மந்திர ஆசைகள்

1/08/2009

அட கொய்யால , இப்படியா ஏமாத்தறது ?

நாம எழுதிறத யார் பார்க்க போறா ?

இந்த பதிவை யார் படிக்க போறா ?

அதனால நமக்கு என்ன லாபம் .

இப்படி நினைத்து சுமார் 6 மாசம் ஒன்னும் எழுதல. (அதுக்கு முன்னாடியும் ஒன்னும் கிழிக்கல .)
ஒரு வருஷம் இந்த தமிழ் வலை உலகை ஒரு பார்வையாளனாக பார்த்து கொண்டு இருந்தேன் . ஆனால் நீங்கள் நினைப்பதை போல இந்த தமிழ் வலை உலகம் ஒன்றும் உத்தமம் அல்ல . பல வலை உலக பிரம்மாக்கள் செய்யும் ,செய்த உள் குத்துகளை சில சூழ்ச்சிகளை நீங்களும் பயன் படுத்தி நீங்களும் வலை உலக பிரம்மாவாக மாறுங்கள் .

அதில் சில இதோ .

* திடீரென உங்கள் இணைய தளத்தை யாரோ hack செய்து விட்டதாக ஒரு புரளியை கிளப்பி ,அதை யாராவது ஒரு பெரிய வலை புள்ளியின் பெயரை சொல்லி அவரின் புகழை உங்களுக்கு சாதகமாக செய்து கொள்ளுங்கள் ..(இப்போ உங்களுக்கு இட்லி வடை ஞயாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல ).

* ரஜினி, ஞாநி ,வால்பையன் ,தமிழச்சி போன்ற வலை பிரபலங்களை மானா வாரியாக நீங்கள் திட்டுங்கள் . பிடிக்குதோ இல்லையோ கண்டிப்பாக உங்களுக்கு பல பின்னூடங்கள் நிச்சயம் .(நீ என்ன விருந்தாளிக்கு பொறந்தவன ? போன்ற கேள்விகளை தாங்க நீங்க ரெடி என்றால் இது உங்களுக்கு ஓகே )

 *ரொம்ப கேவலமா தலைப்பு கொடுத்து பாருங்களேன் ..உதரணத்திற்கு 16 வயது பெண்ணை 18 தடவை கற்பழித்த 95 வயது வாலிபர் ... சொன்ன நம்ப மாட்டிங்க , கண்டிப்பா பல repeat பார்வையாளர்கள் உங்களுக்கு உண்டு .

*கதை எழுவது ரொம்ப ஈசி . பொண்ணு ,பார்த்தால் ,இளித்தல்,முக்கள் ,முனகல் , அப்புறம் தடவல் ..கொஞ்சம் கருத்து . இது தான் அனைத்து காதல் கதைகளின் சாராம்சம் (நான் எழுதிய கதை உட்பட )

* உங்கள் page counter-ஐ போலியானதாக வைக்கலாம் .. ஒரு நாளில் 1000,2000 என பொய் சொல்ல இது உதவும் ... இது எப்படி சாத்தியம் என்று சின்ன புள்ள தனமா கேட்காதிங்க .Browser Simulator அப்படின்னு சில கணினி மென் பொருட்கள் உண்டு . அதை பயன் படுத்தி உங்கள் page counter-ஐ நீங்கள் 1000,2000,10000 என உயர்த்தி ,நீங்கள் வலை உலக ராஜா என தம்பட்டம் அடித்து கொள்ளலாம் (இப்படி யா ஏமாத்தி கிட்டு இருகாங்க , பாவி பயல்க )

 *உங்களுக்கு ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால் உடனே அவரை பற்றி ஓஹோ வென பாராட்டி ஒரு பதிவு போடுங்கள் ..என்னடா பிடிக்காதவனை பத்தி எதற்கு பதிவு என்று நீங்கள் கேட்டால் ,நீங்கள் இன்னும் அரசியலில் நிறைய கத்துக்கணும் .. முதல்ல பாராட்டி ஒரு பதிவு ..பின் அனானியாக நீங்களே வந்து சும்மா கிழி கிழின்னு கிழிச்சுருங்க .. இப்ப தெரியுதா ஏன் பல பாராட்டு பதிவுகள் வருது என்று ? (அட கொய்யால ....அரசியலில் ரொம்ப தூரம் போவனுமோ )

