மந்திர ஆசைகள்

8/27/2009

இது எப்படி இருக்கு ?

என்ன கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு ... வரலாற்றில் உயிர் மிக முக்கியம் அமைச்சரே !


8/25/2009

நான் பொண்ணு பார்க்க போறேன் ....

"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா இல்லை பிள்ளை குட்டி பெத்துகிட்டு கட்டிகிலாமா "
பாட மட்டும் தான் இது எளிது . ஆனால் நடைமுறையில் விழி பிதுங்கி போகுது எனக்கு ..என்னடா ஆரம்பமே ஒரே அழுகாச்சியாய் இருக்குன்னு நினைக்காதீங்க ..
நிலைமை அப்படி .. நான் ஹரி , எனக்கு பெண் பார்க்க நாளை கிளம்ப வேண்டும் என்பது உத்தரவு .
அட நமக்கு கூட பெண் கொடுக்க ஒரு குடும்பம் இருக்குன்னு நினைக்க , நினைக்க ஒரே மஜாதான் .
ஆனால் அந்த பெண்ணின் , அதாங்க என் வருங்கால மனைவி (கொஞ்சம் இருங்க வெட்கப்பட்டு கிறேன் ..)

புகைபடத்தை கையில் கொடுத்தாங்க பாருங்க ..அதுக்கு அப்புறம் தான் நமக்கு சந்தேகம் .

அதை தீர்க்கத்தான் , நான் ஒரு மந்திர ஆலோசனை நடத்த அருணையும் , பிரபுவையும் கூப்பிட்டு இருக்கிறேன் .

அதோ , அவிங்க வந்துட்டாங்க ..

"டேய் ,ஹரி , எல்லாம் கேள்விபட்டேன் , ரொம்ப கஷ்ட்டமா போச்சு, அந்த பெண்ணை நினைத்து.. " ஆரம்பத்திலே அதகளம் பண்ணினான் அருண் .

"டேய் , அந்த பெண்ணுக்கு பாரத ரத்னா விருது ஒன்னு கொடுக்கலாம் என்று பிரதமர் சொன்னதாக ஒரு வதந்தி " இப்படி ஒரு பிட்டு பிரபுவிடம் இருந்து .

" அடங்குடா , இந்த புகை படத்தை ஒரு நிமிடம் பாருங்குடா " - இது நான் .

"இல்லை ... "வ்வர்ர் , வார் ,, வார்த்தையே வர வில்லை டா"
 ரெண்டு பேரும் கொஞ்சம் இல்ல , ரொம்ப குழம்பி போய்ட்டாங்க ..

என் வாயால , அப்படி சொல்ல கூடாது ..இருந்ததாலும் உங்களுக்காக ஒரு தடவை மட்டும் , ஒரே தடவை மட்டும் .. "சூப்பர் , சூப்பர் பிகரு " .
 எங்க ரெண்டு பேருக்கு என்ன பொருத்தம் இருக்குன்னு ஆண்டவன் இப்படி கூட்டணி வச்சிட்டான்னு தெரியல ..

"டேய் , ஹரி நீ ரொம்ப கொடுத்து வச்சவன் டா ..இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன் .. " என்றான் அருண் .

"சரிடா , உனக்கு என்னடா இப்ப பிரச்சினை " என்று கேள்வி கேட்டான் பிரபு

. "இல்லைடா , அந்த வித்யா , அதான் நான் கல்யாண பண்ணிக்க போகிற பெண் , ரொம்ப , ரொம்ப அழகா இருக்கா ..ஆனால் என்னை போய் கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதித்து இருப்பாள்?"

"யோசிக்க வேண்டிய விஷயம்" என்று சிரித்தான் அருண் .

"விடுடா , நாளைக்கு நேருக்கு நேரா நீயே கேட்டு விடு " என்றான் பிரபு .

