மந்திர ஆசைகள்

9/20/2010

நீ கேளேன்

என்னதான் நடக்குது . நான் தெரியாமத்தான் கேட்கிறேன் என்ன நடக்குது ? அரசியல் நடக்குதா இல்லை அராஜகம் நடக்குதா . அப்படி என்ன செய்து விட்டார் .என் கட்சி காரர் நயன்தாரா . எதோ கொஞ்சம் அப்படி ,இப்படி  ஆசைப்பட்டு பிரபுதேவாவை லவ் பண்ணிட்டு இருக்கார் . கல்யாணம் கூட பண்ணிக்க போறார் . பிடிச்சா , கலையான பந்தியில் உட்கார்ந்து ஒரு முக்கு முக்கிட்டு போக வேண்டியது தானே . அதுதானையா உலக வழக்கம்.

அதை விட்டுட்டு , சின்ன புள்ளத்தனமா , அடிக்க போறேன் , உதைக்க  போறேன் , கல்யாணத்தை நிறுத்தப் போறேன் அப்படின்னு சில எதிர் கட்சிகள் பீதியை கிளப்புறாங்க . கடுபேத்துறாங்க யுவர் ஆனர் .

எனக்கு  சுத்தி  வளைச்சி பேசத் தெரியாது . டைரெக்டா விசயத்திற்கு வரேன் .  நம்ம கைப்புள்ள பிரபு தேவா , பொண்டாட்டி இருக்கும் போதே  இன்னொருத்திக் கூட லவ் பண்ணி புதுசா கல்யாணம் பண்ணிக்க போறார் .    இதுல என்ன தப்பு ? இதே மாதிரி பொண்ணுங்களும் , புருஷன் இருக்கும் போதே  இன்னொருத்தனை லவ் பண்ணி புதுசா  கல்யாணம் பண்ணிக்கலாம் .  அப்படி பண்ணினால் இந்த நாடு ரொம்ப நல்லா விளங்கிடும் . இது தெரியாம சில நொன்னைகள்  , இது குத்தாமாம் , தப்பாம்  அப்படி இப்படி
குதிக்கிறாங்க .

இது ஒரு  காதல்  

இல்லை, இல்லை. 

கள்ளகாதல் 
இல்லை .. இல்லை 

தெய்வீக காதல்
 இல்லை . என்னடா நமக்கே டங்கு எப்படி ரோல் அவுதே . சரி விடுங்க உங்களுக்கு தெரியாத காதல் இல்லை . அதனால அதை உங்க முடிவுக்கே விடுறேன் .





1 பதில் செப்பியவர்கள்:

ருத்ர வீணை® சொன்னது…

உன்னை சொல்லி குற்றமில்லை.. என்னை சொல்லி குற்றமில்லை..
காலம் செய்த கோலமடி