இது கண்டிப்பாக பெண்களுக்கான பதிவு இல்லை . வழக்கம் போல இது ஒரு புலம்பல் பதிவு தான் .சுற்றி வளைத்து பேச விரும்பலை.நான் டிரெக்டா கேட்குறேன் . நானும் கொஞ்ச நாளாவே பார்க்குறேன் .
பெண்களே ஜாக்கிரதை ..
வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் கதை ..
பெண்களின் கவனத்திற்கு ..
அப்படி , இப்படி ன்னு திடிரென பல பதிவுகள் . எல்லாமே பெண்களை காக்க, எழுதப்பட்ட பதிவுகள் . உண்மையில் இந்த பதிவுகள் சொல்லித்தரும் நிலையிலா பெண் பதிவர்கள் / இணைய விரும்பிகள் உள்ளார்கள் ? அவுங்க எப்பவுமே உசார் தான் தலைவா ..
இன்னும் சொல்ல போனால் , அவுங்களுக்கு எதுவுமே தெரியாது என்று நினைப்புதுதான் அறியாமை , மொள்ள மாரித்தனம் . கேனத்தனம்..
சாருவுக்கே சாறு எடுக்கும் நிலைக்கு பெண்கள் இருக்கும் போது ,அவுங்களுக்கு இந்த அட்வைஸ் எல்லாம் தேவையா ..பேசாமல் சாரு வுக்கு வேண்டுமானால் அட்வைஸ் கொடுக்கலாம் . (பெண்களை கரெக்ட் செய்வது எப்படி ?? ).என்னமா எமொசன்ஸ்(@!#!) கொடுத்து கெஞ்சியும் பாவம் சாரு வுக்கு வொர்க் அவுட் ஆகலை ..
இணையத்துடன் தொடர்பிலாமல் இருக்கும் பெண்களுக்கு தான் விழிப்புணர்வு தேவை .. ஐயோ ஐயோ அதற்கும் எதாவது பதிவு எழுதாதீங்க.
இந்த உலகில் கண்ணகியும் இல்லை , ராமனும் இல்லை என்பதுதான் உண்மை . எந்த அளவுக்கு நாம் ஒழுக்கமாக இருக்கிறோம் என்கிற விகிதாசாரம் வேண்டுமானால் மாறுமே தவிர , எவனும் எங்கும் முழுவதுமாக உண்மையாக இருப்பதில்லை .
பெண்கள் இங்கு சாட் செய்து பிரச்சினையில் மாட்டிகொண்டார்கள் என்பது எல்லாம் வாதமே இல்லை . அவர்கள் நேரில் சந்தித்து பேசி இருந்தாலும் இதே பிரச்சினைதான் வரும் . காரணம் ஆண்கள் தான் தவிர ,இணையம் அல்ல . அட பாவிகளா ,உங்களை மாதிரியே என்னையும் பேச வச்சிடீங்களே..
இணையத்தை தாண்டி பெண்களை காப்பாத்த ,முயற்சி பண்ண நாம் , என்ன செய்து இருக்கோம் என்று கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து விட்டத்தை வெறித்து பார்த்து யோசிச்சிட்டு அப்புறமா எதாவது எழுதுங்க .. நாங்களும் Me the first . சூப்பர் ,கலக்குங்க ..அப்படின்னு சொல்லி " இணைய நவீன பாரதி " என்ற பட்டமும் தருகிறோம் ..
அது சரி , இப்போ நமிதா எந்த தமிழ் படத்துலேயும் நடிக்கலேயே , என்ன காரணமோ ?
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி
- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
-
►
2010
(23)
- ► செப்டம்பர் (3)
-
►
2009
(44)
- ► செப்டம்பர் (2)
Categories
வெந்து தணியும் இந்த பதிவுலகில் , நானும் ஒரு பதிவர் என்று சொல்ல தைரியம் இன்றி தொலைந்து தான் போனேன் . எதை எழுதி என்னத்த கிழிக்க போகிறோம் என்று என்னை ஒரு சீர்த்திருத்த வாதியாய் கொண்டிருந்த பிம்பம் உடைந்தது கூட ஒரு காரணம்.
எதற்க்காக எழுதுகிறோம் ?
ஹிட் வாங்க ..
பின்னூட்டம் வாங்க ..
அங்கீகாரம் வாங்க ..
இப்படி பலவற்றை நான் வாங்க முயற்சி செய்ததா ?