"அதான் சரி , ஆனால் நாங்க அங்க வரவில்லை .." என்று மிரட்டினான் அருண் .

"ஏன்டா , ஏன்டா " இது நான் மிரட்ச்சியுடன் .

"நீ அங்கு போய் , வித்யாவை பார்த்து ரொமான்ஸ் பார்வை எல்லாம் பார்ப்பாய் ..எங்களுக்கு இருக்கிறதோ சின்ன இதயம் , இதை எல்லாம் தாங்க முடியாது " என்று இரண்டு பேரும் நழுவினார்கள் .

ச்சே , இவ்வளவு வேகமாகவா காலம் ஓடும் . நான் இப்போது வித்யாவின் வீட்டில் , பெண் பார்க்கும் படலத்தின் தற்போதைய கதாநாயகன் .

குறு குறுன்னு எல்லாரும் என்னையே ஒரு மாதிரி பார்க்குறாங்க .. கொஞ்சம் , என்னோட ஆளை , கண்ணுல காட்டுன நல்லா இருக்கும் ..
எங்கே கட்டுறாங்க ..? பெருசுங்க எல்லாம் எதோ , எதோ பேசுறாங்க .நமக்கு தான் கண்ணை கட்டுது ...

அதோ , அதோ அவள் வருகிறாள் . தரை மேல் அவள் நடந்து வரவில்லை . தரையே அவளை தாங்கி வருவது போல் ஒரு நினைப்பு .

என் உயிர் கூட சரியான விலையாகது அவள் அழகுக்கு .
பிரம்மன் புத்திசாலி , நான் அதிர்ஷ்டசாலி ..

அவளிடம் சில நிமிடங்கள் பேச வேண்டும் என்று சொன்னவுடன் "நாட்டாமை " மாதிரி ஒரு பார்வை என் வருங்கால மாமனாரிடம் இருந்து
. சில ,பல கெஞ்சலுக்கு பிறகு , இப்போது நான் வித்யாவுடன் தனி அறையில் . நேருக்கு நேர் அவளை பார்க்க கூட முடியவில்லை .

என் நிலை உணர்ந்தே , அவள் சிரிக்க துவங்கினாள். ஆம்பிள்ளை ஆச்சே , விட்டு விட முடியுமா ? துணிந்தேன் .

பின் நான் ,
" என்னை , உண்மைலேயே உனக்கு பிடிச்சு இருக்கா ?"


" ஏன் , இப்படி? " என்று அவள் வாய் கேட்கவில்லை , அவள் கண் கேட்டது .

பின் அவளே , "என்னோட புருஷன் , அழகா மட்டும் இருக்கனும் நான் நினைக்கல . நல்லவராகவும் இருக்கணும்... "

"நான் , நல்லவன் ...அழகா ?...." என்று நான் தடுமாறிய போது,

. அவள் ,
" போன மாதம் ,பஸ் ஸ்டாண்டில் , உங்களிடம் தன்னை விலை பேச வந்த ஒரு பெண்ணிடம் என்ன கூறினீர்கள் ?"

"அது , அது .... அவளிடம் 500 ருபாய் கொடுத்து ,அவளை பக்கத்தில் கட்டிட வேலை பார்க்கும் இடத்த்தில் ஒரு மணி நேரம் நிற்க சொன்னேன் "

"எதற்கு அப்படி சொன்னீர்கள் ?"

" அங்கு , இளம் பெண்கள் , வயதான பெண்கள் , சின்ன பெண் குழந்தைகள் எல்லாரும் வேலை செய்வார்கள் .. அதை பார்த்தாவது சில மணி நேரம் தன்னை திருத்திக் கொண்டால் நல்லது என நினைத்தேன் ...

ஆனால் அப்பொழுது நீ பக்கத்தில் இல்லையே ..பின் எப்படி ..?"

