என்னதான் நடக்குது . நான் தெரியாமத்தான் கேட்கிறேன் என்ன நடக்குது ? அரசியல் நடக்குதா இல்லை அராஜகம் நடக்குதா . அப்படி என்ன செய்து விட்டார் .என் கட்சி காரர் நயன்தாரா . எதோ கொஞ்சம் அப்படி ,இப்படி ஆசைப்பட்டு பிரபுதேவாவை லவ் பண்ணிட்டு இருக்கார் . கல்யாணம் கூட பண்ணிக்க போறார் . பிடிச்சா , கலையான பந்தியில் உட்கார்ந்து ஒரு முக்கு முக்கிட்டு போக வேண்டியது தானே . அதுதானையா உலக வழக்கம்.
அதை விட்டுட்டு , சின்ன புள்ளத்தனமா , அடிக்க போறேன் , உதைக்க போறேன் , கல்யாணத்தை நிறுத்தப் போறேன் அப்படின்னு சில எதிர் கட்சிகள் பீதியை கிளப்புறாங்க . கடுபேத்துறாங்க யுவர் ஆனர் .
எனக்கு சுத்தி வளைச்சி பேசத் தெரியாது . டைரெக்டா விசயத்திற்கு வரேன் . நம்ம கைப்புள்ள பிரபு தேவா , பொண்டாட்டி இருக்கும் போதே இன்னொருத்திக் கூட லவ் பண்ணி புதுசா கல்யாணம் பண்ணிக்க போறார் . இதுல என்ன தப்பு ? இதே மாதிரி பொண்ணுங்களும் , புருஷன் இருக்கும் போதே இன்னொருத்தனை லவ் பண்ணி புதுசா கல்யாணம் பண்ணிக்கலாம் . அப்படி பண்ணினால் இந்த நாடு ரொம்ப நல்லா விளங்கிடும் . இது தெரியாம சில நொன்னைகள் , இது குத்தாமாம் , தப்பாம் அப்படி இப்படி
குதிக்கிறாங்க .
இது ஒரு காதல்
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி
- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
-
►
2010
(23)
- ► செப்டம்பர் (3)
-
►
2009
(44)
- ► செப்டம்பர் (2)
Categories
ஆதலால் காதலி
------------------------------
கண்களின்றி
உன்னால் காண முடிந்தால் ,
வார்த்தைகளின்றி
உன்னால் பேசப் முடிந்தால் ,
காற்றின்றி
இதயத்தால் சுவாசிக்க முடிந்தால் ,
உணவின்றி
உன்னால் புசிக்க முடிந்தால்
நீயும் காதலிக்கிறாய் .
சொர்கத்தின் கதவுகளை ,
நரகத்தில் தேடுவதைப் போல .
இனி ,
நண்பர்கள் தான் தெய்வம்
பெற்றோர்கள் தான் எமன் .
தாய்மொழியும் உன்னிடம் தடுமாறும் ,
வெட்கத்தை விலைக் கொடுத்து வாங்குவாய் .
வாழ்ந்து கொண்டே இறக்க தொடங்குவாய் .
வரமாய் நினைத்து சாபம் பெறுவாய் .
ஆனால் ,
முத்தத்தின் ஈரம் காயின் முன் ,
தோல்வி உன்னை தத்து எடுத்தால் ,
நடமாடும் கல்லறைகளில்
நீயும் ஒருவன் .
பொய்
--------------
ஷாஜகான் கூட
எனக்கு பிச்சைகாரன் தான் .
என்னை இங்கு
ஒரு தாஜ்மகால் அல்லவா
காதலிக்கிறது.
சொல்லிவிடு ஒருமுறையேனும்
காதலிக்கவில்லை என்றாவது .
நொடிக்கு ஒருமுறை நிகழும்
மரணம் நிற்கும்
என்னுடன் நிரந்தமாக .
பேசும் கண்களை நீ வரமாய்
பெற்றதால் என்னவோ
ஊமையாய் போய் விட்டன
அத்தனை மொழிகளும் .
சொல்லிவிடு
காதலின் விலையை
செய்கூலி இன்றி தந்து
விடுகிறேன் சேதாரமாக
என் உயிரை
உன் மௌனத்தை
உடைக்கும் அணுகுண்டை
தேடி கொண்டு இருக்கிறேன்
என் காதலின் ஆய்வகத்தில் .
எல்லாரும் ஏன் காதலிக்கிறார்கள் என்று என் ஒரு பக்க மூளை கேட்டது ?
இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது ? என்று கேள்வி வந்து விழுந்தது .