எப்படி சமர்த்தியம்மாக பின்னூட்டம் இடுவது ...திட்டுவது .... இதை பற்றிய மர்மங்கள் வரும் பதிவில் வலை உலக பிரம்மாக்களின் முகத்திரையை கிழிக்க நீங்களும் பின்னூட்டம் இட்டு சொல்லலாம் tamilsh ல உங்க முத்திரையை குத்திட்டு போங்க


5/10/2008

காதலும் கற்று மற (பாகம் 6) -கடைசி பாகம்


எப்படி பஸ் பிடித்தேன் , எப்போ வீடு போய் சேர்ந்தேன் என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை .


வீட்டில் ஒரே சந்தோசம் . நான் வாங்கி வந்த பரிசு பொருட்கள் விளம்பரப்படுத்திக் கொண்டு இருந்தது என் பாசத்தை ...


என் அக்காவை பெண் பார்த்து சென்றார்கள் . வீட்டின் முதல் கல்யாண விழா . ஆனால் என் மனதிலோ ஒரு உருவமில்லா வலி என் உயிரை மெல்ல குடித்து கொண்டு இருந்தது .


அப்படி என்ன , என்ன இருக்கிறது அவளிடம் என்று நினைத்து கொண்டு இருந்தேன் . பின்னர்தான் தெரிந்தது எனக்கு எல்லாமுமாக அவள் இருகிறாள் என்று .
அவளுடன் ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் .


வேறு வழியில்லை . அவள் தந்த எண்ணையே செல்பேசியில் அழைத்தேன் .. அழகான பெண் குரல் என்னை எச்சரித்தது .. ஆம் .செல்பேசி தற்போது அணைக்கப் பட்டு உள்ளது என்று .

என் காதலின் கடைசி வாயிலும் அடைக்கப்பட்டு விட்டது .


நான் சினிமாவில் உள்ளது போல பெரிய ஹீரோ இல்லை . அதனால் பெரிய நண்பர்கள் வட்டமும் இல்லை .

எனக்கு இருந்த ஒரே ஒரு நட்பிடம் , நண்பனிடம் உதவி கேட்டேன் .


ஆனால் அவனோ
" அப்படி என்னடா பெரிய காதல் . அதுவும் ௨ நாள்ல , கவலையை விடு .அடுத்த தடவை ரயிலில் இன்னொரு காதலி கிடைப்பாள். இதற்கெல்லாம் கவலை படாதே "என்றான் .


நான் அவனிடம் மெதுவாக கேட்டேன் "உன் அம்மா என்று வேறு யாரையாவது உன்னால் ஒத்துக்கொள்ள முடியுமா ? ".


சற்றே என்னுடைய தோள்பட்டையை அழுத்தி அமர்ந்தான் . அந்த அழுத்தம் சொன்னது புரிதலின் ஆழத்தை ..

அடுத்த நாள் காலை , என் நண்பனிடம் இருந்து அழைப்பு ..என் காதலியின் இருப்பிடம் கண்டுபிடிக்க பட்டுவிட்டது என்று .


அவள் வீட்டின் அருகே சென்றோம் .விசாரணையை முழு வீச்சில் நடத்தினான் என் நண்பன் .

விசாரணையின் முடிவில் எனக்கு முடிவு இருக்கிறது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை .


விசாரணையின் முடிவு இதோ
"நேற்றே என்னவளுக்கு பெண் பார்க்கும் படலம் நிறைவு பெற்றது .
அவள் வேறு ஒரு சொந்தத்தின் வீட்டுக்கு அனுப்ப பட்டு விட்டாள்."


என் காதலுக்கு மரண ஓலை வாசிக்கப்பட்டு விட்டது .

பிணமாக வாழ்வது கடினம் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை .


அன்றே தெரிந்து கொண்டேன் சாவை விட வாழ்வு எவ்வளவு கொடியது என்று .

என்னடா இவன் இவ்வளவு ஓவரா பேசுறான் என்று திட்டாதீர்கள் .

