tag:blogger.com,1999:blog-3052774070074136602023-06-15T15:01:44.991+05:30மந்திர ஆசைகள்விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்புமந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-305277407007413660.post-8559957916663126032011-08-06T23:17:00.000+05:302011-08-06T23:17:51.504+05:30அப்பாடக்கர் ஆண் மக்களே ...இது கண்டிப்பாக பெண்களுக்கான பதிவு இல்லை . வழக்கம் போல இது ஒரு புலம்பல் பதிவு தான் .சுற்றி வளைத்து பேச விரும்பலை.நான் டிரெக்டா கேட்குறேன் . நானும் கொஞ்ச நாளாவே பார்க்குறேன் .<br />
<br />
பெண்களே ஜாக்கிரதை ..<br />
வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் கதை ..<br />
பெண்களின் கவனத்திற்கு ..<br />
<br />
அப்படி , இப்படி ன்னு திடிரென பல பதிவுகள் . எல்லாமே பெண்களை காக்க, எழுதப்பட்ட பதிவுகள் . உண்மையில் இந்த பதிவுகள் சொல்லித்தரும் நிலையிலா பெண் பதிவர்கள் / இணைய விரும்பிகள் உள்ளார்கள் ? அவுங்க எப்பவுமே உசார் தான் தலைவா ..<br />
இன்னும் சொல்ல போனால் , அவுங்களுக்கு எதுவுமே தெரியாது என்று நினைப்புதுதான் அறியாமை , மொள்ள மாரித்தனம் . கேனத்தனம்..<br />
<br />
சாருவுக்கே சாறு எடுக்கும் நிலைக்கு பெண்கள் இருக்கும் போது ,அவுங்களுக்கு இந்த அட்வைஸ் எல்லாம் தேவையா ..பேசாமல் சாரு வுக்கு வேண்டுமானால் அட்வைஸ் கொடுக்கலாம் . (பெண்களை கரெக்ட் செய்வது எப்படி ?? ).என்னமா எமொசன்ஸ்(@!#!) கொடுத்து கெஞ்சியும் பாவம் சாரு வுக்கு வொர்க் அவுட் ஆகலை ..<br />
<br />
இணையத்துடன் தொடர்பிலாமல் இருக்கும் பெண்களுக்கு தான் விழிப்புணர்வு தேவை .. ஐயோ ஐயோ அதற்கும் எதாவது பதிவு எழுதாதீங்க.<br />
<br />
<br />
இந்த உலகில் கண்ணகியும் இல்லை , ராமனும் இல்லை என்பதுதான் உண்மை . எந்த அளவுக்கு நாம் ஒழுக்கமாக இருக்கிறோம் என்கிற விகிதாசாரம் வேண்டுமானால் மாறுமே தவிர , எவனும் எங்கும் முழுவதுமாக உண்மையாக இருப்பதில்லை . <br />
<br />
பெண்கள் இங்கு சாட் செய்து பிரச்சினையில் மாட்டிகொண்டார்கள் என்பது எல்லாம் வாதமே இல்லை . அவர்கள் நேரில் சந்தித்து பேசி இருந்தாலும் இதே பிரச்சினைதான் வரும் . காரணம் ஆண்கள் தான் தவிர ,இணையம் அல்ல . அட பாவிகளா ,உங்களை மாதிரியே என்னையும் பேச வச்சிடீங்களே..<br />
<br />
இணையத்தை தாண்டி பெண்களை காப்பாத்த ,முயற்சி பண்ண நாம் , என்ன செய்து இருக்கோம் என்று கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து விட்டத்தை வெறித்து பார்த்து யோசிச்சிட்டு அப்புறமா எதாவது எழுதுங்க .. நாங்களும் Me the first . சூப்பர் ,கலக்குங்க ..அப்படின்னு சொல்லி " இணைய நவீன பாரதி " என்ற பட்டமும் தருகிறோம் .. <br />
<br />
அது சரி , இப்போ நமிதா எந்த தமிழ் படத்துலேயும் நடிக்கலேயே , என்ன காரணமோ ?மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-305277407007413660.post-46947954233561464862011-05-07T20:40:00.000+05:302011-05-07T20:40:19.309+05:30இங்கு தேவதைகள் விற்கப்படுகிறார்கள் .விபச்சாரம் . ஒரு விபத்தால் சாரம் போனவர்களின் சாபம் . பலபேருக்கு இது உடலுறுவுக்கான கற்பக விருச்சம். இதன் உண்மையான முகத்தை பெரிய அளவில் நாம் உரித்து பார்த்தது இல்லை . அப்படி பார்க்க நமக்கு பயம் . ஏனெனில் நாம் விபச்சாரத்தை மனதளவில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நாளும் செய்து வரும் உத்தமர்கள் .<br />
<br />
சமீபத்தில் , பெங்களுரு பேருந்து நிலையத்திற்கு சென்று, வந்து கொண்டிருக்கும் போது , சில பெண்கள் அந்த இரவிலும் அவர்கள் செய்து கொண்டிருந்த அலங்காரமும் ,உடல் மொழியும் அவர்களை விபச்சாரிகள் என்று விளம்பரம் செய்து கொண்டு இருந்தது . சில விபச்சாரன்கள் அவர்களிடம் கண்ணால் ,கையால் பேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள் . இது எல்லாம் சுமார் 300 மக்கள் நடமாடி கொண்டு இருக்கும் ஒரு இடத்தில் சர்வ சாதாரணமாக ஓடிக் கொண்டிருக்கிறது . <br />
<br />
அந்த பெண்கள் எல்லாம் 15,17,18 வயதுக்குள் தான் இருப்பார்கள் . என் நண்பன் யார் கண்ணையும் பார்க்காதே . தலையை குனிந்து அப்படியே தாண்டி வந்து விடு என்றான் . எனக்கு புரியவில்லை . என்ன நடக்கிறது இங்கே ? இது இப்படிதான் இங்கு நடக்கும் . நீ மூடி கொண்டு போய் விடு என்ற மனப்பான்மையின் பாதிப்பு.<br />
<br />
விபச்சாரம் செய்பவர்கள் 2% என்றால் ,அதில் இருந்து அவர்களை மீட்பதில் என்ன பிரச்சினை . ? அங்கு தான் நம் உண்மையான மிருக முகம் மூடி கிடக்கிறது . விபசார பெண்களிடம் செல்பவர்கள் எல்லாம் திருட்டு தொழில் ,வெட்டு ,குத்து தொழில் செய்பவர்கள் என்று நீங்கள் சொன்னால் , உங்கள் உள் மனம் கூட எள்ளி நகையாடும் .<br />
<br />
நாம் தினமும் பார்த்து வணக்கம் செய்யும் பக்கத்துக்கு வீட்டுகாரர் , இல்லை நாம் நெருங்கிய , தூரத்து சொந்தமாக அல்லது நண்பனாக கூட இருக்காலாம் அந்த விபச்சாரன்களாக . இவர்களுடன் தான் நாம் வாழ்கிறோம் . இவர்கள் தான் நம் சொந்தங்கள் ,நட்புகள் .. <br />
<br />
டிவி யில் தோன்றும் மின் பிம்பங்களுடன் கூட கனவில் முயங்க நினைக்கும் நாம் எப்பேர்பட்ட உத்தமர்கள் . புரை ஓடிப்போன நாம் , நித்தியானந்தா ,பிரேமனந்தா எல்லாரையும் திட்டி விட்டு விட்ட இடத்தில இருந்து கனவில் தொடருவோம் ..<br />
<br />
<br />
விபச்சாரம் ஒரு தொழில் . உடல் பசியை போக்கும் ஒரு உத்தி . என்ன இருந்தாலும் மனிதனும் ஒரு மிருகம் தான் என்று வாதிட்டு வாதம் புரிய நினைப்பதெல்லாம் நமது ஒழுக்கமின்மையை ஒத்துக்கொள்ளும் பொது புத்தி தான் . <br />
<br />
<br />
<br />
ஒழுக்கத்தை நமக்கு பாட புத்தகத்தில் மட்டும் வைத்து தேர்வில் பரீட்சை செய்து பார்கிறார்கள் . எப்படி சொல்வது, நூறு விழுக்காடு மதிப்பெண் வாங்கிய எவராலும் சொல்ல முடியாது , தான் நல்லவன் என்று . <br />
<br />
நாம் புத்தனாக மாற வேண்டாம் . புத்தன் என்ற ஒருவன் இந்த மனித குலத்தில் தான் பிறந்தான் என்பதையாவது நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம் .மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-305277407007413660.post-15362032326056788662011-04-08T13:50:00.001+05:302011-04-08T17:31:35.423+05:30தொலைந்து போன நான்வெந்து தணியும் இந்த பதிவுலகில் , நானும் ஒரு பதிவர் என்று சொல்ல தைரியம் இன்றி தொலைந்து தான் போனேன் . எதை எழுதி என்னத்த கிழிக்க போகிறோம் என்று என்னை ஒரு சீர்த்திருத்த வாதியாய் கொண்டிருந்த பிம்பம் உடைந்தது கூட ஒரு காரணம்.<br />
எதற்க்காக எழுதுகிறோம் ?<br />
ஹிட் வாங்க .. <br />
பின்னூட்டம் வாங்க ..<br />
அங்கீகாரம் வாங்க ..<br />
<br />
இப்படி பலவற்றை நான் வாங்க முயற்சி செய்ததா ? <br />
இதில் எதுவுமே பெரியதாக வாங்க முடியவில்லை என்ற சுய பச்சத்தானமா ? சுயசொறிதல் செய்ய தெரியாத கோழையா ?<br />
<br />
இப்படி எல்லாம் கேள்வி எழுப்பி , சிந்தித்து பார்த்து ஆணியே புடுங்க வேண்டாம் என்று எல்லாத்துக்கும் ஒரு கும்பிடு போட்டு ஒதுங்கி போனேன் . <br />
<br />
எப்போதெல்லாம் வெறுமை வரும் போது, எதாவது கிறுக்கி தொலைலாம் என்ற எண்ணம் வருவது இயற்கை. என்னை புதுபித்துக் கொள்ள இந்த உலகம் எதையும் தர மனமில்லாத போது ,நான் தடுமாடுகிறேன் . Chat Box -ல் நண்பர்கள் எப்போதும் பச்சையில் ஒளிர்கிறார்கள் .<br />
<br />
How r U? <br />
What abt job ?<br />
great ..<br />
cool .lol ..<br />
I m fine .same .<br />
<br />
வார்த்தைகள் மாறினாலும் அர்த்தம் மாறவில்லை . சொல்லாமல் விலகி போதல் இப்போது நல்ல நாகரீகம் போல . தனிமை என்னை தத்து எடுக்கும் போது , என்னை உயிர் பிக்க என்ன செய்ய ?<br />
<br />
யாருக்காகவும் எழுத வேண்டாம் . எனக்காக , நானே என்னை திடப்படுத்தி கொள்ள எழுதலாம் என்று வந்து இருக்கிறேன் . <br />
<br />
பத்தோடு பதினொன்றாக என்னையும் கண்டு ஒதுங்கி செல்லுங்கள் . என்னை போன்ற விட்டில் பூச்சிகள் எப்போதும் பறந்து கொண்டு தான் இருக்கின்றன .மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-305277407007413660.post-36311599022010138962010-09-21T16:01:00.003+05:302010-09-21T16:04:27.483+05:30உழைப்பு<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 29px;"></span><br />
<div><span class="Apple-style-span" style="color: red;">டேய் பஷீர் , சீக்கிரம் ஒரு கொலை பண்ணிடுவேன் போல .??!!</span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div> ஹரி, நீ புரியும் படி பேசவே மாட்டியா?<br />
<br />
</div><div><span class="Apple-style-span" style="color: red;">மச்சி , இன்னைக்கி தாண்டா அப்பரைசல் சம்பளம் வந்துச்சு . 10% ஹைக் மட்டும் தான் போட்டு இருக்கானுங்க .இனிமே இவனுங்களை கண்ணுல விரலை விட்டு ஆட்டனும் டா </span>.<br />
<br />
</div><div>என்னடா சொல்ற ? 10% ஹைக் ? என்னாலையே தாங்க முடியலே . நீ எப்படிடா தாங்குற ?</div><div><br />
</div><div>உடைந்து போன மனங்கள் ஒன்றாக சொல்லும் ஒரே வாக்கியம் அங்கும் வந்தது .<br />
<br />
</div><div><span class="Apple-style-span" style="color: red;">கொய்யலா , டேய் பஷீர் , ஒரு குவார்ட்டர் சொல்லுடா .</span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div>ஹரி வேணாம் டா , அது பத்தாது , ஒரு ஹாவ் வாங்கிட்டு வரேன் . </div><div><br />
</div><div><div>பூஜை ஆரம்பமானது . புலம்பல்கள் , சலம்பல்கள் . மேனஜெரின் தூரத்து சொந்தம் கூட ஹரியின் வாயில் வந்து ,விழுந்து நொந்து போனது . </div><div><br />
</div><div>ஹரி ,என்னடா சீக்கிரம் கிளம்பிட்ட ?<br />
<br />
</div><div><span class="Apple-style-span" style="color: red;">செத்தான்டா அந்த மேனஜேர் .அவனுக்கு ஆப்பு ரெடி பண்ணத்தான் சீக்கிரம் போகிறேன் .</span></div><div><br />
</div><div><span class="Apple-style-span" style="color: red;">ஹாய் ராம்ஜி , எப்படி இருக்கீங்க ?</span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div>என்ன ஹரி , ஒரே சந்தோசமாய் இருக்கிற .. ஒ அப்பரைசல் சந்தோசமா .. எப்ப ட்ரீட்? .</div><div>இவன் ஒன்னுக்கு போனால் கூட ட்ரீட் கேட்கிற மேனஜேர் என்று மனதுக்குள் திட்டப்படி </div><div><span class="Apple-style-span" style="color: red;">உங்களுக்கு இல்லாமலையா , சீக்கிரம் வச்சிடுறேன் . சீக்கிரமாவே .</span></div><div><br />
</div><div><div>ஒரு சின்ன கேப்பிற்கு பிறகு ,</div><div>ஹரி , ஒரு ரெகுலர் வொர்க் தான் . நைட் 9 மணிக்கு , ஒரு con- கால் கிளைன்ட் கூட பண்ணிட்டு , code செக் அவுட் பண்ணி , பில்ட் பண்ணி சர்வரை ரெடி பண்ணி வச்சிரு . ஓகே ?<br />
<br />
</div><div><span class="Apple-style-span" style="color: red;">ராம்ஜி , இனிமே அதை ஸ்டெல்லா பண்ணட்டுமே </span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div><span class="Apple-style-span" style="color: blue;">what happened ?</span><br />
<span class="Apple-style-span" style="color: blue;"><br />
</span></div><div><span class="Apple-style-span" style="color: red;">அது என் வேலை கெடையாது . கொஞ்ச நாள் நான் செஞ்சேன் . இனி ஸ்டெல்லா செய்யட்டுமே</span> .<br />
<br />
</div><div><span class="Apple-style-span" style="color: blue;">That is impossible. She has family . You know ?</span><br />
<span class="Apple-style-span" style="color: blue;"><br />
