்தின் தாக்கத்தினால் , நான் எழுதியது ..நன்றிகள் பல அந்த படத்திற்கு ..


6 பதில் செப்பியவர்கள்:

Bhuvanesh சொன்னது…

மச்சி, இந்த கதை எனக்கு ஈமெயில் வந்துச்சு!! படிச்சு அசந்துட்டேன்!! நல்ல கதை!! இனி கதையை Forward செய்யும் போது தள முகவரியும் கொடுத்து அனுப்பு மச்சி!!

மந்திரன் சொன்னது…

அதை யாருக்கும் forward நான் பண்ணல ..என்ன இது புது கலாட்டா ? பதிவு திருட்டா ?
நண்பா, யார்கிட்டே இருந்து வந்தது ?

Bhuvanesh சொன்னது…

மச்சி.. அந்த மெயில் தேடிப்பார்த்தேன் கிடைகல.. கிடைச்சவுடனே உனக்கு forward செய்யறேன்! ஆனா அப்படி செஞ்சாலும் சோர்ஸ் கண்டுப்பிடிக்கமுடியுமா ?

மந்திரன் சொன்னது…

try பண்ணலாம் ..

விக்னேஷ்வரி சொன்னது…

ரொம்ப நல்ல கதை. படிச்சதும் மனசு கனக்குது.

மந்திரன் சொன்னது…

நன்றி விக்னேஷ்வரி ..
அடிக்கடி கொஞ்சம் இங்க தலையை காட்டலாம்