இதில் எதுவுமே பெரியதாக வாங்க முடியவில்லை என்ற சுய பச்சத்தானமா ? சுயசொறிதல் செய்ய தெரியாத கோழையா ?
இப்படி எல்லாம் கேள்வி எழுப்பி , சிந்தித்து பார்த்து ஆணியே புடுங்க வேண்டாம் என்று எல்லாத்துக்கும் ஒரு கும்பிடு போட்டு ஒதுங்கி போனேன் .
எப்போதெல்லாம் வெறுமை வரும் போது, எதாவது கிறுக்கி தொலைலாம் என்ற எண்ணம் வருவது இயற்கை. என்னை புதுபித்துக் கொள்ள இந்த உலகம் எதையும் தர மனமில்லாத போது ,நான் தடுமாடுகிறேன் . Chat Box -ல் நண்பர்கள் எப்போதும் பச்சையில் ஒளிர்கிறார்கள் .
How r U?
What abt job ?
great ..
cool .lol ..
I m fine .same .
வார்த்தைகள் மாறினாலும் அர்த்தம் மாறவில்லை . சொல்லாமல் விலகி போதல் இப்போது நல்ல நாகரீகம் போல . தனிமை என்னை தத்து எடுக்கும் போது , என்னை உயிர் பிக்க என்ன செய்ய ?
யாருக்காகவும் எழுத வேண்டாம் . எனக்காக , நானே என்னை திடப்படுத்தி கொள்ள எழுதலாம் என்று வந்து இருக்கிறேன் .
பத்தோடு பதினொன்றாக என்னையும் கண்டு ஒதுங்கி செல்லுங்கள் . என்னை போன்ற விட்டில் பூச்சிகள் எப்போதும் பறந்து கொண்டு தான் இருக்கின்றன .
பெரியாரின் பக்தகோடிகளே என்னை ஆள் வைத்து திட்டுவதற்க்கோ , பின்னுட்டத்தில் பின்னி எடுப்பதற்கோ நானோ , இந்த பதிவோ வொர்த் இல்லை என்பதை எச்சரிக்கையாக சொல்லிகொள்கிறேன் .(நான் என்னை சொல்லிகிட்டேன் )
நான் கடவுள் மறுப்பாளான் தான் . ஆனால் "ஆம்புளைக்கும் ஆம்புளைக்கும் பொறந்தவன் தான் ஐயப்பன் " என்று சொல்லும் கூட்டத்தில் நான் ஒருத்தன் அல்ல . இந்த பதிவுலகத்தில் கடவுள் மறுப்பு என்பது விவாத பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறது .
பதில் தெரியாத கேள்விகளை கேட்டு ,
"உன்னை விட நான் அறிவாளி .பார், என்னிடம் நீ தோற்று விட்டாய் " என்று மெச்சிக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள் .
எனக்கு கடவுளை பிடிக்காது . பெரியாரின் கருத்துகள் பிடிக்கும் . ஆனால் அவரின் சில கருத்துகளை என்னால் ஏற்க இயலாது . அவரே கூறியது போல "நான் சொல்லவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயம் இல்லை . உங்களுக்கு தேவையானதை பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ளுங்கள் " .இதை நான் அப்படியே கடைபிடிக்கிறேன் .
கடவுள் மறுப்பாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ? , முழுமையாக அவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் தானா ? . இதில் 3௦% பேர் , நான் அந்த புத்ததகத்தில் படித்தேன் ,இந்த புத்ததகத்தில் படித்தேன், அதான் எனக்கு கடவுளை பிடிக்காது . இவர்களுக்கு இன்னொரு புத்தகம் போதும் கடவுள் இருக்கிறார் என்று நம்ப வைப்பதற்கு .
சிலர் அதீத வெறுப்பால் கடவுள் மறுப்பாளர்கள் என சொல்லிகொள்கிறார்கள் . அவர்கள் கேட்டதோ ,இல்லை அவர்களுக்கு பிரியமான ஒன்றை இழந்ததலோ இப்படி மாறுகிறார்கள் . இவர்கள்தான் விவாதத்தில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள் . திடிரென இவர்களுக்கு பிடித்தமானவருக்கு எதாவது ஆகிவிட்டால் , மீண்டும் கடவுளை நாடி செல்வார்கள் என்பது உறுதி .