</span></div><div><span class="Apple-style-span" style="color: red;">பேச்சுலர் அப்படின்னா அனாதைன்னு நெத்தியுல எழுதி ஒட்டிருக்கா என்ன ?</span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div>என்ன அப்பரைசல் சரியில்லன்னு கோபமா ?<br />
<br />
</div></div><div><div><span class="Apple-style-span" style="color: red;">இல்லை , நான் என் வேலையை மட்டும் பார்ப்பேன்னு சொல்ல வரேன் .</span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div>இல்லை , உனக்கு எதோ ப்ரோப்ளம் , வா பேசுவோம் ,<br />
<br />
</div><div><span class="Apple-style-span" style="color: red;">எனக்கு இண்டரஸ்ட் இல்லை .. </span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div><br />
</div></div><div><div>என்னடா ஹரி , இன்னைக்கு எப்படி போச்சு ?<br />
<br />
</div><div> <span class="Apple-style-span" style="color: red;">பஷீர் ,அதை ஏன் கேட்குற . வாயுல ஆப்பை மேனஜெருக்கு வச்சொம்ல . அவன் முகத்துல ஈ ஆடல . இன்னைக்கே கிளைன்ட் ராடு ஏத்திட்டான் . மூஞ்சு அவனுக்கு செத்துப் போச்சு . இனி ,அவனுக்கு தினமும் தீபாவளி தான் .</span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div>அப்படி போடு அருவாளை . உலக மகா கேப்மாரி நீ . உனக்கே அவன் அல்வா கொடுத்தா எப்படி ?.<br />
<br />
</div><div><span class="Apple-style-span" style="color: red;">சரி விடு ,விடு ,. ரொம்ப நேரமாச்சு . நம்ம அண்ணாச்சி மெஸ்சுக்கு போலாம் .</span></div><div><br />
</div><div><div><span class="Apple-style-span" style="color: red;">என்ன அண்ணாச்சி , தட்டு எடுக்கிற பய புதுசா இருக்கிறான் ?</span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div>ஒன்னும் இல்ல தம்பி , படிக்க பணம் இல்லை . நைட் வேலை செஞ்சி அந்த பணத்துல படிக்கிறேன்னு சொல்லி வந்தான் .அதான் போன போகட்டும் அப்படின்னு வச்சிகிட்டேன்.<br />
<br />
</div><div><span class="Apple-style-span" style="color: red;">நல்லா வேலை பார்கிறேன் இந்த பயப் புள்ள . என்னடா சொல்ற பஷீர் ?.</span></div><div><br />
</div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/TJiIcwPo-_I/AAAAAAAAARY/9JZPEH_LcGY/s1600/poorboy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/TJiIcwPo-_I/AAAAAAAAARY/9JZPEH_LcGY/s320/poorboy.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><span class="Apple-style-span" style="color: red;">எத்தனாவது டா படிக்கிற ?</span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div>எட்டாவது படிக்கிறேன் அண்ணா .நாளைக்கு பரிச்சை இருக்குது , சீக்கிரம் போகணும் அண்ணா .<br />
<br />
</div></div></div></div><div><div><span class="Apple-style-span" style="color: red;">சரி ,சரி சீக்கிரம் சாப்பிடுறோம் .</span></div><div><br />
</div><div>எல்லாரும் வெளியே வரும் போது,</div><div><span class="Apple-style-span" style="color: red;">என்னடா ,திருப்பி எங்கடா ஓடுற ? பரிச்சை இருக்குன்னு சொன்ன ?</span></div><div><span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div>ஒரு தட்டோட பின்னாடி ,லேசா கொஞ்சம் அழுக்கு இருக்குது அண்ணா .</div><div><br />
</div><div><span class="Apple-style-span" style="color: red;">டேய் ,அது பின்னாடி தாண்டா இருக்குது , யாருக்கு தெரிய போகுது ?</span></div><div><span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></div><div>அவன் சிரித்துக் கொண்டே, </div><div><span class="Apple-style-span" style="color: blue;"><i><u><b>எனக்கு தெரியுமே அண்ணே </b></u></i></span><br />
<span class="Apple-style-span" style="color: blue;"><i><u><b><br />
</b></u></i></span></div><div>-ஒரு சின்ன கீத உபதேசம் .</div></div>மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-305277407007413660.post-26362267181811228432010-09-20T18:11:00.000+05:302010-09-20T18:11:08.302+05:30நீ கேளேன்என்னதான் நடக்குது . நான் தெரியாமத்தான் கேட்கிறேன் என்ன நடக்குது ? அரசியல் நடக்குதா இல்லை அராஜகம் நடக்குதா . அப்படி என்ன செய்து விட்டார் .என் கட்சி காரர் நயன்தாரா . எதோ கொஞ்சம் அப்படி ,இப்படி ஆசைப்பட்டு பிரபுதேவாவை லவ் பண்ணிட்டு இருக்கார் . கல்யாணம் கூட பண்ணிக்க போறார் . பிடிச்சா , கலையான பந்தியில் உட்கார்ந்து ஒரு முக்கு முக்கிட்டு போக வேண்டியது தானே . அதுதானையா உலக வழக்கம்.<br />
<br />
அதை விட்டுட்டு , சின்ன புள்ளத்தனமா , அடிக்க போறேன் , உதைக்க போறேன் , கல்யாணத்தை நிறுத்தப் போறேன் அப்படின்னு சில எதிர் கட்சிகள் பீதியை கிளப்புறாங்க . கடுபேத்துறாங்க யுவர் ஆனர் .<br />
<br />
எனக்கு சுத்தி வளைச்சி பேசத் தெரியாது . டைரெக்டா விசயத்திற்கு வரேன் . நம்ம கைப்புள்ள பிரபு தேவா , பொண்டாட்டி இருக்கும் போதே இன்னொருத்திக் கூட லவ் பண்ணி புதுசா கல்யாணம் பண்ணிக்க போறார் . இதுல என்ன தப்பு ? இதே மாதிரி பொண்ணுங்களும் , புருஷன் இருக்கும் போதே இன்னொருத்தனை லவ் பண்ணி புதுசா கல்யாணம் பண்ணிக்கலாம் . அப்படி பண்ணினால் இந்த நாடு ரொம்ப நல்லா விளங்கிடும் . இது தெரியாம சில நொன்னைகள் , இது குத்தாமாம் , தப்பாம் அப்படி இப்படி<br />
குதிக்கிறாங்க .<br />
<br />
<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 29px;">இது ஒரு காதல் </span><br />
<div>இல்லை, இல்லை. </div><div><br />
</div><div>கள்ளகாதல் </div><div>இல்லை .. இல்லை </div><div><br />
</div><div>தெய்வீக காதல்</div><div> இல்லை . என்னடா நமக்கே டங்கு எப்படி ரோல் அவுதே . <span class="Apple-style-span" style="line-height: 29px;">சரி விடுங்க உங்களுக்கு தெரியாத காதல் இல்லை . அதனால அதை உங்க முடிவுக்கே விடுறேன் .</span></div><br />
<br />
<br />
<br />
<span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 13px;"></span></span>மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-305277407007413660.post-33431047708302976982010-09-16T19:15:00.000+05:302010-09-16T19:15:18.376+05:30கல்லறை வரை காதல் ஆதலால் காதலி<br />
------------------------------ <br />
<br />
கண்களின்றி <br />
உன்னால் காண முடிந்தால் ,<br />
வார்த்தைகளின்றி <br />
உன்னால் பேசப் முடிந்தால் ,<br />
காற்றின்றி <br />
இதயத்தால் சுவாசிக்க முடிந்தால் ,<br />
உணவின்றி <br />
உன்னால் புசிக்க முடிந்தால் <br />
நீயும் காதலிக்கிறாய் .<br />
சொர்கத்தின் கதவுகளை ,<br />
நரகத்தில் தேடுவதைப் போல .<br />
இனி ,<br />
நண்பர்கள் தான் தெய்வம் <br />
பெற்றோர்கள் தான் எமன் .<br />
தாய்மொழியும் உன்னிடம் தடுமாறும் ,<br />
வெட்கத்தை விலைக் கொடுத்து வாங்குவாய் .<br />
வாழ்ந்து கொண்டே இறக்க தொடங்குவாய் .<br />
வரமாய் நினைத்து சாபம் பெறுவாய் .<br />
ஆனால் ,<br />
முத்தத்தின் ஈரம் காயின் முன் ,<br />
தோல்வி உன்னை தத்து எடுத்தால் ,<br />
நடமாடும் கல்லறைகளில்<br />
நீயும் ஒருவன் . <br />
<br />
<br />
பொய் <br />
--------------<br />
ஷாஜகான் கூட <br />
எனக்கு பிச்சைகாரன் தான் .<br />
என்னை இங்கு <br />
ஒரு தாஜ்மகால் அல்லவா<br />
காதலிக்கிறது.மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-305277407007413660.post-66255525587331879042010-06-30T00:06:00.000+05:302010-06-30T00:06:08.512+05:30சொல்லாமலேசொல்லிவிடு ஒருமுறையேனும் <br />
காதலிக்கவில்லை என்றாவது .<br />
நொடிக்கு ஒருமுறை நிகழும் <br />
மரணம் நிற்கும் <br />
என்னுடன் நிரந்தமாக .<br />
<br />
பேசும் கண்களை நீ வரமாய் <br />
பெற்றதால் என்னவோ <br />
ஊமையாய் போய் விட்டன <br />
அத்தனை மொழிகளும் .<br />
<br />
சொல்லிவிடு <br />
காதலின் விலையை <br />
செய்கூலி இன்றி தந்து<br />
விடுகிறேன் சேதாரமாக <br />
என் உயிரை <br />
<br />
உன் மௌனத்தை <br />
உடைக்கும் அணுகுண்டை <br />
தேடி கொண்டு இருக்கிறேன் <br />
என் காதலின் ஆய்வகத்தில் .மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-305277407007413660.post-50461211372612734292010-06-28T22:00:00.000+05:302010-06-28T22:00:00.898+05:30தீனிஎத்தனை முறை கொலை செய்தாலும் சலிக்க வில்லை . ரத்தம் பார்க்காமல் சித்தம் தணியாது . மீண்டும் இன்னொரு கொசு .<br />
<br />
<br />
<br />
<br />
இன்னொரு பொய் . ஆயிரம் பொய் கடந்தால் என்ன ? அத்தனையையும் தின்று கொண்டு இருக்கிறது அடியில் இருக்கும் ஒரு மெய் .<br />
<br />
<br />
<br />
தமிழை தமிழில் பேசினேன் .புரியவில்லையாம் . <br />
எனக்கு புரியவில்லை .யார் தமிழன் ? <br />
<br />
<br />
வெட்கத்தை கேட்டேன் . கொடுக்கிறேன் என்றாள் . எனக்கு தெரியவில்லை பதிலுக்கு என் கண்களை கேட்பாள் என்று . <br />
<br />
<br />
மௌனத்தின் மொழியை புரிந்துக்க் கொள்ள அதனையை கொலை வல்லவா செய்ய வேண்டி யுள்ளது . <br />
<br />
<br />
காதலை தின்று காமத்தில் கற்ப்பை வளர்க்கும் காதலர்களுக்கும் வழி சொல்கிறாள் மெரினாவில் கண்ணகி . <br />
<br />
<br />
உலகின் செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாம் . மரணத் தேதி சொல்லப்பட்ட இன்னொரு தாய் .மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-305277407007413660.post-70222026252562657182010-06-03T11:48:00.001+05:302010-06-03T11:52:19.985+05:30நர்சிம் வாழ்க<span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 29px;"></span><br />
<div>இப்படி தலைப்பு வைக்கவே பெரிய தைரியம் வேண்டும் போல .</div><div> அப்பாடி ? நர்சிம்க்கு இவ்வளோ எதிரிகளா ? </div><div><br />
</div><div>நானும் அந்த பூக்காரி கதையை படித்தேன் . ஒரு எழவும் புரியல . அப்புறம் தான் அதன் பின்னர் இருந்த அரசியல் புரிந்த்தது . </div><div><br />
</div><div>இதுவரை பதிவர்களை , பதிவர்களாக மட்டுமே பார்த்து வந்த எனக்கு இப்போது அவர்களின் சாதி சாயமும் தெரிகிறது . இருவரின் தனி பட்ட வெறுப்புக்கு ஜாதி , பெண்ணியம் , ஆணாதிக்கம் என எல்லா பூக்களும் புனைய பட்டது .</div><div><br />
</div><div><div>நரசிம் ஒரு ஆம்பிளையை இப்படி எழுதி இருந்தால் , அது ஒரு காமெடி பதிவாக இருந்து இருக்கும் . நல்ல வேளை, சந்தன முல்லை பெண்ணாக இருந்து விட்டார் . தன் தவறுக்கு நரசிம் மன்னிப்பு கேட்டதே ஒரு பெரிய வெற்றியாக பலர் கொண்டாடுகிறார்கள் . </div><div><br />
</div><div>ஆமாம் , இதற்க்கு என்ன காரணம் ? ஜாதி வெறி என வினவு கூறுகிறார் . ஆணாதிக்கம் என பல பதிவர்கள் கூவுகிறார்கள் .. எது உண்மை என நர்சிம்க்கு மட்டுமே தெரியும் . </div><div><br />
</div><div><div>ஆனால் இது வரை பதிவர்கள் பற்றிய ஒரு நல்ல கண்ணோட்டம் தலை கீழாக மாறி இருக்கிறது . பதிவர் ஒருவருக்கு மருத்துவ செலவுக்கு யார் என்று தெரியாமல் பணம் அனுப்பிய வர்களை பார்த்த போது , எப்படி இவ்வாறு செய்ய தோன்றுகிறது என வியந்து இருக்கிறேன் . </div><div><br />
</div><div>என்னுள் பெண்ணியம் பற்றிய ஒரு ஆழ்ந்த பார்வைகளை ஏற்படுத்தியது இந்த பதிவர்கள் தான் . ஆனால் இப்போது அந்த பூக்கரியை விட மிக கேவலமாக நடந்து கொண்டது </div><div><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 29px;">நர்சிம்</span> மட்டும் அல்ல , நீங்களும் தான் .</div><div><br />
