மந்திர ஆசைகள்

6/30/2010

சொல்லாமலே

சொல்லிவிடு ஒருமுறையேனும்
காதலிக்கவில்லை  என்றாவது .
நொடிக்கு ஒருமுறை நிகழும்
மரணம் நிற்கும்
என்னுடன் நிரந்தமாக .

பேசும் கண்களை நீ வரமாய்
பெற்றதால் என்னவோ
ஊமையாய் போய் விட்டன
அத்தனை மொழிகளும் .

சொல்லிவிடு
காதலின் விலையை
செய்கூலி இன்றி தந்து
விடுகிறேன் சேதாரமாக
என் உயிரை

உன் மௌனத்தை
உடைக்கும் அணுகுண்டை
தேடி கொண்டு இருக்கிறேன்
என் காதலின் ஆய்வகத்தில் .


3 பதில் செப்பியவர்கள்:

வால்பையன் சொன்னது…

அருமையோ அருமை!

மந்திரன் சொன்னது…

ரொம்ப நன்றி வால்

குந்தவை சொன்னது…

அத்தனை வரிகளும் அருமையா இருக்கு தம்பி.
பெரிய கவிஞர் ஆயிட்டு இருக்கீங்க.