நீங்கள் சொல்வது சரி , அந்த பெண் , அங்கு வேலை செய்த ஒரு நொண்டி பெண்ணை பார்த்து மனம் திருந்தி , எங்களிடம் வேலை கேட்டு வந்தாள்.

அவள் தான் எங்கள் அலுவலகத்தை இப்போது சுத்தம் செய்பவள் .உங்களோட போட்டாவை நான் பார்த்து கொண்டு இருக்கும் போது தான் , அவள் இதை கூறினாள்...
அவளின் கண்ணீரில் நான் உங்களை பார்த்தேன் .." என முடித்தாள் வித்யா.

பின் என்னை பார்த்து "உங்களை விட அழகான ஒரு ஆணை இது வரை நான் பார்த்தது இல்லை " என் கன்னத்தை கிள்ளி விட்டு சென்றாள்.
அங்கு இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நான் . கண்ணாடியில் ஹரி .
இருவரும் கேட்டுகொண்டோம்
" நீ அவ்வளவு நல்லவனா ?"


8/20/2009

கமலும் காலமும்

நிஜம் தான் , நான் சொல்ல போவது எல்லாம் நிஜம் ..
 1. 1978 -ல், கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள் வெளியானது . ஒரு வருடம் கழித்து சைகோ ராமன் என்பவன் தமிழகத்தையே அதிரவைத்தான் தன் மன்மத கொலைகளால் .
2. 1988 -ல், கமலின் நடிப்பில் "சத்யா " வெளியானது . 1990- ல் நாடு மாபெரும் வேலை இல்லா திண்டாட்டத்தை பார்த்தது .
3.1992 ல் தேவர் மகன் வெளியானது . சரியாய் 1993- ல் நடைப்பெற்ற சாதி கலவரங்கள் தான் இன்றும் சாதி என்னும் தீயை அணையவிடாமல் தென் மாவட்டங்களில் காக்கிறது .
4.1994 , மகாநதி படத்தில் , பணத்தையும் , குடும்பத்தையும் இழந்தார் கமல் . 1996ல் தமிழகத்தில் புகழ் பெற்ற சிட் பான்ட் நிறுவங்கள் வரிசையாக மக்களுக்கு நாமம் போட்டனர் .
 5. 1992 -ல், இந்து முஸ்லிம் சண்டையை "ஹே ராம் " படத்தில் வைத்தார் கமல் .2002- ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் , அதன் பின் நடந்த முஸ்லிம் இன படுகொலைகளையும் நான் என் வாயல சொல்ல மாட்டேன் . 6.2003 -ல் ,"சுனாமி" என்று அன்பே சிவத்தில் சொன்னாலும் சொன்னார் , 2004- ல் நடந்த சுனாமியின் கோரதாண்டவத்தை நாம் இன்னும் மறக்கவில்லை .
 7. இது லேட்டஸ்ட் . தசாவதாரத்தில் (2008) ஒரு கொடுமையான , பயங்கரமான வைரஸ் பற்றி சொல்லி இருப்பார் .நாம் இப்போது "Swine Flu " பயத்திலேயே காலத்தை ஓட்டுகிறோம் ..

 ஆமாம் , இது எல்லாம் தற்செயல்லா ? இல்லை வேற எதாவது ....... சொல்ல விருப்பம் உள்ளவர்கள் பின்னுட்டத்தில் சொல்லலாம் ..

டிஸ்கி : இது என் நண்பனின் வாய் மொழி வாயிலாக கேட்டது . இதை போன்று ஏற்கனவே எ-மெயில் (ஆங்கிலத்தில் ) வந்ததாக சிலர் கூறுகின்றனர் . ஆனந்த விகடனில் வந்ததாக "வால்" சொல்கிறார் . இரண்டும் உண்மையாக இருப்பின் , என்னை மன்னிக்கவும் .. (என் நண்பனை ,போய் உதைக்கணும் .....)