</div><div>தன்னையும் , மற்றவர்களையும் காட்டி கொடுத்த <span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 29px;">நர்சிம்</span> வாழ்க .</div><div><br />
</div><div>சண்டை போட்டுக் கொள்ளுங்கள் . ஆனால் பதிவுலகம் என்ற இந்த வீட்டை எரித்து விடாதீர்கள் . </div></div><div><br />
</div></div>மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-305277407007413660.post-52460646563307184162010-05-11T16:34:00.000+05:302010-05-11T16:34:36.045+05:30மொக்கையை தாண்டி வருவாயோ ???மொக்கை பதிவை தேடி நாம் போக கூடாது .அதுவா நடக்கணும் . நம்மை தலைகீழா போட்டுத் தாக்கனும் . அடி பின்னனும் . எப்பவுமே பயங்கரமாக வெறுப்பு ஏற்றணும் . அது தான் உங்களுக்கு இப்ப நடந்து கிட்டு இருக்கு .<br />
<br />
Actually இந்த பதிவை நீங்க தேர்ந்து எடுக்கல . அதுவா நடந்துச்சு . அதான் மந்திரன் பதிவு . அவ்வளவு மொக்கை . கேவலமா எழுதுறான் .But மந்திரன் கிட்ட ஒரு மயக்கம் இருக்கு .<br />
<br />
ஏய் , இன்னுமா தொடர்ந்து படிக்கீறீங்க ? .<br />
<br />
நான் சீக்கிரம் ஒரு நல்ல பதிவை எழுதுறேன் .அதை பத்தி என்னோட அடுத்த பதிவில் சொல்லுறேன் . திரும்பி வந்து படிங்க .<br />
<br />
நீங்க : போடா பன்னாடை ..<br />
<br />
நான் : Thank you <br />
<br />
நீங்க : வேணாம் டா <br />
வேணாம் டா , <br />
பிரச்சனை ஆய்டும் .ஆமாம் உன் மனசுல இந்த பதிவை பத்தி என்ன சொல்லுது ? <br />
<br />
நான் : சூப்பர் சூப்பர் அப்படின்னு சொல்லுது<br />
<br />
நீங்க : நான் வேறு ஒரு நல்ல பதிவை படிக்க போறேன் . இது சரிபடாது மந்திரன் .<br />
<br />
நான் : பிம்பில்லிக்கே பிலேப்பி ..<br />
<br />
நீங்க : எவ்வளோவோ நல்ல பதிவு இருக்க ,நான் ஏன் இந்த<br />
பதிவை படிக்கிறேன் ?<br />
<br />
Bibliography :<br />
<br />
<object width="560" height="340"><param name="movie" value="http://www.youtube.com/v/d3m8GltEN40&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/d3m8GltEN40&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"></embed></object>மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-305277407007413660.post-68069918593954775172010-04-01T19:54:00.000+05:302010-04-01T19:54:42.128+05:30கடவுள் முரளி<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S7Ssbeh3ZoI/AAAAAAAAARI/yc_5oVrZF4w/s1600/murali.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="237" src="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S7Ssbeh3ZoI/AAAAAAAAARI/yc_5oVrZF4w/s400/murali.jpg" width="400" /></a></div><br />
என்னத்த சொல்ல????<br />
இதுவும் கடந்து போகும் அப்படின்னு சொல்லிக்கிட்டு புள்ள குட்டிங்களை போய் படிக்க வைக்கிற வழியை பாருங்க ..மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-305277407007413660.post-14655556019848189402010-03-09T16:08:00.001+05:302010-03-09T17:28:55.205+05:30எனக்கு கடவுள் வேண்டும்பெரியாரின் பக்தகோடிகளே என்னை ஆள் வைத்து திட்டுவதற்க்கோ , பின்னுட்டத்தில் பின்னி எடுப்பதற்கோ நானோ , இந்த பதிவோ வொர்த் இல்லை என்பதை எச்சரிக்கையாக சொல்லிகொள்கிறேன் .(நான் என்னை சொல்லிகிட்டேன் )<br />
<br />
நான் கடவுள் மறுப்பாளான் தான் . ஆனால் "ஆம்புளைக்கும் ஆம்புளைக்கும் பொறந்தவன் தான் ஐயப்பன் " என்று சொல்லும் கூட்டத்தில் நான் ஒருத்தன் அல்ல . இந்த பதிவுலகத்தில் கடவுள் மறுப்பு என்பது விவாத பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறது .<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S5YkyBMSXWI/AAAAAAAAAQw/ZN4fXDpQwf8/s1600-h/SAUDI-RELIGION-ISLAM-HAJJ.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S5YkyBMSXWI/AAAAAAAAAQw/ZN4fXDpQwf8/s320/SAUDI-RELIGION-ISLAM-HAJJ.jpg" /></a></div><br />
பதில் தெரியாத கேள்விகளை கேட்டு ,<br />
"உன்னை விட நான் அறிவாளி .பார், என்னிடம் நீ தோற்று விட்டாய் " என்று மெச்சிக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள் . <br />
<br />
எனக்கு கடவுளை பிடிக்காது . பெரியாரின் கருத்துகள் பிடிக்கும் . ஆனால் அவரின் சில கருத்துகளை என்னால் ஏற்க இயலாது . அவரே கூறியது போல "நான் சொல்லவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயம் இல்லை . உங்களுக்கு தேவையானதை பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ளுங்கள் " .இதை நான் அப்படியே கடைபிடிக்கிறேன் .<br />
<br />
கடவுள் மறுப்பாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ? , முழுமையாக அவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் தானா ? . இதில் 3௦% பேர் , நான் அந்த புத்ததகத்தில் படித்தேன் ,இந்த புத்ததகத்தில் படித்தேன், அதான் எனக்கு கடவுளை பிடிக்காது . இவர்களுக்கு இன்னொரு புத்தகம் போதும் கடவுள் இருக்கிறார் என்று நம்ப வைப்பதற்கு .<br />
<br />
சிலர் அதீத வெறுப்பால் கடவுள் மறுப்பாளர்கள் என சொல்லிகொள்கிறார்கள் . அவர்கள் கேட்டதோ ,இல்லை அவர்களுக்கு பிரியமான ஒன்றை இழந்ததலோ இப்படி மாறுகிறார்கள் . இவர்கள்தான் விவாதத்தில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள் . திடிரென இவர்களுக்கு பிடித்தமானவருக்கு எதாவது ஆகிவிட்டால் , மீண்டும் கடவுளை நாடி செல்வார்கள் என்பது உறுதி .<br />
<br />
இவர்களை எல்லாம் தாண்டி ஒரு சிறு கூட்டம் உள்ளது . அது தான் உண்மையில் கடவுள் மறுப்பை எந்த வித புறத் தூண்டல் இன்றி தனக்கு தோன்றிய கேள்விகளுக்கு விடையாக கடவுள் மறுப்பை தேர்ந்து எடுத்துக் கொண்டவர்கள் .இந்த கூட்டத்தில் கலக்கவே நானும் அனு தினமும் ஏன் கேள்வி தீயை அணையாமல் பார்த்துக் கொள்கிறேன் .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S5YkwnBoAXI/AAAAAAAAAQo/-gAy8Njyxas/s1600-h/sivan.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S5YkwnBoAXI/AAAAAAAAAQo/-gAy8Njyxas/s320/sivan.jpg" width="267" /></a></div>எனக்குள் சில வருடங்களுக்கு முன் தோன்றிய கேள்விகளை பல நுறு பேருகளிடம் (பதிவுலகில் கூட ) கேட்டு அவர்களின் தேடுதலை உணர்ந்து இருக்கிறேன் . என்னை பொறுத்தவரை ,கடவுள் என்ற கோட்பாடுகளில் அடங்கி , நான் கடவுளாக பார்ப்பது இயற்கையை மட்டுமே . மற்ற எந்த மத கடவுளையும் என் மனம் ஏற்க்க மறுக்கிறது. <br />
<br />
இப்படி வாய் கிழிய பேசுற நீ , ஏன் இப்படி "எனக்கு கடவுள் வேண்டும்" என்று தலைப்பு வைத்தாய் வெண்ணை , என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது . அதான் சொல்லுவோம்ல ..<br />
<br />
இனி நான் சொல்வதை மந்திரனாக மட்டுமே பார்க்க வேண்டும் .<br />
இது என் தனிப்பட்ட பாதிப்பு . பார்வை . <br />
<br />
ஒரு வேளை, கடவுள் என்ற கொள்கை இல்லை என்றால் எப்படி இருந்திருக்கும் இந்த உலகம் ? . பெரியார் என்ற ஒருவர் நமக்கு கிடைத்து இருக்க மாட்டார் .அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .<br />
<br />
சாமிக்கு என்று சொல்லி விரதம் இருந்து , வடை சுடும் அம்மாவிற்கு தெரியாமல் அதனை திருடி திங்கும் திரில் எனக்கு கிடைத்து இருக்காது . அதில் தம்பிக்கு கொஞ்சம் லஞ்சம் கொடுத்து , அவனையும் திருட சொல்லி , அதே சமயம் அம்மாவிடம் போட்டுக் கொடுத்து பின் சிரிக்கும் அந்த வில்லன் சிரிப்பு எனக்கு தெரியாமல் போயி இருக்கும் .அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .<br />
<br />
சாமிக்கு என்று சொல்லி , தலை கூட துவட்டமால் சாமிக்கு படையல் செய்ய அம்மா , காய்கறி வெட்டும் போது, அம்மா பாவம் என்று சொல்லி என் சின்னக் கைகளால் தலை துவட்டி விடும் போது . அம்மா , "என் செல்லம் . இப்படி வாடா" என்று சொல்லி கொடுக்கும் அந்த முத்தம் கிடைத்து இருக்காது.அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .<br />
<br />
தீபாவளி , பொங்கல் அன்று தான் வித வித சமையல் ,சக்கரை பொங்கல் , பட்டாசு அது , இது என்று ஒரு சந்தோஷ மயக்கம் இருக்கும் . எப்போது வேண்டுமானாலும் ,சக்கரை பொங்கல் சாப்பிடலாம் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் சக்கரை பொங்கல் கூட தினம் சாப்பிடும் இட்லி போல மதிப்பிழந்து இருக்கும் . பண்டிகைகள் எந்த மூட நம்பிக்கையின் பெயரால் இருந்தாலும் அது குழந்தைகளுக்கு தரும் சந்தோசம் தனி. அதற்காக எனக்கு கடவுள் வேண்டும் . <br />
<br />
முதுமையின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு , வறுமையின் விளிம்பில் வாடுபவர்களுக்கு சமுதாயம் தந்த கொடை ,"தனிமை" . பேசக் கூட யாரும் இல்லாத அனாதைகளாக திரியும் அவர்களுக்கு கல் என்றாலும் , கடவுள் சிலை முன் மண்டியிட்டு விழியோரம் கண்ணீரோடு முறையிடும் அவர்களுக்கு சிறு பாரம் மனதில் குறைந்தால் அந்த கடவுள் வேண்டும் எனக்கு .<br />
<br />
கடவுள் நம்பிக்கை இல்லை எனில் தமிழ் நாட்டில் எந்த கோவில்களும் இல்லை. அப்படி எனில் ,நான் எங்கு போயி ராஜா ராஜா சோழனை பற்றி வியப்பது ? என் மூதாதையரின் கலை தாகத்தை எப்படி சொல்வது மற்றவர்களுக்கு ?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S5YkzbeM0mI/AAAAAAAAAQ4/7F0jSQrhNdE/s1600-h/jesus1230656155.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S5YkzbeM0mI/AAAAAAAAAQ4/7F0jSQrhNdE/s320/jesus1230656155.jpg" width="260" /></a></div> எனக்கு மாதா கோவில் குளிர்ச்சி பிடிக்கும் . அதன் அமைதிக்கு நான் அடிமை . ஒரு பொம்மைக்கு கட்டு பட்டு எப்படி ஒரு மனித கூட்டம் அமைதியாக செல்கிறது என்ற ஆச்சர்யம் வேண்டும் எனக்கு . நான் கோவில்களில் கடவுளை காண்கிறேன் . ஆம் , கடவுளை படைத்த மனித கடவுள்களை காண்கிறேன் . அவர்களின் உழைப்பை வியக்கிறேன் . இதற்காக எனக்கு கடவுள் வேண்டும் . <br />
<br />
குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை .<br />
நான் திராவிடன் இல்லை .<br />
ஆரியன் இல்லை .<br />
மனிதன் .மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-305277407007413660.post-83570354029956555292010-03-05T15:29:00.000+05:302010-03-05T15:29:48.700+05:30வடிவேலு -சாப்ட்வேர் வாழ்க்கைநமக்கு தெரிந்த வடிவேலு வசனங்கள் எப்படி நச்சுன்னு பொருந்துது பாருங்க ..<br />
<br />
<b><span style="color: blue;">Login : </span></b>சொல்லவே இல்லை<br />
<br />
<b><span style="color: blue;">Training :</span></b> முடியலே<br />
<br />
<b><span style="color: blue;">New product : </span></b>உக்காந்து யோசிபன்களோ<br />
<br />
<b><span style="color: blue;">Concall -</span></b> <span id="TRN_61">Why</span> blood same blood..<br />
<br />
<b><span style="color: blue;">Review -</span></b> இப்பவே கண்ண கட்டுதே <br />
<br />
<b><span style="color: blue;">Daily report - </span></b>எதையுமே பிளான் பண்ணாம பண்ணகூடாது<br />
<br />
<b style="color: blue;">Commitment - </b>ஒபெநிங் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிஷிங் சரி இல்லையேப்பா<br />
<br />
<b><span style="color: blue;">Project manager -</span></b> ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி<br />
<br />
<b><span style="color: blue;">Regional Project Manager </span></b>- என்ன வைச்சு காமெடி கிமெடி பண்ணலையே <br />
<br />
<b><span style="color: blue;">HR Manager -</span></b> கிளம்பிடங்காய கிளம்பிடங்காய <br />