ஏனென்றால் மூச்சு விடுவது கூட இப்போது எனக்கு பாரம் தான் .


காதலை முத்தமிட்ட நான் , சாவையும் முத்தமிட துணிந்த போது என்னை தடுமாற செய்தது பாசம் .

அக்காவின் கல்யாணமும் , தங்கையின் வருங்காலமும் என்னை சாவிடம் இருந்து கைப்பற்றியது .


கண்ணதாசனும் , இளையராஜாவும் எனக்கு சொந்தம்மானர்கள் . சோக பாடல்களே எனக்கு தேசிய கீதமாயின .


துக்கம் என் தூக்கத்தை தின்றது .


நான் இப்படி துடிப்பது போல்தானே அவளும் துடித்து கொண்டு இருப்பாள்.


நாயாக பிறந்தால் கூட காதலில் ஜெயித்து இருப்பேன் . பாவம் என்னை மனிதனாக அல்லவா படைத்தது விட்டான் பாவி இறைவன் .


காதலை வைத்து கொண்டு , காதலியை தொலைத்த நான் , மெரினா பீச்சில் என்னை தொலைத்து கொண்டு இருந்தேன் . யாரை பார்த்தாலும் அவளை போலவே இருந்தது .

என் மன நோய்க்கு மருந்தாக அவள் மீண்டும் கிடைபாளா ?.


திடீரென நான் சுவாசித்த அதே குரல் , என்னை மயக்கிய அந்த இசை , எனக்கு மிக அருகிலே கேட்டது ...

ஆஹா என் தேவதை ..

என் சொர்க்கம் .,

என் விடியல் ,

என் வாழ்க்கை என மொத்தமுமாக நின்று கொண்டு இருந்தாள்.


என் தேவதை சிவப்பு நிற புடவை கட்டி இருந்தாள் . மன்னிக்கவும் புடவை அவளை கட்டி கொண்டு இருந்தது .


அடி மேல் அடி வைத்து அவள் முன் நின்றேன் . வரம் தரும் சாமியின் முன் நின்றேன் நான் .


அவள் கண்களில் காதலுக்கு பதில் அதிர்ச்சி . பயம் ..என் மனதை காயமக்கிய அவள் கண்களில் காதல் இல்லையே ????


புரியவில்லை எதுவுமே எனக்கு .


அவள் கண்ணீர் , என் காதலின் எடை தாங்காமல் , அவள் கன்னத்தை
நனைத்து

பின் ..

பின் ...

அவள்.....

அவள் தாலியையும் நனைத்தது ...


இப்போது புரிந்தது எல்லாம் ..


நான் கனவிலும் நினைத்திராத அந்த காட்சி அங்கே மௌனமாக நடைபெற்று கொண்டு இருந்தது .


அவளிடம் எந்த கேள்வியும் கேட்காமல் என் கால்கள் நடக்க துவங்கின .


நான் என்ன கேட்பேன் ?


எப்படி மாறினாள் ?


ஏன் மாறினாள் ?


அவள் கண்களில் அன்று காதலை பார்த்தேனே ! இன்று அந்த காதல் எப்படி மறித்தது ?


உண்மை காதலை மறக்க முடியுமா ?


அப்படி எனில் ஏன் காதல் உண்மை கிடையாதா ?


இவள் இன்னொருவனின் மனைவி . அப்படி எனில் ஏன் காதலி ?


அவளின் நிழலுக்கு கூட நான் தான் எஜமான் என்று நினைத்தேனே ! ஆனால் இப்போது ?


தாயின் கற்பை போல அல்லவா என் காதலையும் நினைத்தேன் . ஆனால் இன்று என் காதல் , கற்பு ????


என்னை நினைத்த மனதில் இன்னொருவனா ? எப்படி முடியும் ? ஆனால் அது தானே நடந்து கொண்டு இருந்தது .


நான் காதலிக்கும் போது உலகமே என்னை கவனிப்பதாக ஒரு கர்வம் . இப்போது நான் இந்த உலகத்தையே கவனிக்க வில்லை ..



பாவம் எதிரே வந்து கொண்டு இருந்த அரசு மன்னிக்கவும் அசுர பேருந்தையும் நான் கவனிக்க வில்லை .