இவர்களை எல்லாம் தாண்டி ஒரு சிறு கூட்டம் உள்ளது . அது தான் உண்மையில் கடவுள் மறுப்பை எந்த வித புறத் தூண்டல் இன்றி தனக்கு தோன்றிய கேள்விகளுக்கு விடையாக கடவுள் மறுப்பை தேர்ந்து எடுத்துக் கொண்டவர்கள் .இந்த கூட்டத்தில் கலக்கவே நானும் அனு தினமும் ஏன் கேள்வி தீயை அணையாமல் பார்த்துக் கொள்கிறேன் .
எனக்குள் சில வருடங்களுக்கு முன் தோன்றிய கேள்விகளை பல நுறு பேருகளிடம் (பதிவுலகில் கூட ) கேட்டு அவர்களின் தேடுதலை உணர்ந்து இருக்கிறேன் . என்னை பொறுத்தவரை ,கடவுள் என்ற கோட்பாடுகளில் அடங்கி , நான் கடவுளாக பார்ப்பது இயற்கையை மட்டுமே . மற்ற எந்த மத கடவுளையும் என் மனம் ஏற்க்க மறுக்கிறது.
இப்படி வாய் கிழிய பேசுற நீ , ஏன் இப்படி "எனக்கு கடவுள் வேண்டும்" என்று தலைப்பு வைத்தாய் வெண்ணை , என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது . அதான் சொல்லுவோம்ல ..
இனி நான் சொல்வதை மந்திரனாக மட்டுமே பார்க்க வேண்டும் .
இது என் தனிப்பட்ட பாதிப்பு . பார்வை .
ஒரு வேளை, கடவுள் என்ற கொள்கை இல்லை என்றால் எப்படி இருந்திருக்கும் இந்த உலகம் ? . பெரியார் என்ற ஒருவர் நமக்கு கிடைத்து இருக்க மாட்டார் .அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .
சாமிக்கு என்று சொல்லி விரதம் இருந்து , வடை சுடும் அம்மாவிற்கு தெரியாமல் அதனை திருடி திங்கும் திரில் எனக்கு கிடைத்து இருக்காது . அதில் தம்பிக்கு கொஞ்சம் லஞ்சம் கொடுத்து , அவனையும் திருட சொல்லி , அதே சமயம் அம்மாவிடம் போட்டுக் கொடுத்து பின் சிரிக்கும் அந்த வில்லன் சிரிப்பு எனக்கு தெரியாமல் போயி இருக்கும் .அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .
சாமிக்கு என்று சொல்லி , தலை கூட துவட்டமால் சாமிக்கு படையல் செய்ய அம்மா , காய்கறி வெட்டும் போது, அம்மா பாவம் என்று சொல்லி என் சின்னக் கைகளால் தலை துவட்டி விடும் போது . அம்மா , "என் செல்லம் . இப்படி வாடா" என்று சொல்லி கொடுக்கும் அந்த முத்தம் கிடைத்து இருக்காது.அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .
தீபாவளி , பொங்கல் அன்று தான் வித வித சமையல் ,சக்கரை பொங்கல் , பட்டாசு அது , இது என்று ஒரு சந்தோஷ மயக்கம் இருக்கும் . எப்போது வேண்டுமானாலும் ,சக்கரை பொங்கல் சாப்பிடலாம் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் சக்கரை பொங்கல் கூட தினம் சாப்பிடும் இட்லி போல மதிப்பிழந்து இருக்கும் . பண்டிகைகள் எந்த மூட நம்பிக்கையின் பெயரால் இருந்தாலும் அது குழந்தைகளுக்கு தரும் சந்தோசம் தனி. அதற்காக எனக்கு கடவுள் வேண்டும் .
முதுமையின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு , வறுமையின் விளிம்பில் வாடுபவர்களுக்கு சமுதாயம் தந்த கொடை ,"தனிமை" . பேசக் கூட யாரும் இல்லாத அனாதைகளாக திரியும் அவர்களுக்கு கல் என்றாலும் , கடவுள் சிலை முன் மண்டியிட்டு விழியோரம் கண்ணீரோடு முறையிடும் அவர்களுக்கு சிறு பாரம் மனதில் குறைந்தால் அந்த கடவுள் வேண்டும் எனக்கு .