8/13/2009

நமது முதாலாம் சுதந்திர நாள் விழா

இப்ப நாம் எப்படி கொண்டாடுகிறோம் ? அன்று எப்படி கொண்டாடினார்கள் ....


8/10/2009

என்ன ஒரு சுகம் .! (8+ வயது வந்தவர்கள் மட்டும் )

என்ன ஒரு வேகம் .
கொஞ்சம் பொறுமையாக படியுங்க .
 நான் "8+" என்றுதான் போட்டுள்ளேன் .."18+" அல்ல .
 அதனால இந்த பதிவை எல்லாரும் படிக்கலாம் (டேய் , நீ எங்கடா இருக்க #$$%%% )..

 ரொம்ப சின்ன விஷயம் தான் .
 ஒவ்வொரு தடவை பண்ணும்போதும் ரொம்ப இனிமையாக இருக்குது .
 அடச் ச்சே ..என்ன வேற மாதிரி , பதிவு போகுது .
நேர விசயத்துக்கு வரேன் . இந்த வாரம் , முடி வெட்டிகொள்வதர்க்காக சலூனுக்கு போனேன் . அட .அட .. முடிக்கு கூட வலிக்காம , என்னமாய் வெட்டுறாங்க ..
 ஒவ்வொரு தடவை இந்தமாதிரி பீல் பண்ணி கிட்டு இருக்கும் போதே ,
ஒரு சின்ன தூக்கம் கண்ணை கட்டும் பாருங்க .. ஆஹா ...ஆஹா ...
அது என்னவோ நல்லத்தான் இருக்கு (ஏய் ,என்னமா பீல் பண்ணி கூவுற ..)
 என்ன மாதிரி நீங்க யாராவது பீல் பண்ணி இருக்கீங்களா .?.
 பொண்ணுங்க எல்லாம் பாவம் , இந்த விசயத்தை பொறுத்தவரை (என்ன ஒரு ஆணாதிக்கம் ??? !!!!) ..

ஒவ்வொரு தடவை முடிவெட்டிக்கொள்ள போகும் போதும் ஒவ்வொரு அனுபவம் (கொஞ்சம் அடங்குடா ..) அந்த தண்ணியை தலையில கொஞ்சம் அப்படி , அப்புறம் இப்படி அடிக்கும் போது ஜிலு ஜிலுன்னு ஒரு A.C பீலிங் .

 அப்புறம் எல்லாம் முடிந்தபின்னாடி , ஆயில் மசாஜ் கொஞ்சம் பண்ணுவாங்க பாருங்க .. அப்படியே போய், வீட்டுல சுடுத்தண்ணியில ஒரு முக்கு ... அவ்வளோதான் .. அவ்வளோதான் ..

 கட்டையை சாய்த்து, விட்டத்தை பார்த்து தூங்குனா என்ன ஒரு சுகம் ..

 இது எல்லாம் ஒரு மேட்டர், அப்படின்னு பதிவு போடனும்மான்னு ஒரு தயக்கம் .
 ஆனால் ஒரு மயக்கத்துல பதிவை போட்டுட்டேன் .(என்ன , T.R வாசம் வீசுது ..?!!)


8/08/2009

காதலால் நொந்தேன்

இந்த காதல் இருகிறதே ....
ரொம்ப Bad .
எவ்வளவு நாள் தான் வலிக்காமல் இருக்கிற மாதிரியே நடிக்கிறது ..
ஒரு decency வேணாம் ?
கடந்த ஒரு மாதமாக ஒரே தொலைப்பேசி அழைப்புகள் ..
நீங்க என்ன நினைசீங்க ?
இவனுக்கு பல காதல் தொந்தரவுகள் என்று நினைத்தால் , (நினைச்சீங்களா இல்லையா )
நான் கொஞ்சமாவது புண்ணியம் பண்ணி இருக்கேன்னு நான் நம்புறேன் ..
பின்ன என்னங்க ?
எல்லா பயல்களும் போன் பண்ணி ,
"மாப்பு , அவ சரின்னு சொல்லிட்டா "

எவடா ?