" சின்ன வயசு போலிருக்கு "


" எதாவது பைத்தியமாய் இருக்கும் "


" எவளையாவது சைட் அடிச்சு , இப்படி மாட்டி கொண்டானோ ? "


" இப்பவெல்லாம் இந்த சின்ன பசங்களுக்கு உடேம்பேல்லாம் பண திமிர் . அதான் இப்படி ? "


" தம்பி , உயிர் இருக்கா என்று பாரு "


" யாருய்யா அது .இங்க உடம்பையே காணோம் "


" உடம்பை தூக்கிட்டு பக்கத்தில் இருக்கிற மருத்துவமனைக்கு போலாமா ?"


"எங்க தூக்குகிறது ? பொறுக்கி கிட்டு தான் போகணும் ."


" எங்கப்பா தலையையே காணோம் ?"


" யோவ் , அடங்குயா . பாவம் இந்த சின்ன வயசிலேய சாவு வரணும் ?"


எல்லோருடைய குரலும் எனக்கு கேட்கிறது .

என் அழுகை தான் யாருக்குமே கேட்கவில்லை .


இறந்தப்பினும் , மறக்க முடியாமல் அழுகிறேன் .

இந்த பாவியின் அழுகை என்னவளுக்கு கூட கேட்க வில்லை .



உங்களுக்காவது கேட்கிறதா ??????



(முற்றும்)... கீழே உள்ள Tamilish ஓட்டளிப்பு பட்டையில் உங்க வோட்டை குத்திட்டு போங்க


4/12/2008

காதலும் கற்று மற (பாகம் 5)


அவளை பார்க்க சூரியன் சற்று சீக்கிரமே வந்து விட்டான் . நிலவும் சூரியனும் சந்தித்து கொண்டன . ஆம் . அவள் சூரியனை பார்த்து சோம்பல் முறித்தாள்.


"நல்ல தூக்கம் இல்லையா ?" - அவள் .

" இல்லே , கெட்ட தூக்கம் " - நான்

"அடடா , கலையிலே ஆரம்பிச்சிட்டன்யா " - அவள் .

" இன்னும் ௨ மணி நேரத்திலேயே சென்னை வந்துவிடும் " - என்றது பக்கத்தில் நின்ற பெருசு ..

என்னது ரயில்வே ஒழுங்கா வேலை செய்யுதா ?..
டிக்கெட் இல்லாமல் பஸ்சில் மாட்டிகொண்டது மாதிரி ஒரு அவஸ்தை ...

இதயங்களின் பரிமாற்றத்திற்கு பின் விலாசங்களை பரிமாற்றிகொண்டோம்.அந்த 2 மணி நேரமும் மௌனம்தான் எங்களை பேச வைத்துக்கொண்டு இருந்தது .

சென்னையும் வந்தது ..வில்லனும் வந்தான் . மன்னிக்கவும் வந்தார் .

என்னடா காதல் கதையில் சோகமே இல்லைன்னு நீங்க போருமனது ஆண்டவனுக்கு கேட்டுவிட்டது போல ..

என் உயிரை என்னை கேட்காமலே அழைத்து கொண்டு சென்றார் அவள் அப்பா .

அவள் கண்களில் நான் .
அதனால் கண்ணீர் வெளி நடப்பு செய்தது .

அவள் என்னை பார்த்து கொண்டு இருந்தாள்.அவள் தந்தை என்னையும் , அவளையும் மாறி மாறி பார்த்தார் .என்னை அழைத்தார் .

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை போல ஒரு பார்வை அவரிடம் இருந்து ..

"என்ன காதலா ? " - அக்னி கனலாக கேள்வி அவரிடம் இருந்து .

" ஆமாம் " என்றேன் ஆழமாக .

" இந்த இரண்டு நாளுக்குள் அப்படி என்ன காதல் உங்களுக்கு " -அவர் ."

இரண்டு விநாடி போதும் காதலிக்க " - நான்

" அப்பா ... " என்று அவள் எதோ சொல்ல துவங்க ..

" நிறுத்தும்மா , எதாவது சொல்லாதே . நான் மட்டும் இல்லை நம்ம குடும்பமே தாங்காது " - அவர் .