கடவுள் நம்பிக்கை இல்லை எனில் தமிழ் நாட்டில் எந்த கோவில்களும் இல்லை. அப்படி எனில் ,நான் எங்கு போயி ராஜா ராஜா சோழனை பற்றி வியப்பது ? என் மூதாதையரின் கலை தாகத்தை எப்படி சொல்வது மற்றவர்களுக்கு ?
எனக்கு மாதா கோவில் குளிர்ச்சி பிடிக்கும் . அதன் அமைதிக்கு நான் அடிமை . ஒரு பொம்மைக்கு கட்டு பட்டு எப்படி ஒரு மனித கூட்டம் அமைதியாக செல்கிறது என்ற ஆச்சர்யம் வேண்டும் எனக்கு . நான் கோவில்களில் கடவுளை காண்கிறேன் . ஆம் , கடவுளை படைத்த மனித கடவுள்களை காண்கிறேன் . அவர்களின் உழைப்பை வியக்கிறேன் . இதற்காக எனக்கு கடவுள் வேண்டும் .
குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை .
நான் திராவிடன் இல்லை .
ஆரியன் இல்லை .
மனிதன் .
உலக தொலைக்கட்சிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும்
"பாப்பா போட்ட தாழ்பாள்" என்ற படத்தில் சுவாமி நித்தியானந்தா தன் வசிகர சிரிப்பால் நம் உள்ளம் கவர்ந்து உள்ளார் . "ர" நடிகை ,அவர்கள் தன் நடிப்பு திறன் அனைத்தையும் அப்படியே தந்து உள்ளார் .
படத்தில் இருந்து சில காட்சிகள் .
நித்தி : பெண்ணே , அடி பெண்ணே
"ர" நடிகை : சுவாமி , எந்தன் சுவாமி .
நித்தி : உலக வாழ்க்கையில் எந்த பற்றுதலும் இருக்க கூடாது அன்பே .
"ர" நடிகை : சென்ற வாரம் , நீங்கள் "ப" நடிகையுடன் இருந்ததை பற்றி சொல்கிறீர்களா , சுவாமி .
நித்தி : க க க போ
"ர" நடிகை : தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .
நித்தி : சகியே , உனக்கு என்ன வேண்டும் ,கேள் .
"ர" நடிகை : நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் .
நித்தி : த தா ஸ் து ...
நித்தி : நான் பெண்களுக்கு சம மரியாதை கொடுப்பவன் ,அதான்
"ர" நடிகை : அதான் தெரிகிறதே , சுவாமி .
நித்தி : புலன் அடக்கம் முக்கியம் பெண்ணே .
"ர" நடிகை : சுவாமி , விளக்கை அணைக்க வேண்டுமா ?
நித்தி : அதற்க்கு முன் , இமயமலையில் இருந்து கொண்டு வந்த அந்த மாத்திரை எங்கே கண்ணே ?
"ர" நடிகை : அது எதற்கு சுவாமி ?
நித்தி : அது குண்டலினி சக்தியை தூண்டி ,
"ர" நடிகை : அப்படி எனில் ,தங்களுக்கு 4 ,5 தேவை படும் என்று நினைக்கிறன் சுவாமி .
படத்தின் பின்னணி இசை மெய் சிலிர்க்க வைக்கிறது . அதுவும் அந்த " கட்டி புடி , கட்டி புடிடா " என்ற பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடல மாற வாய்ப்புஇருக்கிறது .
இப்படி படம் முழுவதும் யதார்த்தம் குவிந்து கிடக்கிறது . குமுதத்தில் "கதவை மூடு , கேமரா வரட்டும்" என்ற தலைப்பில் இந்த படத்தை பற்றிய விமர்சனங்கள் குவிந்து கிடக்கின்றன . இப்படத்திற்கு டிக்கெட் கிடைப்பது சற்று கடினமே .
திருட்டு வி சி டி , டி வி டி போன்றவறில் மட்டும் இப்படத்தை பார்க்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன் .
என்னையும் தொடர் பதிவு எழுத சொல்லி மேலும் பாவம் சேர்க்கும் மீன்துள்ளியானுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் . சரி இப்படி சொல்லி தப்பிக்க முடியாது என்று தெரியும் . ஆனால் என்ன எழுதுவது ? என் பதின்ம வயது அனுபவத்தை தெரிந்துக் கொள்ள வேண்டியது உலகின் முக்கிய கடமை ஆதலால் தொடர்கிறேன் .