இந்த கோட்டை தாண்டி நீயும் வரகூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சாத்தான் இருக்குனும்<br />
<br />
<b><span style="color: blue;">Supply Chain Manager -</span></b> வேணா வலிக்குது அழுதரிவேன் ,ஒரு சின்ன புறாவுக்காக போரா ! பெரிய அக்கபோராகவா இருக்கு<br />
<br />
<span style="color: blue;">Sales Manager - </span>நா ரௌடி நா ரௌடி நா ரௌடி நா ஜெயிலுக்கு போறேன் நா ஜெயிலுக்கு போறேன் நா ஜெயிலுக்கு போறேன்<br />
<br />
<b><span style="color: blue;">Marketing Manager </span></b>-பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு<br />
<br />
<b><span style="color: blue;">Finance Manager </span></b> - என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லீடான்யா<br />
<br />
<b><span style="color: blue;">Circle Business Head </span></b> - பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்கு<br />
<br />
<b><span style="color: blue;">Promotion -</span></b> வரும் அனா வராது<br />
<br />
கடைசியா .. <br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
'<br />
<br />
<b style="color: red;">Customer-</b> மாப்பு .... வச்சிட்டான்யா ஆப்பு<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<i style="color: black;"><span style="font-size: x-small;">டிஸ்கி : ஒரு மெயிலில் இருந்து சுட்டது . தமிழ் மொழி பெயர்ப்பு ,எடிட்டிங் மட்டுமே என் முயற்சி . </span></i>மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-305277407007413660.post-68340033823668659202010-03-03T12:29:00.004+05:302010-03-03T12:31:06.475+05:30நித்தியானந்தா ,"ர" நடிகை மற்றும் பலர்உலக தொலைக்கட்சிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும்<br />
"பாப்பா போட்ட தாழ்பாள்" என்ற படத்தில் சுவாமி நித்தியானந்தா தன் வசிகர சிரிப்பால் நம் உள்ளம் கவர்ந்து உள்ளார் . "ர" நடிகை ,அவர்கள் தன் நடிப்பு திறன் அனைத்தையும் அப்படியே தந்து உள்ளார் . <br />
<br />
படத்தில் இருந்து சில காட்சிகள் .<br />
<br />
<span style="color: blue;">நித்தி :</span> பெண்ணே , அடி பெண்ணே <br />
<br />
<span style="color: red;">"ர" நடிகை :</span> சுவாமி , எந்தன் சுவாமி .<br />
<br />
<span style="color: blue;">நித்தி :</span> உலக வாழ்க்கையில் எந்த பற்றுதலும் இருக்க கூடாது அன்பே .<br />
<br />
<span style="color: red;">"ர" நடிகை :</span> சென்ற வாரம் , நீங்கள் "ப" நடிகையுடன் இருந்ததை பற்றி சொல்கிறீர்களா , சுவாமி .<br />
<br />
<span style="color: blue;">நித்தி :</span> க க க போ <br />
<br />
<span style="color: blue;">"ர" நடிகை :</span> தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . <br />
<br />
<span style="color: blue;">நித்தி : </span>சகியே , உனக்கு என்ன வேண்டும் ,கேள் .<br />
<br />
<span style="color: red;">"ர" நடிகை : </span> நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் . <br />
<br />
<br />
<span style="color: blue;">நித்தி : </span>த தா ஸ் து ...<br />
<br />
<span style="color: blue;">நித்தி :</span> நான் பெண்களுக்கு சம மரியாதை கொடுப்பவன் ,அதான் <br />
<br />
<span style="color: red;">"ர" நடிகை :</span> அதான் தெரிகிறதே , சுவாமி .<br />
<br />
<span style="color: blue;">நித்தி :</span> புலன் அடக்கம் முக்கியம் பெண்ணே . <br />
<br />
<span style="color: red;">"ர" நடிகை :</span> சுவாமி , விளக்கை அணைக்க வேண்டுமா ?<br />
<br />
<span style="color: blue;">நித்தி :</span> அதற்க்கு முன் , இமயமலையில் இருந்து கொண்டு வந்த அந்த மாத்திரை எங்கே கண்ணே ?<br />
<br />
<span style="color: red;">"ர" நடிகை : </span> அது எதற்கு சுவாமி ?<br />
<br />
<span style="color: blue;">நித்தி :</span> அது குண்டலினி சக்தியை தூண்டி ,<br />
<br />
<span style="color: red;">"ர" நடிகை : </span> அப்படி எனில் ,தங்களுக்கு 4 ,5 தேவை படும் என்று நினைக்கிறன் சுவாமி .<br />
<br />
படத்தின் பின்னணி இசை மெய் சிலிர்க்க வைக்கிறது . அதுவும் அந்த " கட்டி புடி , கட்டி புடிடா " என்ற பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடல மாற வாய்ப்புஇருக்கிறது . <br />
<br />
இப்படி படம் முழுவதும் யதார்த்தம் குவிந்து கிடக்கிறது . குமுதத்தில் "கதவை மூடு , கேமரா வரட்டும்" என்ற தலைப்பில் இந்த படத்தை பற்றிய விமர்சனங்கள் குவிந்து கிடக்கின்றன . இப்படத்திற்கு டிக்கெட் கிடைப்பது சற்று கடினமே .<br />
<br />
திருட்டு வி சி டி , டி வி டி போன்றவறில் மட்டும் இப்படத்தை பார்க்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன் .மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-305277407007413660.post-24799742968586880472010-02-25T14:26:00.000+05:302010-02-25T14:26:50.317+05:30பதின்மம்என்னையும் தொடர் பதிவு எழுத சொல்லி மேலும் பாவம் சேர்க்கும் <a href="http://meenthulliyaan.blogspot.com/">மீன்துள்ளியானுக்கு </a>என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் . சரி இப்படி சொல்லி தப்பிக்க முடியாது என்று தெரியும் . ஆனால் என்ன எழுதுவது ? என் பதின்ம வயது அனுபவத்தை தெரிந்துக் கொள்ள வேண்டியது உலகின் முக்கிய கடமை ஆதலால் தொடர்கிறேன் .<br />
<br />
சினிமாக்களில் வருவானே கதாநாயகன் ,அவன் நமக்கு முக்கியம் இல்லை அவன் கூட சில அல்லகைகள் கடைசி வரை அல்லகைகலாக இருக்குமே அந்த வகை நான் . ஆனால் நான் கொஞ்சம் ஸ்பெஷல் . ஹீரோவிற்கு பாடத்தில் சந்தேகம் வந்தால் மட்டுமே உதவும் குணசித்திர வேஷம் எனக்கு .<br />
<br />
பருவ கிளர்ச்சிகளுக்கு துளியும் இடம் தராமல் வாழ்ந்து வந்த வாழும் சரித்திரம் நான் . நம்புக்கப்பா . ஏனென்றால் எனக்கு சொல்லப்பட்ட , படித்துவுடன் கெடைக்கும் வேலைகள் மூன்று .<br />
<br />
<b>டாக்டர் , இஞ்சினியர் , பொட்டலம் போடும் மளிகை கடை தொழிலாளி .</b><br />
<br />
எப்போதெல்லாம் 95% இருந்து 85% என்னுடைய மதிப்பெண் குறைகிறதோ அப்போதெல்லாம் இந்த மூன்றாவது வேலைத்தான் கிடைக்கும் என்று தினமும் ,தின நொடியும் அர்ச்சிக்கப்பட்டது . மளிகை கடையில் வேலை பார்பவர்கள் எல்லாரும் 85% வாங்கியவர்கள் போல என்று நான் வருத்தப்பட்டது உண்டு .<br />
<br />
பொதுவாக அந்த வயதில் , பாராட்டுக்காக முழு மனதும் அரிக்கும் . என்ன செய்வது ?, ஆசியர்கள் எல்லாரும் 1,2,3 இடங்களில் வரும் மாணவர்களை தான் பாராட்டுவார்கள் . ஆனால் என்னை போன்ற 7,8 வது இடங்களில் வருபவனை இந்த உலகம் தன் புறங்கையால் தள்ளித்தான் விடும் .<br />
<br />
ஏதாவது கூட படிக்கும் பெண்களுடன் ஒரு வார்த்தை பேசினால் மனசு அப்படி அடித்துக்கொள்ளும் . ஆண்ட்ரோஜென் ,ஈஸ்ட்ரோஜென் கெமிஸ்ட்ரி என்று அமரர் சுஜாதா சொல்லியவாறு எல்லாம் தாறுமாறாக வேலை செய்தது .<br />
<br />
என்ன பிரயோஜனம் , ம்கும் ..முக்கும் . விடுங்க பாஸ் .<br />
<br />
இந்த பொண்ணுகளே இப்படித்தான் என்று புலம்பிவிட்டு நாட்டமையாக வலம் வந்து கொண்டு இருந்தேன் . <br />
<br />
திட்டுகள் மட்டுமே பரிசாக கிடைத்த ஒரு நாளில் , பள்ளி ஆண்டு விழா . பக்கத்தில் இருக்கும் ஹீரோவிடம் நான் சொன்னேன் ,நானும் +2 வில் பரிசு வாங்குவேன் என்று .<br />
<br />
<i><b>போடா , போ , எந்த படத்துல இந்த காமெடி , </b><b>சொல்லவே </b></i><i><b> வில்லை </b></i>என்று சிரிப்பு . உள்ளுக்குள் நொறுங்கித்தான் போனேன் .<br />
<br />
தொடையை தட்டி பேச நான் ஒன்றும் ஹீரோ இல்லையே . கண்ணீரை கண்ணுக்குளே சிறை வைத்தேன் . அது வெளியேறியது +2 வில் நான் கலெக்டரிடம் தங்க மெடல் வாங்கும் போது தான் . பரிசு என்ற கானல் நீர் முதன் முதலில் என் கையில் விழுந்தது .<br />
<br />
பள்ளி கூடத்து நட்பு என்பது பருவ பெண்ணை பார்ப்பது மாதிரி . எப்போதும் மகிழ்ச்சித்தான் , சிரிப்புதான் . கிளர்ச்சித்தான் . ஆனால் அது பின்னர் நிலைக்க முடியாமல் போவதற்கும் அதுவே காரணமாகிறது . இப்போதும் எங்கு பார்த்தாலும் பேசிக் கொள்கிறோம் ,ஆனால் மனதில் ஒரு மெல்லிய திரையோடு .<br />
<br />
<br />
கல்லுரி கால வாழ்க்கை குணசித்திர வேசத்தில் இருந்து இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக மாற்றியது .ஆனால் இன்னும் ஹீரோவாக முடியவில்லை . அரசியல் , அரசியல் அதை நான் கற்றுக்கொண்டது கல்லூரியில் தான் . <br />
<br />
பொதுவாக கல்லூரியில் இரண்டு குருப்புத்தான் . ஒன்னு கடலை போடும் , இன்னொன்று கடலை போடாது .என்னென்றால் எங்களுக்கு தெரியாது , முடியாது .<br />
<br />
நான் இரண்டாவது குருப் . ஒரு சின்ன ரவுடியாக வலம் வரும் ஆசை கொஞ்சம் நடந்தேறியது . உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த கெட்ட வார்த்தைகளையும் ஒரு சேர நண்பர்களுக்குள் புன்னகையுடன் திட்டிக்கொள்வோம் . அவனை(நண்பனை ) நான் கேவலமா திட்டுவேன் , அவன் என்னை ரொம்ப கேவலமா திட்டுவான் . இதை ஒரு விளையாட்டாகவே நாங்க செய்வோம் . <br />
<br />
சோதனை காலம் என்றால் அது Placement காலம் தான் . என்னுடைய ஆங்கில புலமையை பார்த்து , அருவி என கொட்டும் ஆங்கில அறிவை பார்த்து மிரண்டு எனக்கு ஒரு நிறுவனமும் வேலை தரவில்லை . இந்த தமிழ் மீடியம் படித்து வருத்தப்பட்டது அப்போதுதான் . மெதுவாக ,என் தன்னம்பிக்கை குறைய தொடங்கியது . முதல் 3 நிறுவனங்களில் நண்பர்கள் எல்லாருக்கும் வேலை கிடைத்துவிட நான் மட்டும் தனி மரமானேன் . வாழ்க்கையை பார்த்து பயம் பழக தொடங்கினேன் . தொடர் முயற்சிகள் என்னை அயர்ச்சி அடைய மட்டுமே செய்தன . தீண்டாமையை எனக்குள்ளே நானே உருவாக்கி கொண்டேன் . ஒரு நாள் , அந்த நாள் மீண்டும் முயற்சி செய்து தோல்வியை சந்தித்தேன் .<br />
<br />
<br />
அறையில் தனியே ,என் தலையணை மெதுவாக கண்ணீரால் நனைந்து கொண்டு இருந்த்தது . வாய் விட்டு அழ முடிய வில்லை .<br />
<br />
நண்பன் ஒருவன் வந்தான் . கண்ணை மூடிய நிலையில் நான் .<br />
<br />
<b>"டேய் , நீ அழ வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் . நல்ல அழு . அழு .ஆனால் இது தான் நீ கடைசியா அழுவது என்று முடிவெடுத்து விட்டு அழு . "</b><br />
<br />
கண்ணை திறந்து பார்த்தேன் . எதுவும் பேச வில்லை . அது தான் நான் கடைசியாக் அழுதது . அடுத்த சில நாட்களில் ,என் கைகளில் வேலை . <br />
<br />
இன்றும் சோதனை வரும் போது ,அந்த வார்த்தைகளை நினைத்துக் கொள்வேன் .கல்லுரி கால நட்பு எனக்கு ஒரு வரபிரசாதம் ."மாப்ள , 20,000 அக்கௌண்டுக்கு அனுப்பிடு " , என்று சொன்னால் அடுத்த 5 வது நிமிடம் பணம் வந்து விடும் . இப்படி ஒரு நம்பிக்கையை என்னை பற்றி மற்றவர்களிடம் ஏற்படுத்தியது கல்லுரி . ஆரம்பிக்க தெரிந்த எனக்கு முடிக்க தெரியவில்லை . முடிவில்லா வானம் போல் ,நட்பும் தொடரட்டும் .<br />
<br />
என்னை வம்புக்கு இழுத்த மாதிரி , நானும் இரண்டு பேரை கூவிக் கொள்கிறேன் . <br />
<a href="http://suttapalam.wordpress.com/">புவன் (சுட்டப்பழம் )</a><br />
<a href="http://kunthavai.wordpress.com/">குந்தவை </a><br />
