மந்திர ஆசைகள்

6/28/2010

தீனி

எத்தனை முறை கொலை செய்தாலும் சலிக்க வில்லை . ரத்தம் பார்க்காமல் சித்தம் தணியாது . மீண்டும் இன்னொரு கொசு .




இன்னொரு பொய் . ஆயிரம் பொய் கடந்தால் என்ன ? அத்தனையையும் தின்று கொண்டு இருக்கிறது அடியில் இருக்கும் ஒரு மெய் .



தமிழை தமிழில் பேசினேன் .புரியவில்லையாம் .
எனக்கு புரியவில்லை .யார் தமிழன் ?
 
 
வெட்கத்தை கேட்டேன் . கொடுக்கிறேன் என்றாள் . எனக்கு தெரியவில்லை பதிலுக்கு என் கண்களை கேட்பாள் என்று .
 
 
மௌனத்தின் மொழியை புரிந்துக்க் கொள்ள அதனையை கொலை வல்லவா செய்ய வேண்டி யுள்ளது .
 
 
காதலை தின்று காமத்தில் கற்ப்பை வளர்க்கும் காதலர்களுக்கும் வழி சொல்கிறாள் மெரினாவில் கண்ணகி .
 
 
உலகின் செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாம் . மரணத் தேதி சொல்லப்பட்ட இன்னொரு தாய் .


1 பதில் செப்பியவர்கள்:

குந்தவை சொன்னது…

//இன்னொரு பொய் . ஆயிரம் பொய் கடந்தால் என்ன ? அத்தனையையும் தின்று கொண்டு இருக்கிறது அடியில் இருக்கும் ஒரு மெய் .


அத்தனையும் நல்லாயிருக்கு தம்பி. இருந்தாலும் இது super.