சினிமாக்களில் வருவானே கதாநாயகன் ,அவன் நமக்கு முக்கியம் இல்லை அவன் கூட சில அல்லகைகள் கடைசி வரை அல்லகைகலாக இருக்குமே அந்த வகை நான் . ஆனால் நான் கொஞ்சம் ஸ்பெஷல் . ஹீரோவிற்கு பாடத்தில் சந்தேகம் வந்தால் மட்டுமே உதவும் குணசித்திர வேஷம் எனக்கு .
பருவ கிளர்ச்சிகளுக்கு துளியும் இடம் தராமல் வாழ்ந்து வந்த வாழும் சரித்திரம் நான் . நம்புக்கப்பா . ஏனென்றால் எனக்கு சொல்லப்பட்ட , படித்துவுடன் கெடைக்கும் வேலைகள் மூன்று .
டாக்டர் , இஞ்சினியர் , பொட்டலம் போடும் மளிகை கடை தொழிலாளி .
எப்போதெல்லாம் 95% இருந்து 85% என்னுடைய மதிப்பெண் குறைகிறதோ அப்போதெல்லாம் இந்த மூன்றாவது வேலைத்தான் கிடைக்கும் என்று தினமும் ,தின நொடியும் அர்ச்சிக்கப்பட்டது . மளிகை கடையில் வேலை பார்பவர்கள் எல்லாரும் 85% வாங்கியவர்கள் போல என்று நான் வருத்தப்பட்டது உண்டு .
பொதுவாக அந்த வயதில் , பாராட்டுக்காக முழு மனதும் அரிக்கும் . என்ன செய்வது ?, ஆசியர்கள் எல்லாரும் 1,2,3 இடங்களில் வரும் மாணவர்களை தான் பாராட்டுவார்கள் . ஆனால் என்னை போன்ற 7,8 வது இடங்களில் வருபவனை இந்த உலகம் தன் புறங்கையால் தள்ளித்தான் விடும் .
ஏதாவது கூட படிக்கும் பெண்களுடன் ஒரு வார்த்தை பேசினால் மனசு அப்படி அடித்துக்கொள்ளும் . ஆண்ட்ரோஜென் ,ஈஸ்ட்ரோஜென் கெமிஸ்ட்ரி என்று அமரர் சுஜாதா சொல்லியவாறு எல்லாம் தாறுமாறாக வேலை செய்தது .
என்ன பிரயோஜனம் , ம்கும் ..முக்கும் . விடுங்க பாஸ் .
இந்த பொண்ணுகளே இப்படித்தான் என்று புலம்பிவிட்டு நாட்டமையாக வலம் வந்து கொண்டு இருந்தேன் .
திட்டுகள் மட்டுமே பரிசாக கிடைத்த ஒரு நாளில் , பள்ளி ஆண்டு விழா . பக்கத்தில் இருக்கும் ஹீரோவிடம் நான் சொன்னேன் ,நானும் +2 வில் பரிசு வாங்குவேன் என்று .
போடா , போ , எந்த படத்துல இந்த காமெடி , சொல்லவே வில்லை என்று சிரிப்பு . உள்ளுக்குள் நொறுங்கித்தான் போனேன் .
தொடையை தட்டி பேச நான் ஒன்றும் ஹீரோ இல்லையே . கண்ணீரை கண்ணுக்குளே சிறை வைத்தேன் . அது வெளியேறியது +2 வில் நான் கலெக்டரிடம் தங்க மெடல் வாங்கும் போது தான் . பரிசு என்ற கானல் நீர் முதன் முதலில் என் கையில் விழுந்தது .
பள்ளி கூடத்து நட்பு என்பது பருவ பெண்ணை பார்ப்பது மாதிரி . எப்போதும் மகிழ்ச்சித்தான் , சிரிப்புதான் . கிளர்ச்சித்தான் . ஆனால் அது பின்னர் நிலைக்க முடியாமல் போவதற்கும் அதுவே காரணமாகிறது . இப்போதும் எங்கு பார்த்தாலும் பேசிக் கொள்கிறோம் ,ஆனால் மனதில் ஒரு மெல்லிய திரையோடு .
கல்லுரி கால வாழ்க்கை குணசித்திர வேசத்தில் இருந்து இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக மாற்றியது .ஆனால் இன்னும் ஹீரோவாக முடியவில்லை . அரசியல் , அரசியல் அதை நான் கற்றுக்கொண்டது கல்லூரியில் தான் .