மேற்ப்படி பெரிய எழுத்தாளர்கள் ,நான் சொன்ன படி "பதின்மம் " பற்றி தொடர் பதிவு எழுத வில்லை என்றால் , கடுமையான் பின் விளைவுகள் வரும் என்று இப்போதே கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் .மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-305277407007413660.post-64008707632458219852010-02-22T15:19:00.006+05:302010-02-23T18:01:42.770+05:30ரஜினி -ஒரு மனுசன்டா ...ரஜினி , அஜித் ரசிகர்கள் வேறு தளத்திற்கு சென்று விடவும் . உங்களுக்கு புரியாத , தெரியாத செய்திகளை நான் இங்கு சொல்ல வில்லை .மற்றவர்கள் வழக்கம் போல வேறு எங்கும் போகாமல் மேலே படிங்க .<br />
<br />
திரும்பவும் ரஜினி சீசன் . இப்போது சீண்டி இருப்பது ஜாகுவார் தங்கம் , குகநாதன் போன்ற பழம் பெரும் மேதைகள் .ரஜினி யை ஜோக்கர் என்றும் , அஜித்தை மிக கேவலமாகவும் திட்டி உள்ளனர் . அவர்கள் இதை ஏன் சொல்கிறார்கள் ?<br />
<br />
இதை வைத்து ஒன்று, அரசிடம் ஏதாவது வேலை ஆக வேண்டும் ,அப்படி இல்லை என்றால் கேவலமான புகழ் பெற வேண்டும் .ஆனால் இதை தாண்டி ஒரு அரசியல் இதில் உள்ளது . அது என்ன ? சொல்கிறேன் பின்னர் .<br />
<br />
ரஜினி , அஜித் வேண்டாம் என்றால் விழாக்களுக்கு அவர்களை கூப்பிடாமல் தானே இருக்க வேண்டும் . எந்த போராட்டம் என்றாலும் ரஜினி வேண்டும் , அந்த புகழில் இவர்கள் குளிர் காய வேண்டும் . <br />
<br />
பொதுவாக ரஜினி பற்றி பல எதிர் மறை கருத்துகள் உள்ளன .அதில் சில வற்றில் நான் உடன் படுவேன் .ஆனால் எல்லாவற்றுக்கும் இல்லை .<br />
<br />
காவேரி பிரச்சனை என்றால் , தமிழ் நாட்டில் ரஜினியை கன்னடக்காரன் என்பார்கள் . அவர் ஏதாவது போராட்டத்தில் பங்கு எடுத்த்விட்டால் ,இவன் தமிழ் நாட்டுக்காரன் என்று கர்நாடகத்தில் சொல்லுவர் . இல்லை என்றால் ரஜினி ஒரு மராட்டிக்காரன் என்று தூற்றுவர் .<br />
<br />
இதற்க்கு எல்லாம் என்ன காரணம் தெரியுமா ? நம்முடைய கீழான புத்திதான் . நமக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் ரஜினியை உயர்த்தி பிடிப்போம் . இல்லை என்றால் மிதிப்போம் . வேறு எந்த மாநிலத்திற்கு நாம் சென்றாலும் , நாம் பெருமை பட ஒரு நிகழ்வாவது ரஜினியால் நடந்து விடுதிகிறது . அமிதாப் Vs ரஜினி என்று சொல்லும் போது , ரஜினி எங்க ஆளு என்று நாம் சொல்கிறோம் . <br />
<br />
பல வெளி நாடுகளில் ரஜினியால்தான் , தமிழ் படங்களுக்கு சிறிது வெளிச்சம் உண்டானது என்பதை திரைத்துறையினர் மறைக்க முடியாது . <br />
<br />
விடுதலை போராட்டத்தில் முதலில் கிளர்ந்து எழுந்தவன் தமிழன் , அவன் பெயர் கட்டபொம்மன் என்று மாரு தட்டுகிறோம் . ஆனால் கட்டபொம்மனோ தெலுங்கு மொழி வாழ் வந்தவன் என்பது வரலாறை படிப்பவர்களுக்கு தெரியும் . நமக்கு தெரிந்தாலும் , இல்லை அவன் தமிழ் நாட்டில் பிறந்தான் , வளர்ந்தான் , தமிழ் நாட்டிற்க்காக உழைத்தான் என்று சொல்லி பெருமையை தக்க வைக்க மட்டுமே பார்க்கிறோம் .இங்கே அவன் நதி மூலம் , ரிஷி மூலம் தேவை இல்லை . நமக்காக உழைத்தானா என்று கேள்விக்கேட்டு அவனை நாம் தமிழனாக ஏற்றுக்கொண்டோம் .<br />
<br />
இன்று திராவிடர்கள் என்று பழம் பெருமை பேசும் நாம் , உ.வெ.சா என்ற ஒரு ஆரிய ஐயர் இல்லை என்றால் தமிழில் பல இலக்கியங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கும் . அதானால் அவரை தமிழ் தாத்தா என்று கூப்பிட்டு மகிழ்கிறோம் .<br />
<br />
இப்படி உற்று நோக்கினால் ,தேவை படும் போது மட்டும் சிலரை உயர்த்தி , தேவை இல்லாத நேரத்தில் கொஞ்சம் கூட யோசிக்காமல் கிழே போட்டு விடுவோம் .<br />
<br />
ரஜினியை ஒரு பெரிய புனிதனாக நான் நினைக்க வில்லை . ஆனால் ஒரு நல்ல மனிதன் அவர்க்குள்ளாக எப்போதும் நிறம் மாறாமல் இருக்கிறான் .<br />
ரஜினியின் பேச்சுகளில் உண்மை மிக எளிமையாக இருக்கும் . மேடை மிகை பேச்சு அவர் பேச்சுகளில் இருக்காது . எதுகை மோனை இருக்காது .மனதில் தோன்றியதை சொல்லிவிடுவது அவர் இயல்பாக இருக்கிறது .<br />
<br />
ஆனால் அதற்காக யாருக்காவது ஏதேனும் துன்பம் என்றால் தன் புகழை ,மரியாதை குறைத்து கீழ் இறங்கி வருவதும் வாடிக்கை . ரஜினியால் கெட்டவர்கள் எவரும் இல்லை என்பது அவர்களின் எதிரிகளுக்கும் தெரியும் .<br />
இதை போன்று அஜித் இப்போது பேசி வருவதும் ,அவருக்குள்ளும் ஒரு நல்ல மனிதன் இருக்கிறான் என்பதை காட்டுகிறது . <br />
<br />
சரி , ரஜினியை , அஜித்தை திட்டுபவர்கள் பின்னால் ஒரு அரசியல் என்று சொன்னேன் இல்லையா ? அதாவது ரஜினி ,கமல் , அஜித் ,விஜய் போன்ற பெரிய தலைகளின் வருகையை வைத்துதான் பெரிய மக்கள் கூட்டத்தை அவர்கள் கூட்டுகிறார்கள் . டிக்கெட் எல்லாம் கொடுத்து பெரிய விலை பார்கிறார்கள் . பெரிய நிறுவனங்களிடம் இந்த கூட்டத்தை காண்பித்து விளம்பரம் மூலம் பெரிய நிதி அன்பளிப்பு பெறுகிறார்கள் .பின் அந்த நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்ச்சிக்கு அதை விற்று மேலும் ஒரு பெரும் பணம் பார்கிறார்கள் . இப்படி எல்லாம் பணம் வரும் வழியை ரஜினி ,அஜித் அடைத்தால் என்ன செய்வது ?<br />
<br />
இங்கே கருப்பு பணம் புகுந்து விளையாடுகிறது . புகழ் கிடைகிறது . அரசியல் வாதிகளின் பழக்கம் , அதன் மூலம் வரும் வருவாய் ..எல்லா வற்றையும் திடீர் என அவர்கள் இழக்க முடியவில்லை .அதான் இப்படி கத்திக் கொண்டு இருக்கிறார்கள் .மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-305277407007413660.post-82292045127305399172010-02-15T15:44:00.000+05:302010-02-15T15:44:16.136+05:30நான் ஏன் காதலிக்க கூடாது ?எல்லாரும் ஏன் காதலிக்கிறார்கள் என்று என் ஒரு பக்க மூளை கேட்டது ?<br />
<br />
இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது ? என்று கேள்வி வந்து விழுந்தது .<br />
<br />
Homely பொண்ணுங்களை காதலிக்கலாமா இல்லை, மாடர்ன் பொண்ணுங்களை காதலிக்கலாமா என்று அடுத்த கேள்வி .<br />
<br />
ஹோமேலி பொண்ணுங்களை காதலிக்கலாம் என்றால் மாடர்ன் பொண்ணுங்க நல்லவங்க இல்லையா என்று இன்னொரு கேள்வி .<br />
<br />
ரெண்டும் சேர்ந்து ஒரு பொண்ணை பார்த்து காதலிக்கலாம் என்றால் , அவளை எங்கு பார்ப்பது என்று கேள்வி .<br />
<br />
கோவில் என்றால் ஒரே homely , pub என்றால் ஒரே மாடர்ன் . ரெண்டும் சேர்ந்த ஒரு பொண்ணை ஆபீஸ்ல காதலிக்கலாம் என்றால்<br />
வேறு யாரையாவது அவள் காதல் செய்கிறாளா என்று திடீர் கேள்வி .<br />
<br />
காதலை சொன்னப்பின் என் காதலை ஒத்துக் கொள்வாளா என்று அடுத்தக் கேள்வி .<br />
<br />
ஒத்துகொண்டப்பின் பின் காதல் ,கல்யாணத்தில் போய் முடியுமா என்று சந்தேக கேள்வி .<br />
<br />
கல்யாணம் என்றால் பெற்றோர் சம்மதத்துடன் இல்ல ஓடிப் போய் கல்யாணமா என்று பயங்கரக் கேள்வி .<br />
<br />
கல்யாணம் செய்தப்பின் காதலிக்க முடியுமா என்று கேவலமான கேள்வி .<br />
<br />
பதில் தெரியாததால் நான் இது வரை காதலிக்க வில்லை . <br />
<br />
போதுமா , போதுமா ..<br />
<br />
இனிமே எவனாவது , மச்சி அப்புறம் உன் ஆளு என்ன சொல்றா ?<br />
அப்படின்னு கேட்டீங்க ...!!!@@#$$$<br />
<br />
ஏன்டா இப்படி , ஒருத்தனை அழ வச்சி பார்ப்பதில் நம்ம தமிழர்கள் தான் பெஸ்ட் ..<br />
<br />
<b>டிஸ்கி : </b>இப்போதைக்கு விஸ்க்கி ,<br />
<br />
அப்புறம் உங்களை மீட் பண்றேன் .<br />
<br />
<div style="color: red;"><i>அவள் பறந்து போனாளே , என்னை மறந்து போனாளே..</i></div>மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-305277407007413660.post-46651075639112029192010-02-11T16:09:00.000+05:302010-02-11T16:09:16.531+05:30அரக்க குணம் ,இரக்க மனம்இயலாமையின் வெளிபாடு கோபம் . அதனை தனிப்பதர்ககாக நான் அடிக்கடி செல்லும் இடம் அண்ணாச்சி டீ கடை .<br />
<br />
அந்த கசங்கிய நாளிதழ்கள் , சுட சுட வடை ,அந்த பக்கம் இருக்கிற லேடிஸ் ஹாஸ்டல் இது எல்லாம் தேவைபடுகிறது ஒண்ணுக்கும் உதாவத இந்த கோவத்திற்கு .<br />
<br />
அன்றும் மற்றொரு நாளே . வழக்கம் போல டீ கடை நோக்கி என் கோப பயணம் சென்றது .<br />
<br />
மிக பரிதாபமாக ஒரு ஜீவன் , இல்லை ,இல்லை ஒரு " நாய்" ஜீவன் என்னை முறைத்து பார்த்து கொண்டு இருந்தது . நாங்க எல்லாம் யாரு ? அப்படியே முறைச்சிகிட்டே பின்னாடி நடந்து அண்ணாச்சி கடைகிட்டே வந்து சேர்ந்தேன் .<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S3PeELYwKoI/AAAAAAAAAQY/18mUOchhBpE/s1600-h/1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S3PeELYwKoI/AAAAAAAAAQY/18mUOchhBpE/s320/1.jpg" /></a></div><br />
அப்பவும் அந்த நாய் என்னையே முறைசிகிட்டே இருந்தது . என்னது தொப்புளை சுத்தி 16 ஊசியா ? என் உள் மனம் கேள்வி கேட்க துவங்கியது .<br />
<br />
அப்போது தான், ஒரு 5 அல்லது 6 நாய் குட்டிகள் அதன் அம்மாவை சூழ்ந்து கொண்டன . ஆனால், அந்த நாய் , அந்த குட்டிகளை தள்ளி விட்டு என்னை நோக்கி மெதுவாக வரத் துவங்கியது .<br />
<br />
திடிரென நின்றது . குட்டிகள் பால் குடிக்க துவங்கின . ஆனால், அந்த நாய் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோட இருக்கும் என்பது போல ரொம்ப பலவீனமாக இருந்தது . <br />
<br />
மீண்டும் அந்த நாய் , என்னை நோக்கி வரத் துவங்கியது . அப்போதுதான் கவனித்தேன் ஒன்றை . அதன் அமுத சுரபியில் இருந்து ரத்தம் வடிந்தது கொண்டு இருந்தது .ஏனோ "ஆயரத்தில் ஒருவன் " படம் மனதில் வந்து போனது .<br />
<br />
நான் ஒரு பன்னை வாங்கி அதற்க்கு வைத்தேன் , ரொம்ப பசி போல . லபக் லபக் . முடிந்தது எல்லாம் . எனக்கு ஒரு நன்றி பார்வை பரிசளித்தது .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S3PeFVnQLvI/AAAAAAAAAQg/ruhdIE-edGU/s1600-h/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S3PeFVnQLvI/AAAAAAAAAQg/ruhdIE-edGU/s320/2.jpg" /></a></div><br />
டீ கடை அண்ணாச்சிக்கு உடனே ரொம்ப கோபம் ,<br />
" இந்த சனியன் திரும்பவம் வந்துடுச்சா !!!???..<br />
டேய் அந்த கட்டையை எடுடா .."<br />
எனக்கு இதயம் மிக வேகமாக துடிக்க துவங்கியது .<br />
<br />
சரியாக தூக்கி எறியப்பட்ட அந்த கட்டை அந்த நாயின் தலை மற்றும் அதன் ஒரு குட்டியின் காலையும் பதம் பார்த்தது . கண்டிப்பாக ரத்தம் வந்து இருக்கும் .<br />
<br />
அந்த நாய் , அடி வாங்கிய அந்த குட்டியை நக்கி கொண்டே நகர்ந்து சென்றது .<br />
நான் திரும்பிக் கொண்டேன் .<br />
<br />
ஈன சுரத்தில் அது கத்திக் கொண்டே நடந்து கொண்டிருந்தது . எதோ ஜென்ம பந்தம் போல , என்னால் டீ குடிக்க முடியவில்லை . <br />
<br />