"டேய் , உனக்கு தெரியாதா , அவதாண்டா ..மச்சி , ரொம்ப சந்தோசமாக இருக்குடா ,கடவுள்ன்னு ஒருத்தன் இருக்கான் என்ன சொல்ற ?"

"கொய்யால , என் இப்படி அருக்குற ? என்ன விஷயம் , சொல்றா? "

"போடா , எனக்கு வெட்கமா இருக்கு, டேய் , டேய்..
என் ஆளு லைன் ல இருக்குறா , உன்னை அப்புறம் .. "

டோங் .
நான் மட்டும் தனியாக
"டேய் , டேய் .. ஹலோ ..ஹலோ "

இப்படி மட்டும் இல்லைங்க ..இன்னும் கேளுங்க ,
எங்க போறீங்க ?? ..
நீங்க கொஞ்சம் கேளுங்களேன் ..
 இப்படிதான் ஒருத்தன் போன் பண்ணி ,

"டேய் , கொய்யால , அவளும் லவ் பண்றன்னு சொல்லிட்டா ?"

"எவளும் ?"

"டேய் , நாயே , அதான் முந்தாநேத்து என் டீம் சுமி சொன்னாளா, இன்னைக்கு சுஜாதா கூட என்னையே லவ் பண்றாளாம் ?"

"என்னடா சொல்றா , உனக்கு மச்சம் டா .."

"போடா , என் கஷ்டம் எனக்கு தான் தெரியும் , பக்கத்து டீம் ல , புதுசா ஒரு north இந்தியன் figure வந்து இருக்கு , அதைத்தான் நான் உசார் பண்ணும்ன்னு நெனைச்சா? இப்ப வந்து , எனக்கு ஒரு சத்திய சோதனை ..என்ன பண்ண சொல்ற ?"

"ஏன்டா , உனக்கு மனசாட்சியே இல்லையே "

"போடா , நீ ஒரு வேஸ்ட் , உன்கிட்ட சொன்னேன் பாரு "

டோங் ..
அவனுக்கும் என்னை பத்தி தெரிஞ்சு இருக்கு ..
ஒரு தடவை மேலும் , கீழும் பார்த்தவுடனே நம்மளை பத்தி ஒரு முடிவுக்கு வந்துடுறாங்க ..என்னை என்ன பண்ண சொல்றீங்க .. (டேய் அவனா நீ ...)  

 இப்படிதான் ஒருத்தன் , போன் பண்ணி , 
"மாப்பு, காதல் ஒரு வியாதி , மருந்தும் இல்லை , மருத்துவனும் இல்லை "  

நான் குழப்பமாக  
"டேய் , என்னாச்சு டா உனக்கு ?" 
 
"வெளியில் இருந்து பார்த்தா எல்லாம் நல்ல இருக்கிற மாதிரி தெரியும் , ஆனால், சாரிடா , அவ கூபிடுரா ..அப்புறம் உன்னை ... "

டோங் .. 
 ஹலோ ,ஹலோ ... இது நான் . 

அவனுமா காதலிக்கிறான் .??!!!!!!.
அஜித் படம் கூட 500 நாள் ஓடுது அப்படின்னு சொன்னாகூட நான் நம்பிடுவேன் .
.பட் அவன் லவ் பண்றான் சொன்னால் என்னால நம்பவே முடியல .. 
FRIEND என்கிற பேருல இவிங்க பண்ற லவ் டார்ச்சர் தாங்க முடியல சாமி .. 

பேசாம நானும் காதலிச்ச என்ன? (நீ ,,,,,பேசியே காதலிக்கலாமே ..) சிரிக்காதீங்க ,,
நான் சீரியஸா பேசுறேன் ..
என்ன அங்க சிரிப்பு , படவா ராஸ்கல் ..