பொதுவாக கல்லூரியில் இரண்டு குருப்புத்தான் . ஒன்னு கடலை போடும் , இன்னொன்று கடலை போடாது .என்னென்றால் எங்களுக்கு தெரியாது , முடியாது .
நான் இரண்டாவது குருப் . ஒரு சின்ன ரவுடியாக வலம் வரும் ஆசை கொஞ்சம் நடந்தேறியது . உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த கெட்ட வார்த்தைகளையும் ஒரு சேர நண்பர்களுக்குள் புன்னகையுடன் திட்டிக்கொள்வோம் . அவனை(நண்பனை ) நான் கேவலமா திட்டுவேன் , அவன் என்னை ரொம்ப கேவலமா திட்டுவான் . இதை ஒரு விளையாட்டாகவே நாங்க செய்வோம் .
சோதனை காலம் என்றால் அது Placement காலம் தான் . என்னுடைய ஆங்கில புலமையை பார்த்து , அருவி என கொட்டும் ஆங்கில அறிவை பார்த்து மிரண்டு எனக்கு ஒரு நிறுவனமும் வேலை தரவில்லை . இந்த தமிழ் மீடியம் படித்து வருத்தப்பட்டது அப்போதுதான் . மெதுவாக ,என் தன்னம்பிக்கை குறைய தொடங்கியது . முதல் 3 நிறுவனங்களில் நண்பர்கள் எல்லாருக்கும் வேலை கிடைத்துவிட நான் மட்டும் தனி மரமானேன் . வாழ்க்கையை பார்த்து பயம் பழக தொடங்கினேன் . தொடர் முயற்சிகள் என்னை அயர்ச்சி அடைய மட்டுமே செய்தன . தீண்டாமையை எனக்குள்ளே நானே உருவாக்கி கொண்டேன் . ஒரு நாள் , அந்த நாள் மீண்டும் முயற்சி செய்து தோல்வியை சந்தித்தேன் .
அறையில் தனியே ,என் தலையணை மெதுவாக கண்ணீரால் நனைந்து கொண்டு இருந்த்தது . வாய் விட்டு அழ முடிய வில்லை .
நண்பன் ஒருவன் வந்தான் . கண்ணை மூடிய நிலையில் நான் .
"டேய் , நீ அழ வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் . நல்ல அழு . அழு .ஆனால் இது தான் நீ கடைசியா அழுவது என்று முடிவெடுத்து விட்டு அழு . "
கண்ணை திறந்து பார்த்தேன் . எதுவும் பேச வில்லை . அது தான் நான் கடைசியாக் அழுதது . அடுத்த சில நாட்களில் ,என் கைகளில் வேலை .
இன்றும் சோதனை வரும் போது ,அந்த வார்த்தைகளை நினைத்துக் கொள்வேன் .கல்லுரி கால நட்பு எனக்கு ஒரு வரபிரசாதம் ."மாப்ள , 20,000 அக்கௌண்டுக்கு அனுப்பிடு " , என்று சொன்னால் அடுத்த 5 வது நிமிடம் பணம் வந்து விடும் . இப்படி ஒரு நம்பிக்கையை என்னை பற்றி மற்றவர்களிடம் ஏற்படுத்தியது கல்லுரி . ஆரம்பிக்க தெரிந்த எனக்கு முடிக்க தெரியவில்லை . முடிவில்லா வானம் போல் ,நட்பும் தொடரட்டும் .
என்னை வம்புக்கு இழுத்த மாதிரி , நானும் இரண்டு பேரை கூவிக் கொள்கிறேன் .
புவன் (சுட்டப்பழம் )
குந்தவை
மேற்ப்படி பெரிய எழுத்தாளர்கள் ,நான் சொன்ன படி "பதின்மம் " பற்றி தொடர் பதிவு எழுத வில்லை என்றால் , கடுமையான் பின் விளைவுகள் வரும் என்று இப்போதே கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் .
இயலாமையின் வெளிபாடு கோபம் . அதனை தனிப்பதர்ககாக நான் அடிக்கடி செல்லும் இடம் அண்ணாச்சி டீ கடை .
அந்த கசங்கிய நாளிதழ்கள் , சுட சுட வடை ,அந்த பக்கம் இருக்கிற லேடிஸ் ஹாஸ்டல் இது எல்லாம் தேவைபடுகிறது ஒண்ணுக்கும் உதாவத இந்த கோவத்திற்கு .