இன்னும் ரெண்டு பன் வாங்கினேன் . கால்கள் நடக்க துவங்கின அந்த நாயை நோக்கி . மன்னிக்கவும் அந்த <b>தாயை</b> நோக்கி .மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-305277407007413660.post-9869053776336069232010-02-11T15:01:00.000+05:302010-02-11T15:01:47.616+05:30ச்சோ ஸ்வீட் ....<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNuoOOuxI/AAAAAAAAAQQ/5VNZaQVlDlg/s1600-h/image004.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNuoOOuxI/AAAAAAAAAQQ/5VNZaQVlDlg/s320/image004.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNteDcI2I/AAAAAAAAAQI/ggwmGvSuK0Q/s1600-h/image003.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNteDcI2I/AAAAAAAAAQI/ggwmGvSuK0Q/s320/image003.jpg" /></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s1600-h/image001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNp5hfMEI/AAAAAAAAAP4/LEru-MOYYnw/s320/image001.jpg" /></a></div><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNrS1oO8I/AAAAAAAAAQA/POLLW8k6H6c/s1600-h/image002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S3PNrS1oO8I/AAAAAAAAAQA/POLLW8k6H6c/s320/image002.jpg" /></a></div>மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-305277407007413660.post-85338591809739263232010-01-27T12:39:00.000+05:302010-01-27T12:39:40.846+05:30திரும்பி பாருங்க :குடியரசு தின வாழ்த்துக்கள்கொஞ்சம் லேட்டுதான் .. ஆனாலும் நீங்க ரசிக்கலாம் ..<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S1_lh1k1zkI/AAAAAAAAAOY/Ob9ocnfKF64/s1600-h/image019.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S1_lh1k1zkI/AAAAAAAAAOY/Ob9ocnfKF64/s320/image019.jpg" /></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S1_lkGxkchI/AAAAAAAAAOg/fiZBnxgL34g/s1600-h/image020.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S1_lkGxkchI/AAAAAAAAAOg/fiZBnxgL34g/s320/image020.jpg" /></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S1_llOfmUVI/AAAAAAAAAOo/j_GNS1F3fcs/s1600-h/image021.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S1_llOfmUVI/AAAAAAAAAOo/j_GNS1F3fcs/s320/image021.jpg" /></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S1_lm75SuuI/AAAAAAAAAOw/3RuTXISa4o8/s1600-h/image022.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S1_lm75SuuI/AAAAAAAAAOw/3RuTXISa4o8/s320/image022.jpg" /></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mC7tfhdI/AAAAAAAAAO4/oHjtrd-yIrg/s1600-h/image023.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mC7tfhdI/AAAAAAAAAO4/oHjtrd-yIrg/s320/image023.jpg" /></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mE0-vnxI/AAAAAAAAAPA/OIO3GHrWyqI/s1600-h/image024.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mE0-vnxI/AAAAAAAAAPA/OIO3GHrWyqI/s320/image024.jpg" /></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mHar_yFI/AAAAAAAAAPI/6SZjDrSEWiQ/s1600-h/image025.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mHar_yFI/AAAAAAAAAPI/6SZjDrSEWiQ/s320/image025.jpg" /></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mIQpNuaI/AAAAAAAAAPQ/DeMeuAQhvwI/s1600-h/image026.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mIQpNuaI/AAAAAAAAAPQ/DeMeuAQhvwI/s320/image026.jpg" /></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mJVmb4jI/AAAAAAAAAPY/x7TZH6NtfWo/s1600-h/image027.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mJVmb4jI/AAAAAAAAAPY/x7TZH6NtfWo/s320/image027.jpg" /></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://1.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mLSxaWZI/AAAAAAAAAPg/O4ngIYWhU4k/s1600-h/image028.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mLSxaWZI/AAAAAAAAAPg/O4ngIYWhU4k/s320/image028.jpg" /></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mNu9L5aI/AAAAAAAAAPo/skWn3VycanE/s1600-h/image034.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mNu9L5aI/AAAAAAAAAPo/skWn3VycanE/s320/image034.jpg" /></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mPiIW7II/AAAAAAAAAPw/tl4uYc747e4/s1600-h/image035.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/_n02muxfww-M/S1_mPiIW7II/AAAAAAAAAPw/tl4uYc747e4/s320/image035.jpg" /></a><br />
</div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-305277407007413660.post-55722891587882645492010-01-22T12:26:00.016+05:302010-01-22T20:45:00.256+05:30கள்ளக் காதல்<span style="color: red;">ஏன் டீ , அங்க எவனை பார்த்து பல்ல காண்பிச்சு மயக்குற ?</span> புருசனின் குரல் காதில் விழுந்தாலும் மெதுவாகவே அவள் திரும்பினாள்.<br />
பழக்கப்பட்ட வார்த்தைகள் அவளிடம் பலம் இழந்து போயின.<br />
<br />
விஷம் தெளித்த வார்த்தைகளை தாங்கி கொண்டு வெளியில் இருந்து வீட்டினுள் அடைப்பட்டாள்.<br />
<br />
<span style="color: red;">என்னடி , நான் இவ்வளவு கத்தியும் , துளியும் அசையாமல் எருமை மாடு மாதிரி நிக்குற ? </span><br />
<br />
வழக்கம் போல அவள் கண்களில் கண்ணீர் .<br />
<br />
<span style="color: red;">என்னடி பத்தினி வே ஷம் போடுற , முதல் ராத்திரில்லே என்க்கிட்டையே நீ ஒருத்தனை லவ் பண்ணினேன்னு சொன்னவள் தானே ..!</span><br />
<br />
கணவனிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததற்கு தினம் தினம் பரிசு மழை அவளுக்கு .<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/_n02muxfww-M/S1lL0GRdejI/AAAAAAAAAOQ/yase_152QSA/s1600-h/sad-woman-silhouette-225x300.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/_n02muxfww-M/S1lL0GRdejI/AAAAAAAAAOQ/yase_152QSA/s320/sad-woman-silhouette-225x300.jpg" /></a><br />
</div>டிரைவர் பாண்டியன் அப்போது உள்ளே வந்தார் . ஐம்பது வயதை கடந்த நிலையால் நிதானம் சற்று அதிகம் அவருக்கு . ஆனால் அவராலே இவள் படும் துன்பங்களை தாங்க முடியாது .<br />
<br />
<span style="color: red;">என்னய்யா , இவ்வளவு லேட்டா வருகிறாய் ? சரி , சரி சீக்கிரம் வண்டியை கிளப்பு , போகலாம் . </span><br />
<br />
அவன் வெளியேறினான் . அவன் இட்ட வடுக்கள் மட்டும் இவளுடன் .<br />
மாலை , வில்லனுடன் அவன் நண்பனும் வந்தான் .<br />
<br />
<span style="color: red;">டேய் ரகு , என்னோட மனைவியை நீ பார்த்தது இல்லைல. இரு நான் கூப்பிடுறேன் .</span><br />
அவன் கூப்பிடுவதற்க்குள் , அவளே அங்கு பயந்து நிற்க <br />
<br />
உடனே ரகு , <span style="color: red;">தேவதை மாதிரி உனக்கு மனைவிடா , நீ ரொம்ப கொடுத்து வைததவன்டா.</span><br />
<br />
<span style="color: #274e13;">நன்றி . சரி என்ன குடிக்க வேணும் உனக்கு ?</span><br />
<br />
நான் வேண்டுமென்றால் காப்பி கொண்டு வரட்டா என்று அவள் அப்பாவியாக கேட்க .<br />
சிரித்து கொண்டே சரி என்றான் ரகு .<br />
<br />
பின் அவள் கணவனிடம் , <span style="color: red;">விருந்தாளிக்கு என்ன பிடிக்கும் என்று உன் மனைவிக்கு நன்றாக தெரிகிறது </span>என்று பாராட்டினான் .<br />
ரகு போன பிறகு , <br />
வீட்டினுள் ஒரு அணுகுண்டு வெடித்தது .<br />
<br />
<span style="color: #274e13;">ஏண்டி , அவனை உனக்கு முன்னாடியே தெரியுமா ? நான் கூப்பிடுவதற்க்குள் நீ ஏன் வந்தாய் ?</span><br />
<span style="color: #274e13;"> அவனுக்கு காப்பி தான் பிடிக்கும் என உனக்கு எப்படி தெரியும் ?</span><br />
<span style="color: #274e13;"> என்னடி இவனும் </span>முன்னாள் <span style="color: #274e13;"> காதலனா ?</span><br />
<span style="color: #274e13;"> இன்னும் எத்தனை பேருடி?</span><br />
<br />
சொற்கள் எல்லாம் அவளை சுட்டு தின்றன .<br />
<br />
அவன் போன பிறகு , இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த டிரைவர் பாண்டியன்,<br />
<span style="color: #20124d;"> தாயி , எப்படி தாயி ,இந்த பயலோட இருக்க , பேசாம உங்க வீட்டுக்கு போய்டு தாயி .</span><br />
<br />
<span style="color: purple;">நான் எங்கப்பா ,போவேன் . வீட்டுல இருந்தப்ப , காதலை ஒரு கொலை குற்றம் போல பார்த்து திட்டு , அடி , உதை வாங்கினேன் . இப்ப இவர்கிட்ட வாங்குறேன் .</span><br />
<span style="color: purple;"> நான் எதுக்குப்பா வாழனும் ? காதலிச்சது ஒரு தப்பா ?</span><br />
<br />
<span style="color: #20124d;">நீ என்னோட மகளா இருந்தா , எப்பவோ உன்னை என் கூட அழைத்துக் கொண்டு போயி இருப்பேன் . இந்த பய ,உன்னை கொஞ்சம் , கொஞ்சமா கொன்னுடுவானே </span><br />
<br />
<span style="color: purple;"> விதி அதுவாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும் ?</span><br />
<br />
கண்களில் கண்ணீர் இல்லை . கண்ணீரும் வற்றிப் போயி பல நாட்கள் ஆகிறது . <br />
<br />
<br />
அடுத்த நாள் , அவன் போன பிறகு ரகு வந்தான் .<br />
<br />
<span style="color: red;"> எங்கங்க அவன் இல்லையா ?</span><br />
<br />
<span style="color: #741b47;"> இல்லை , இப்பத்தான் அவர் வெளியே போனார் ..</span><br />
<br />
<span style="color: red;">அச்சோ . சரி நான் அவனை மறுபடியும் வரை சொல்கிறேன் . நீங்க எனக்கு அன்னைக்கு போட்ட காப்பி மாதிரி போட்டு எனக்கு எடுத்துக் கிட்டு வாங்க . ப்ளீஸ் .</span><br />
<br />
உடம்பெல்லாம் கொஞ்சம் நடுங்கித்தான் போனால் அவள் . என்ன நடக்க போகிறதோ அவன் வந்தால்????<br />
<br />
சமையலறையில் அவள் , காப்பி போட்டு கொண்டு இருக்கும் போது , பின்னாடி மிக நெருக்கமாக ரகு .<br />
<br />
<span style="color: red;">நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க . எனக்கு எல்லாம் தெரியும் , உன்னை அவன் ரொம்ப கொடுமை படுத்துறான் இல்லை . </span><br />
<br />
இப்படி பேசிக் கொண்டே அவளை அணைக்க முயல <br />
<br />
<span style="color: purple;"> நாயே , தள்ளி போடா , இல்லை இங்க நடக்கிறதே வேற .. </span>என்று கண்கள் சிவக்க அவள் கர்ஜித்தாள் .<br />
<br />
ரகு வோ , மிக மெல்லிய புன்னகை யுடன் , கிண்டலாக .<br />
<br />
<span style="color: red;">இப்ப உன்னால் என்ன பண்ண முடியும் ?. உன் புருஷன் தான் என்னை இங்க அனுப்பி நீ எப்படி நடந்துகிறன்னு வேவு பார்க்க சொன்னான் .நான் மட்டும் அவன் கிட்ட போயி ,</span><br />
<span style="color: red;"> உன் பொண்டாட்டி நல்லவள் இல்லை .அப்படி இப்படி சொன்னால் என்னவாகும் ?</span><br />
<br />
பித்து பித்து பிடித்தவள் போல் அவள் முகம் வெளிறிப் போயி இருந்த்தது .<br />
<br />
இரகுவே மீண்டும் ,<br />
<span style="color: red;">கொஞ்ச நேரம் எனக்கு சந்தோசம் தந்த்தால், நீ நன்றாக வாழாலாம் . என்ன சொல்ற ? உனக்கு வேற வழியில்லை</span> என்று சொல்லி விட்டு அவளை நெருங்கினான் .<br />
<br />
நெருப்பில் இடப்பட்ட பஞ்சு போல அவள் மனம் எரிந்து கொண்டு இருந்ததது .<br />
<br />
<div style="color: red;">ரகு இப்போது மிக நெருக்கமாக ,<br />
</div><br />
<span style="color: red;"> இன்னும் நெருக்கமாக </span><br />
<br />
<span style="color: red;"> இன்னும் ..</span><br />
<br />
திடிரென அங்கு டிரைவர் வர, ரகு பயந்து நெளிந்து வெளியேறினான் .<br />
பைத்தியம் பிடித்தவள் போல் அவள் அங்கு வெறித்து பர்ர்த்து கொண்டிருந்தாள் .<br />
<br />
<span style="color: #20124d;"> என்னமா நடந்ததது . யாரும்மா அவன் .. சொல்லு தாயி , என்ன நடந்ததது ?</span><br />
<br />
கொட்டி தீர்த்தாள் . அமைதி அங்கு சிறிது நேரம் உயிர் வாழ்ந்த்தது .<br />
<br />
<span style="color: #20124d;">பின் , அவர் விடும்மா , எல்லாத்தையும் விடும்மா .</span><br />
<span style="color: #20124d;"> என் கூட வாம்மா , தாயி , இனி நீ என் மகள் .</span><br />
<span style="color: #20124d;"> அவள் கண்களில் முதல் முதாலாக அனந்த கண்ணீர் .</span><br />
<br />
அடுத்த நாள் தினமலரில் <br />
<br />