"இல்லையப்பா .அவர் நல்லவரு " - அவள்

"நாங்க எப்பம்மா கேட்டவங்கள மாறினோம் ? " - அவர் .

அவள் மௌனத்தில் பாசம் தெறித்தது.

" ஏன் தம்பி , அக்கா , தங்கச்சி எல்லாம் உங்களுக்கு இருக்காங்களா ? - அவர் .கண்டிப்பாக பாசம் இல்லை , விசம் இருந்தது அவர் பேச்சில் .

" அவங்களும் இப்படிதானா , 2 நாளுக்குள் யார்கிட்டவது " என்று அவர் முடிக்கும் முன் .

" மரியாதையாக பேசுங்க " -நான் கோபமாக .

" ஏம்பா, உன் கூட பிறந்தவங்களை நான் ஒருத்தன் தப்பா பேசுவது கூட உன்னால தங்க முடியலை . என்னால எப்படிப்பா நான் பெத்த பிள்ளையை " என்று அவர் முடிக்கும் முன் கண்ணீர் முந்தி கொண்டது .

"காதலிப்பது குற்றமா ? " என் கேள்வி .

" எதுக்கு காதல் " - அவரிடமும் கேள்வி ..

" சந்தோசமாக வாழ்வதற்கு " -என் பதில் .

" இப்ப , நீங்க சந்தோசமாக இல்லையா ? - அவர்

" சாவதில் கூட சந்தோசம் தருவது காதல் " - நான்

" வாழ , போராட தெரியாத கோழை யாக்குவது தானே உங்க காதல் " - அவர் "பேசி புரிவதில்லை காதலும் , கடவுளும் " - நான்

" அதே போல்தான் , கடமையும் , பாசமும் " - அவர் .

" ஏன் சார் , காரணமே இல்லாமல் காதலை எதுகிறீங்க ? " நான் .

அவர் " என்னா , பிள்ளைங்களை பெத்தவங்க காதலிக்கிறது தான் . அது சரி நீங்க ஏன் காரணமே இல்லாமல் காதலிகிறீங்க "

" நீங்க உங்க தங்கச்சி , அக்காவுக்கு காதல் கல்யாணம் பண்ணிட்டு வாங்க , நான் ஏன் பொண்ணை தரேன் ." -அவர்

" சார் , நான் நீங்க நெனைக்கிற மாதிரி இல்லை , நான் " - என்று முடிக்கும் முன்

" ராமனகவே இருந்துட்டு போ . ஆனால் என் பொண்ணு உன்னோட சீதா இல்லை .வேண்டாம்மா இந்த உறவு " - அவர்

" அப்பா " என்றாள் கண்ணீருடன் ..மெதுவாக கரைந்து கொண்டு இருந்தது என் காதல் அவள் கண்ணீருடன் .
" ஏன் தம்பி , நான் தந்த 20 வருஷ பாசத்தை விடவா உங்க 2 நாள் காதல் பெருசு ? " - அவர் .
" ஏன் சார் , காதலா , பாசமா என்று போட்டி போடுறீங்க " - நான் .

" அப்பா , அவர் ....அப்பா " - பேச திராணியற்று சிலையனால் என்னவள் .

நிலநடுக்கம் எனக்குள் .

பாதிப்பு அவள் மனதில் .

அவள் நிழல் கூட ரொம்ப நேரம் நிற்கவில்லை அங்கே .
தனிமையை எனக்கு பரிசாக தந்து விட்டு பாசமும் ,காதலும் சென்று விட்டன .

என் கதையை படிக்கிறீங்களே நீங்க எந்த பக்கம் . அது சரி கடவுளே என் பக்கம் இல்லை .நீங்க மட்டும் விதி விலக்கா என்ன..?
என் காதலை தோற்க விட மாட்டேன் .. ஜெயிப்பேன் .. கண்டிப்பாக ..

என் நிழல் கூட நெருக்கம் காட்டவில்லை அந்த ரயில்வே நிலையத்தில் ..
" நந்தி மாதிரி நிக்கிறானே " என்ற யாரோ ஒருவரது திட்டுதான் எனக்கு சொன்னது என் வாழ்நாளில் களவு போயிருந்த 4 மணி நேரத்தை ..

( தொடரும் )