அன்றும் மற்றொரு நாளே . வழக்கம் போல டீ கடை நோக்கி என் கோப பயணம் சென்றது .
மிக பரிதாபமாக ஒரு ஜீவன் , இல்லை ,இல்லை ஒரு " நாய்" ஜீவன் என்னை முறைத்து பார்த்து கொண்டு இருந்தது . நாங்க எல்லாம் யாரு ? அப்படியே முறைச்சிகிட்டே பின்னாடி நடந்து அண்ணாச்சி கடைகிட்டே வந்து சேர்ந்தேன் .
அப்பவும் அந்த நாய் என்னையே முறைசிகிட்டே இருந்தது . என்னது தொப்புளை சுத்தி 16 ஊசியா ? என் உள் மனம் கேள்வி கேட்க துவங்கியது .
அப்போது தான், ஒரு 5 அல்லது 6 நாய் குட்டிகள் அதன் அம்மாவை சூழ்ந்து கொண்டன . ஆனால், அந்த நாய் , அந்த குட்டிகளை தள்ளி விட்டு என்னை நோக்கி மெதுவாக வரத் துவங்கியது .
திடிரென நின்றது . குட்டிகள் பால் குடிக்க துவங்கின . ஆனால், அந்த நாய் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோட இருக்கும் என்பது போல ரொம்ப பலவீனமாக இருந்தது .
மீண்டும் அந்த நாய் , என்னை நோக்கி வரத் துவங்கியது . அப்போதுதான் கவனித்தேன் ஒன்றை . அதன் அமுத சுரபியில் இருந்து ரத்தம் வடிந்தது கொண்டு இருந்தது .ஏனோ "ஆயரத்தில் ஒருவன் " படம் மனதில் வந்து போனது .
நான் ஒரு பன்னை வாங்கி அதற்க்கு வைத்தேன் , ரொம்ப பசி போல . லபக் லபக் . முடிந்தது எல்லாம் . எனக்கு ஒரு நன்றி பார்வை பரிசளித்தது .
டீ கடை அண்ணாச்சிக்கு உடனே ரொம்ப கோபம் ,
" இந்த சனியன் திரும்பவம் வந்துடுச்சா !!!???..
டேய் அந்த கட்டையை எடுடா .."
எனக்கு இதயம் மிக வேகமாக துடிக்க துவங்கியது .
சரியாக தூக்கி எறியப்பட்ட அந்த கட்டை அந்த நாயின் தலை மற்றும் அதன் ஒரு குட்டியின் காலையும் பதம் பார்த்தது . கண்டிப்பாக ரத்தம் வந்து இருக்கும் .
அந்த நாய் , அடி வாங்கிய அந்த குட்டியை நக்கி கொண்டே நகர்ந்து சென்றது .
நான் திரும்பிக் கொண்டேன் .
ஈன சுரத்தில் அது கத்திக் கொண்டே நடந்து கொண்டிருந்தது . எதோ ஜென்ம பந்தம் போல , என்னால் டீ குடிக்க முடியவில்லை .
இன்னும் ரெண்டு பன் வாங்கினேன் . கால்கள் நடக்க துவங்கின அந்த நாயை நோக்கி . மன்னிக்கவும் அந்த தாயை நோக்கி .
ஏன் டீ , அங்க எவனை பார்த்து பல்ல காண்பிச்சு மயக்குற ? புருசனின் குரல் காதில் விழுந்தாலும் மெதுவாகவே அவள் திரும்பினாள்.
பழக்கப்பட்ட வார்த்தைகள் அவளிடம் பலம் இழந்து போயின.
விஷம் தெளித்த வார்த்தைகளை தாங்கி கொண்டு வெளியில் இருந்து வீட்டினுள் அடைப்பட்டாள்.
என்னடி , நான் இவ்வளவு கத்தியும் , துளியும் அசையாமல் எருமை மாடு மாதிரி நிக்குற ?
வழக்கம் போல அவள் கண்களில் கண்ணீர் .
என்னடி பத்தினி வே ஷம் போடுற , முதல் ராத்திரில்லே என்க்கிட்டையே நீ ஒருத்தனை லவ் பண்ணினேன்னு சொன்னவள் தானே ..!
கணவனிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததற்கு தினம் தினம் பரிசு மழை அவளுக்கு .