<i><b><span style="color: red;"> 22 வயது பெண் 55 </span></b></i><i><b><span style="color: red;">வயது </span></b></i><i><b><span style="color: red;">வாலிபருடன் தப்பி ஓட்டம் </span></b></i>மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-305277407007413660.post-50377677472563326062010-01-20T10:57:00.010+05:302010-01-20T11:13:17.144+05:30தேசத் துரோகிகள்<div><span style="font-size: small;"> நாம் 1947, ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் விடுதலை பெற்றதாக வரலாற்று புத்தகங்களில் படித்து இருக்கிறோம் .</span><br />
</div><div><span style="font-size: small;"></span><br />
</div><div><span style="font-size: small;">வயதான பல பெரியவர்கள் ," நான் சுதந்திர போராட்டத்தில் பங்கு எடுத்து கிட்டவன்" என்று பெருமை </span><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">பொங்க<span style="font-family: 'Times New Roman'; line-height: normal;"> கூறி வருகிறார்கள்</span></span><br />
</div><div><span style="font-size: small;">அவர்களும் , இந்த தொலைக் காட்சிகளும் ,சினிமாவும் சொல்லுவது </span><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">என்னவென்றால் </span><br />
</div><div style="color: red;"><b><i><span style="font-size: small;">வெள்ளையர்கள் கொடூரமானவர்கள் ,</span></i></b><br />
</div><div><div style="color: red;"><b><i><span style="font-size: small;">நம்மை அடித்தார்கள் , பிரித்தார்கள் ,</span></i></b><br />
</div><div style="color: red;"><b><i><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">அதற்கு சில மன்னர்கள் உதவினார்கள் . </span></i></b><br />
</div><div style="color: red;"><b><i><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">அது, இது....</span></i></b><br />
</div><div style="color: red;"><b><i><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">இன்னும் பிற ....</span></i></b><br />
</div><span style="font-size: small;"></span><br />
<div><span style="font-size: small;">சில எட்டபன்களை மட்டுமே சினிமா காட்டியது .</span><br />
</div><div><span style="font-size: small;">நாம் மட்டும் அல்லாமல் , பலரும் கொண்ட மாயை இதுதான்</span><br />
</div><div><ul><li><span style="font-size: small;">மக்கள் எல்லாரும் சுதந்திர வேட்கை </span><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">கொண்டு பயங்கரமாக வீறு கொண்டு போராடினார்கள் .</span></li>
<li><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">வெள்ளையர்கள் நம்மை கொன்று குவித்தார்கள் .</span></li>
<li><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">கடைசியில் ரத்தம் சிந்தி , உயிர் துறந்து சுதந்திரம் வாங்கினோம் .</span></li>
</ul><div><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">ஆம் , அவர்கள் சொல்வது எல்லாம் சத்தியமான உண்மை . ஆனால் அவர்கள் வேண்டுமென்றே மறைத்த உண்மைகள் இதை விட கொடூரமானவை .</span><br />
</div><div><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">அதற்க்கு காரணம் , சுய சொரிதலே .</span><br />
<span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;"> தப்பு , குற்றம் , பாவம் எல்லாம் வெள்ளையர்கள் மட்டுமே செய்தார்கள் . நாம் எதுவுமே செய்யவில்லை .நாம் ஒரு அப்பாவிகள் . நாம் ஒரு பாதிக்கப்பட்ட பாவிகள் . <br />
</span><br />
</div><div><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">உண்மையில் ஆங்கிலேயர்களை விட நெஞ்சில் வஞ்சம் வைத்து பலி வாங்கியது நம் முன்னோர்கள் தான் . என்னடா இவன் உளறுகிறான் என்று நினைப்பது எனக்கு கேட்கிறது .</span><br />
<br />
</div><div><div><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">நாம் இப்போது 100 கோடிகளுக்கு மேல் இருக்கிறோம் . அப்போது 30 கோடிகளுக்கு மேல் இருந்தோம் . அப்படி ஒரு பெருந்திரளாக இருந்த நம்மை , வெறும் ஒரு சில லட்சங்களில் வந்த ஆங்கிலேயர்கள் எப்படி ஆட்சி செய்ய முடியும் ?</span><br />
<br />
</div><div><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">நம் கைகள் தான் நம் கண்களை குருடாக்கியது . ஜாலியன் வாலாபாக் படுகொலையில் முன்னின்று நடத்தியது ஜெனெரல் டயர் என்னும் வெறியன் என்றால் , அவன் கட்டளைக்கு அடிபணிந்து நம் மக்களை சுட்டு கொன்றது யார் ? முதாலாளி விசுவாசம் , தன் தேசப்பற்றை , தன் சகோதர , சகோதரிகளை கொன்று குவித்து உள்ளது .</span><br />
</div><br />
<div><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">ஊருக்கு , ஊர் காவல் நிலையங்கள் இருந்தாதாம் . அங்கே பணி புரிந்த்தது யார் ? நம்மவர்கள் தானே .</span><br />
<span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">நமக்கு தெரிந்தது "கொடி காத்த குமரனின் " சாவு மட்டும் தான் .அச்சில் ஏறாமால் செத்த குமரன்கள் எத்தனையோ ?</span><br />
<br />
</div><div><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">அந்த தேச துரோகிகளுக்கு , நாம் விடுதலை அடைந்தவுடன் கொடுத்த தண்டனை என்ன ?</span><br />
<br />
</div><div><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">காசுக்கும் , பதவிக்கும் ஆசை பட்டு தானே ஆங்கிலம் , வெளி நாட்டில் "பாரிஸ்டர் " பட்டம் எல்லாம் நம்மவர்கள் படித்தார்கள் . ஆங்கிலேயர்களை பாதுகாக்க தானே அவர்களின் படையில் சேர்ந்தார்கள் . நான் சொல்ல வருவது எல்லாம் மன்னர் கால நிகழ்ச்சிகள் அல்ல . அவர்களை அடக்கி ,நம்மை 200 ஆண்டுகள் ஆண்டபோது நடந்த நிகழ்ச்சிகள் .</span><br />
</div><br />
<div><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;">நம் தாத்தாக்கள் எல்லாரும் நல்லவர்கள் மட்டும் அல்ல .</span><br />
<span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;"><span style="font-family: 'Times New Roman'; line-height: normal;">எனக்கு வரலாற்றில் புரியாத ஒன்று, நாம் யாரிடம் இருந்து விடுதலை பெற்றோம் ?</span></span><br />
</div></div><span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small; line-height: 29px;"></span><br />
</div><br />
</div>மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-305277407007413660.post-74350008747855195232010-01-18T16:16:00.001+05:302010-01-18T17:55:44.357+05:30பேசா மொழி<span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 29px;"></span><br />
<div>நான் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு செல்வதற்கு , பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன் .<br />
</div><div> தேவதைகள் பலர் , அவர்களின் தேவர்களோடு காட்சி கொடுத்ததால் மனம் வெதும்பி சற்று வெறித்த பார்வையுடன் செல் பேசியை நோண்டி கொண்டு இருந்தேன் .<br />
</div><div><br />
</div><div>அப்போது ஒரு குட்டி ,அழகிய பிசாசு வந்து என்னை முறைத்தது . அந்த பாப்பாவுக்கு 2 வயதுக்குள்தான் இருக்க வேண்டும் . ரோஸ் நிறத்தில் ஒரு குல்லா. வெளிர் மஞ்சள் நிறத்தில் டாப்ஸ் .<br />
</div><div><br />
</div><div> நடக்க கூட தெரியவில்லை ,ஆனால் "இது என் ஏரியா" என்ற பார்வை அதன் கண்களில் .<br />
</div><div>எனக்கு அந்த பாப்பாவை கொஞ்சம் வேண்டும் ஒரே ஆசை . எங்க , நமக்கு ஆசைப்பட்டது எல்லாம் நடந்து இருக்கு .<br />
</div><div><br />
</div><div>என்னை , மேலும் கீழும் ஒரு பார்வை .<br />
</div><div>அப்புறம் கிட்ட கூட வரவில்லை .<br />
</div><div><br />
</div><div>ரொம்ப வேகமாக ஓடுவதும் , விளையாடுவதும் ஒரே கொண்டாட்டம் தான் .<br />
</div><div><br />
</div><div>கொஞ்ச நேரத்தில் , இன்னொரு குட்டி பிசாசு வருகை தந்தது .<br />
</div><div><br />
</div><div>அக்னி நட்சத்திரம் கார்த்திக் , பிரபு மாதிரி ஒரு முறைப்பு ரெண்டு பேரிடம் .<br />
</div><div><br />
</div><div>ஒரு பாப்பா வேகமாக ஓடியது . அதை விட வேகமாக இன்னொன்று ஓடியது.<br />
</div><div>திடிரென , ரெண்டும் கொஞ்சம் பக்கத்தில் வந்து , அவரவர் சட்டையை பிடித்து கண்காளாலே பேசிக்கொண்டனர் .<br />
</div><div><br />
</div><div>என்னடா , இப்படி ஒரு திடீர் திருப்பம் என்று நான் நினைத்துக் கொண்டு இருக்கும் பொது ,<br />
</div><div>ஒரு பாப்பா , வேகமாக ஓடி, ஒரு இடத்தில் நின்று இன்னொன்றை பார்த்து சிரிக்கும் .<br />
</div><div>இன்னொரு பாப்பா , அதை துரத்தி சென்று அதன் அருகில் நின்று ,அதனை தொட்டு பயங்கரமாக சிரிக்கும் .<br />
</div><div><br />
</div><div><a href="http://1.bp.blogspot.com/_n02muxfww-M/S1Q7sZuJcGI/AAAAAAAAAOA/bJcjdY8A0CI/s1600-h/SmallKids.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/_n02muxfww-M/S1Q7sZuJcGI/AAAAAAAAAOA/bJcjdY8A0CI/s320/SmallKids.jpg" /></a>ரெண்டுக்கும் கொஞ்சம் கூட பேசத்தெரியாது , ஆனால் ரொம்ப நேரமாக சிரிப்பதும் , விளையாடுவதும் ஒரே அக்கப் போர் .<br />
</div><div><br />
</div><div>திடிரென ஒரு வில்லன் என்ட்ரி அங்கே .<br />
</div><div>வில்லனுக்கு உயிர் இல்லை . ஆம் , ஒரு தண்ணீர் பாட்டில் தான் அங்கு வில்லன் .<br />
</div><div><br />
</div><div>ஒரு பாப்பா அந்த பாட்டிலை எடுத்தது . இன்னொரு பாப்பா , அதைக் கேட்டது .<br />
</div><div>ஒப்பந்தம் தோல்வியில் முடிய , இரண்டுக்கும் ஒரே போர் .<br />
</div><div><br />
</div><div>சட்டையை இழுப்பதும் , பாட்டிலை இழுப்பதும் ஒரே ரத்தக் கலரி .<br />
</div><div>அதன் பிஞ்சுக் கால்கள் ,ஓடி ஓடி களைப்படைந்து போய் இருப்பதால் ஒரே இடத்திலே நின்று மூன்றாம் உலகப் போர் நடந்து கொண்டு இருந்தது .<br />
</div><div><br />
</div><div>ஒரு பாப்பாவுக்கு வெற்றி , இன்னொன்றுக்கு தோல்வி .<br />
</div><div>நட்பினில் ஒரு விரிசல் .<br />
</div><div>சிறிது நேரத்திற்கு பின் , ரெண்டு குட்டிகளும் தனி தனியே நின்று கொண்டு இருந்ததன .<br />
</div><div><br />
</div><div>ஒன்று அந்த பாட்டிலுடனும், இன்னொன்று அங்கே , இங்கே ஓடியும் மீண்டும் விளையாட துவங்கின .<br />
</div><div><br />
</div><div>திடிரென அந்த தோல்வியுற்ற பாப்பா கீழே விழ , அதன் அப்பா , தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார் . வலியால் அந்த குட்டி வாண்டு அழ ஆரம்பித்தது .<br />
</div><div><br />
</div><div>இப்பத்தான் நீங்க , இங்க கவனிக்கணும் .<br />
</div><div><br />
</div><div>இன்னொரு பாப்பா , அந்த பாப்பாவை கிட்ட போய் பார்க்குது .<br />
</div><div>அங்கே அழுகை நின்றது .<br />
</div><div><br />
</div><div>சில பார்வைகளுக்கு பிறகு , அழுமூஞ்சி பாப்பா , இன்னொரு பாப்பாவை துரத்த ஆரம்பித்தது .மீண்டும் சிரிப்பு சத்தம் .<br />
</div><div><br />
</div><div>மீண்டும் அநாதை ஆனது அந்த தண்ணீர் பாட்டில் .<br />
</div><div><br />
</div><div>ஏனோ தெரியவில்லை , என் கைகள் தேடத் துவங்கி இருந்தன ஒரு நண்பனின் செல் நம்பரை .பேசாதிருக்கும் என் நண்பனை பேச வைக்க போகிறேன் .<br />
</div><div><br />
</div><div>சில சமயம் , எந்த மொழிகளுக்கும் தேவை இருப்பதில்லை .<br />
</div><div><br />
</div>மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-305277407007413660.post-63076399636700172792010-01-11T15:20:00.002+05:302010-01-11T15:20:00.120+05:30கவிதையை தொலைத்தவர்கள்என்னடா , இவன் கவிதை எழுதி மொக்கை போடப் போறான்னு <span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 29px;"> தப்பா</span> நினைக்காம மேலும் படிப்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .<br />