Homely பொண்ணுங்களை காதலிக்கலாமா இல்லை, மாடர்ன் பொண்ணுங்களை காதலிக்கலாமா என்று அடுத்த கேள்வி .
ஹோமேலி பொண்ணுங்களை காதலிக்கலாம் என்றால் மாடர்ன் பொண்ணுங்க நல்லவங்க இல்லையா என்று இன்னொரு கேள்வி .
ரெண்டும் சேர்ந்து ஒரு பொண்ணை பார்த்து காதலிக்கலாம் என்றால் , அவளை எங்கு பார்ப்பது என்று கேள்வி .
கோவில் என்றால் ஒரே homely , pub என்றால் ஒரே மாடர்ன் . ரெண்டும் சேர்ந்த ஒரு பொண்ணை ஆபீஸ்ல காதலிக்கலாம் என்றால்
வேறு யாரையாவது அவள் காதல் செய்கிறாளா என்று திடீர் கேள்வி .
காதலை சொன்னப்பின் என் காதலை ஒத்துக் கொள்வாளா என்று அடுத்தக் கேள்வி .
ஒத்துகொண்டப்பின் பின் காதல் ,கல்யாணத்தில் போய் முடியுமா என்று சந்தேக கேள்வி .
கல்யாணம் என்றால் பெற்றோர் சம்மதத்துடன் இல்ல ஓடிப் போய் கல்யாணமா என்று பயங்கரக் கேள்வி .
கல்யாணம் செய்தப்பின் காதலிக்க முடியுமா என்று கேவலமான கேள்வி .
பதில் தெரியாததால் நான் இது வரை காதலிக்க வில்லை .
போதுமா , போதுமா ..
இனிமே எவனாவது , மச்சி அப்புறம் உன் ஆளு என்ன சொல்றா ?
அப்படின்னு கேட்டீங்க ...!!!@@#$$$
ஏன்டா இப்படி , ஒருத்தனை அழ வச்சி பார்ப்பதில் நம்ம தமிழர்கள் தான் பெஸ்ட் ..
டிஸ்கி : இப்போதைக்கு விஸ்க்கி ,
அப்புறம் உங்களை மீட் பண்றேன் .
விசத்தின் சுவை அறிந்த உயிருள்ள கடைசி மனிதன் நானாகத் தான் இருப்பேன் .
நான் ஏன் சாக வேண்டும் ?
அதோ யாரோ கதவை தட்டுகிறார்கள் ?
இல்லை என் நண்பர்கள் ..
வேண்டாம் , என்னை விடுங்கடா ..
ஏன் இந்த நித்திரை மயக்கம்?
நான் எதோ முனகுவாதாக மற்றவர்கள் நெனைக்கலாம் . உங்களுக்கு புரியும் என்று நான் நம்புகிறேன் .
சாவதற்கு யாருக்கு பிடிக்கும்? .
முத்த சத்தத்தில் காதலை விரட்டி விரகத்தில் விபச்சாரம் பண்ணும் "மெரீனா பீச் " காதலுக்காக ஒன்றும் நான் சாக விரும்ப வில்லை .
பிரியா , என் பிரியா . எனக்காக வாழ்ந்த பிரியா ..
வாழ்க்கையை வாழ காற்றுக் கொடுத்த என் பிரியா .
இரண்டு மாதம் முன் வரை, என் முன் இருந்தாள்.
இப்போது எனக்குள் இருக்கிறாள் .
குழந்தைக்காக குழந்தையாய் இருந்தாள் .
" பிரியா , நீ எவ்வளவு அழகு தெரியுமா ?
அடி விழும் , ரெண்டே ரெண்டுதான் .. "இது அவள் .
"இல்லை செல்லம் ,...அது வந்து " நான் நெருங்கும் முன் ..
"பார்த்தியாடா .. உங்க அப்பாவை .. நீ கொஞ்சம் அவரை கண்டித்து வைக்கணும் " என்று தன் வயிற்றை தடவி சொன்னாள்.
"அவன் அப்பன் பிள்ளை . எனக்கு தான் அவன் சப்போர்ட் செய்வான் . பாரேன் .."
"என் செல்லம் , அப்படி எல்லாம் செய்யாது .. " என்று உதட்டை பிதுக்கி விட்டு சென்றாள்
இப்படி இருந்தவள் , எப்படி என்னை விட்டு பிரியலாம் ?
யார் செய்த தப்பு ..
மழை வந்தது தவறா ?
என்னவளின் கடைசி கதறல் எப்படி இருந்து இருக்கும் ?
"சிகரட் " துண்டுக்கு சொந்தக்காரன் யார் ?
பல லட்சம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் நாயா ?
ஆட்டோ காரனா ?