<br />
<div>என்னென்றால் , என்னால்<br />
</div><div><br />
</div><div>கவிதை எழுத முடியாது ,<br />
</div><div><br />
</div><div>கவிதை எழுத தெரியாது .<br />
</div><div><br />
</div><div>நான் சொல்ல வருவது, நாம் எல்லாரும் வாழ்வில் கடந்து வந்த ஒரு நிகழ்ச்சிதான் .அதாவது, நாம் ஒரு பாடலை நினைவில் கொண்டு வர முடியவில்லை என்றால் ,நண்பர்களிடம்<br />
</div><div><br />
</div><div><span style="color: red;">டேய் , ஒரு படத்துல , விஜயகாந்த் ,ரேவதி எல்லாரும் நடிச்சி இருப்பாங்களே ..</span><br />
</div><div><span style="color: red;"><br />
</span><br />
</div><div><span style="color: red;">அதுல கூட , விஜயகாந்த் கடைசில செத்துடுவாறே ..</span><br />
</div><div><span style="color: red;"><br />
</span><br />
</div><div><span style="color: red;">ரேவதி கூட விதவை ..</span><br />
</div><div><span style="color: red;"><br />
</span><br />
</div><div><span style="color: red;">டேய் , அந்த படத்துல முதல் பாடல் என்னடா ?</span><br />
</div><div><br />
</div><div>எப்படி கேட்டாலும் , சில சமயம் நமக்கோ , நண்பர்களுக்கோ ஞாபகம் வாராது . வரவே வராது .<br />
</div><div><br />
</div><div>ஆனால் முக்கியாமான மீடிங்குல நாம் உட்கார்ந்து இருக்கும் போதோ , சாப்பிடும் போதே , பின்னாடி புரனியில யாரோ தட்டி சொன்ன மாதிரி அந்த பாடல்<br />
</div><div><br />
</div><div><span style="color: #274e13;">"இன்றைக்கு என் இந்த ஆனந்தம் " என்றும் </span><br />
</div><div><span style="color: #274e13;"><br />
</span><br />
</div><div><span style="color: #274e13;">அந்த படம் "வைதேகி காத்திருந்தாள்" என்று </span><br />
</div><div><br />
</div><div>ஞாபகம் வரும் .<br />
</div><div><br />
</div><div> இது எப்படி என்று நாம் யோசிப்பது இல்லை . அது நமக்கு தேவையும் இல்லை .<br />
</div><div><br />
</div><div>நான் சொல்ல வருவது , அப்படி கூட எனக்கு கீழே உள்ள சில கவிதைகளை ,சில மொக்கைகளை யார் சொன்னது என்று தெரியவில்லை .<br />
</div><div><br />
</div><div>விலாசம் இல்லாத கடிதங்கள் போல என் மனதில் இருந்த சிலவற்றை உங்களிடம் சொல்லி விலாசம் தேட முயற்ச்சிக்கிறேன் . கொஞ்சம் உதவி பண்ணுங்கப்பா ..<br />
</div><div><br />
</div><div><br />
</div><div>---------------------------------------------------------------------<br />
</div><div><br />
</div><div>போரால்<br />
</div><div>பத்து புலிகள்<br />
</div><div>இறக்கிறார்கள்<br />
</div><div>நூறு புலிகள்<br />
</div><div>பிறக்கிறார்கள்<br />
</div><div><br />
</div><div>---------------------------------------------------------------------<br />
</div><div><br />
</div><div>ஆங்கிலப்பள்ளியில்<br />
</div><div>அடி வாங்கிய குழந்தை<br />
</div><div>அழுதது<br />
</div><div>"அம்மா" என்று<br />
</div><div><br />
</div><div>---------------------------------------------------------------------<br />
</div><div><br />
</div><div>வாழ்ந்து என்ன செய்யபோகிறோம்<br />
</div><div>செத்து தொலையலாம்<br />
</div><div>செத்து என்ன செய்யபோகிறோம்<br />
</div><div>வாழ்ந்து தொலையலாம்<br />
</div><div><br />
</div><div>---------------------------------------------------------------------<br />
</div><div><br />
</div><div>என்னிடம் நீ<br />
</div><div>பேசியதை விட<br />
</div><div>எனக்காக நீ<br />
</div><div>பேசியதில்தான்<br />
</div><div>உணர்ந்தேன் நமக்கான<br />
</div><div>காதலை .<br />
</div><div><br />
</div><div>---------------------------------------------------------------------<br />
</div><div><br />
</div><div>நாம் வாழ்ந்தது சம்பவமாக இருந்தாலும் , செத்தது சரித்தரமாக இருக்கணும்<br />
</div><div><br />
</div><div>---------------------------------------------------------------------<br />
</div><div><br />
</div><div>நீ அடித்தது<br />
</div><div>வலிக்கவில்லை<br />
</div><div>நீதான் அடித்தாய்<br />
</div><div> என்று நினைக்கும் <span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 29px;">போது</span><br />
</div><div>வலிக்கிறது.<br />
</div><div><br />
</div><div>---------------------------------------------------------------------<br />
</div>மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-305277407007413660.post-29391255250368744352010-01-08T15:27:00.000+05:302010-01-08T15:27:52.308+05:30சிரிக்கும் மிருகம் பெண்சிரிக்கும் மிருகம் பெண் என்று அந்த ஆட்டோவின் பின் புறம் எழுதி இருந்தது .<br />
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">வீட்டுக்கு போகும் என் அவசரம் கூட கொஞ்சம் அமைதியானது அதை பார்த்து .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">அந்த ஆட்டோவில் தான் ஏறினேன் .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">நமக்கு தான் வாயை அடக்கி பழக்கம் இல்லையே .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">மெதுவாக அந்த டிரைவரிடம் .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span style="color: #38761d;">அண்ணே , பின்னாடி எதோ புதுசா எழுதி இருக்கீங்க போல .</span><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span style="color: red;">சாரு, அது இன்னானா , சிரிக்கும் மிருகம் பெண்</span> என்று சொல்லிவிட்டு ,<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">பின் ஒரு பெரிய சிரிப்பு .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span style="color: #38761d;">அப்ப, அழும் மிருகம் ஆண் . கரெக்டா ?</span><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span style="color: red;">என்ன சாரு , விளையாடுறீங்களா . ஒன்னையும் எவளாவது லவ்வு பன்னின்னு , அப்பலக்கா கலட்டி விட்டுட்டா தெரியும் .</span><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span style="color: #38761d;">என்ன பாஸ் , நடந்தது ?</span><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span style="color: red;">ஊட்டுல சொன்னத நம்பி , அவங்களுக்கு பயந்து என்னை கலட்டி விட்டுட்டா அந்த தே...</span><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">எம்புட்டு கோவம் . கொஞ்சம் அமைதியாக இருந்தேன் .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">அவரே பின் ,<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span style="color: red;">என்ன சாரு சொல்றீங்க , நான் சொன்னது சரியா ?</span><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span style="color: #274e13;">உன்னோட பொண்ணு , உன் பேச்சை கேட்டுட்டு அவ காதலை தியாகம் பண்ணினா அவளை அப்படித்தான் கூப்பிடுவாயா ?</span><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">ஆட்டோவின் வேகம் குறைந்த்தது . அதன் பின்னர் எங்களுக்குள் இடையே இருந்த்தது அமைதி மட்டும்தான் .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">காதலின் மீது மட்டும் இல்லாமல் , காதலை தியாகம் பண்ணுபவர்கள் மீதும் என் பார்வை நிறைய மாறி இருக்கிறது .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">நான் ஒன்றும் ரகுவரன் மாதிரி "I KNOW, I KNOW" என்று கத்தும் சைக்கோ இல்லை .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">நானும் பல ஆண் ஆதிக்கவாதிகளின் இன்னொரு ஜெராக்ஸ் போலத்தான் இருந்தேன் இந்த பதிவுலகத்துக்கு நுழையும் வரை .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">என்னை ,யாரவது ஒரு பெண் ஸ்கூட்டியில் சாலையில் <span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 29px;">வேகமாக சென்றால் </span> ,என்ன கோபம் வரும் என்று உங்களுக்கு தெரியாது .ஆனால் இப்போது எந்த சஞ்சலமும் வருவதில்லை . இப்போது சில சமயம் அவர்களை பார்த்து வியக்கிறேன் .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">அவர்களின் வேகம் அப்படி .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"> பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனக்கு சொல்லிகொடுக்கபட்டதாக நானாகவே ஒரு மாயை வளர்த்து இருந்தேன் .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">பதிவுலகம் , பெண்கள் மீது நான் கொண்ட பிம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"> நொறுக்கியது .எனக்கு தெரியாமலேயே .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">இங்குத்தான் பெண்களின் பார்வையில் அவர்களை நான் காண முடிந்தது .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">நைட்டி உடை பெண்களுக்கு நன்றாக இல்லை என்று ஒரு பதிவர் கூறி இருந்தார் . அதற்க்கு அவர்க்கு வந்த கண்டனங்களை நான் படித்த போது, என் பார்வை எப்போதும் ஒரு ஆணின் பார்வையிலே இருந்துள்ளது என்று தெரிகிறது .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">ரத்தம் பந்தம் தவிர வேறு யாரையும் அக்கா என்று நான் அழைத்ததில்லை . ஆனால் இங்கு முகம் தெரியாமலே பெண் பதிவர்கள் ,பலரை சகோதர முகம் கொண்டு அழைப்பது முதலில் எனக்கு ஆச்சரியம் தந்தது .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 29px;"></span><br />
</div><div>எழுதுவதில் மட்டும் இல்லாமல் , மற்ற பதிவர்களுடன் உறவை மிக மதிக்கும் வகையில் உருவாக்கி இருப்பது சுலபமான காரியம் இல்லை . இங்கே பெண்கள் அதை மிக இலகுவாக கையாளுகிறார்கள் .<br />
</div><div><br />
</div><div>"தான் ஒரு ஆணாதிக்கவாதிதான்" என்று யாரும் துணிந்து கூறிவிட முடியாத அளவுக்கு ஒரு பிம்பத்தை, ஒரு கட்டமைப்பை பெண்கள் மட்டும் இல்லாமல் சில பெண்ணுரிமை பேணி காணும் ஆண் பதிவர்களும் உருவாகியுள்ளார்கள் .<br />
</div><br />
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 29px;"></span><br />
<div>நான் ஒரு புரட்ச்சிவாதி அல்ல . என்னை புரட்டி போட்ட இந்த பதிவுலகுத்துக்கு சில நன்றிகளை நவில இந்த பதிவை பயன்படுத்திக் கொள்கிறேன் .</div><div><br />
</div><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">அந்த ஆட்டோ வாசகம் தான் என்னை , நானே திரும்பி பார்க்க வைத்தது .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">என்னுள் இருக்கும் ஆணை மட்டும் வைத்துக் கொண்டு ,<br />
</div><div> அவனின் ஆதிக்கத்திலிருந்து மெதுவாக வெளிவர<br />
</div><div>கேள்விக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் .<br />
</div><div>அவனிடம் பதில் தீரும் வரை .<br />
</div><div><br />
</div><br />
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">திடிரென்று எதுவும் நடப்பதில்லை மாற்றமும் , புரட்சியும் .<br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 29px;">இது எல்லாருக்கும் பொருந்தும் .</span><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div>மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.com22