என்னய்யா , இவ்வளவு லேட்டா வருகிறாய் ? சரி , சரி சீக்கிரம் வண்டியை கிளப்பு , போகலாம் .
அவன் வெளியேறினான் . அவன் இட்ட வடுக்கள் மட்டும் இவளுடன் .
மாலை , வில்லனுடன் அவன் நண்பனும் வந்தான் .
டேய் ரகு , என்னோட மனைவியை நீ பார்த்தது இல்லைல. இரு நான் கூப்பிடுறேன் .
அவன் கூப்பிடுவதற்க்குள் , அவளே அங்கு பயந்து நிற்க
உடனே ரகு , தேவதை மாதிரி உனக்கு மனைவிடா , நீ ரொம்ப கொடுத்து வைததவன்டா.
நன்றி . சரி என்ன குடிக்க வேணும் உனக்கு ?
நான் வேண்டுமென்றால் காப்பி கொண்டு வரட்டா என்று அவள் அப்பாவியாக கேட்க .
சிரித்து கொண்டே சரி என்றான் ரகு .
பின் அவள் கணவனிடம் , விருந்தாளிக்கு என்ன பிடிக்கும் என்று உன் மனைவிக்கு நன்றாக தெரிகிறது என்று பாராட்டினான் .
ரகு போன பிறகு ,
வீட்டினுள் ஒரு அணுகுண்டு வெடித்தது .
ஏண்டி , அவனை உனக்கு முன்னாடியே தெரியுமா ? நான் கூப்பிடுவதற்க்குள் நீ ஏன் வந்தாய் ?
அவனுக்கு காப்பி தான் பிடிக்கும் என உனக்கு எப்படி தெரியும் ?
என்னடி இவனும் முன்னாள் காதலனா ?
இன்னும் எத்தனை பேருடி?
சொற்கள் எல்லாம் அவளை சுட்டு தின்றன .
அவன் போன பிறகு , இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த டிரைவர் பாண்டியன்,
தாயி , எப்படி தாயி ,இந்த பயலோட இருக்க , பேசாம உங்க வீட்டுக்கு போய்டு தாயி .
நான் எங்கப்பா ,போவேன் . வீட்டுல இருந்தப்ப , காதலை ஒரு கொலை குற்றம் போல பார்த்து திட்டு , அடி , உதை வாங்கினேன் . இப்ப இவர்கிட்ட வாங்குறேன் .
நான் எதுக்குப்பா வாழனும் ? காதலிச்சது ஒரு தப்பா ?
நீ என்னோட மகளா இருந்தா , எப்பவோ உன்னை என் கூட அழைத்துக் கொண்டு போயி இருப்பேன் . இந்த பய ,உன்னை கொஞ்சம் , கொஞ்சமா கொன்னுடுவானே
விதி அதுவாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும் ?
கண்களில் கண்ணீர் இல்லை . கண்ணீரும் வற்றிப் போயி பல நாட்கள் ஆகிறது .
அடுத்த நாள் , அவன் போன பிறகு ரகு வந்தான் .
எங்கங்க அவன் இல்லையா ?
இல்லை , இப்பத்தான் அவர் வெளியே போனார் ..
அச்சோ . சரி நான் அவனை மறுபடியும் வரை சொல்கிறேன் . நீங்க எனக்கு அன்னைக்கு போட்ட காப்பி மாதிரி போட்டு எனக்கு எடுத்துக் கிட்டு வாங்க . ப்ளீஸ் .
உடம்பெல்லாம் கொஞ்சம் நடுங்கித்தான் போனால் அவள் . என்ன நடக்க போகிறதோ அவன் வந்தால்????
சமையலறையில் அவள் , காப்பி போட்டு கொண்டு இருக்கும் போது , பின்னாடி மிக நெருக்கமாக ரகு .
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க . எனக்கு எல்லாம் தெரியும் , உன்னை அவன் ரொம்ப கொடுமை படுத்துறான் இல்லை .
இப்படி பேசிக் கொண்டே அவளை அணைக்க முயல
நாயே , தள்ளி போடா , இல்லை இங்க நடக்கிறதே வேற .. என்று கண்கள் சிவக்க அவள் கர்ஜித்தாள் .
ரகு வோ , மிக மெல்லிய புன்னகை யுடன் , கிண்டலாக .
இப்ப உன்னால் என்ன பண்ண முடியும் ?. உன் புருஷன் தான் என்னை இங்க அனுப்பி நீ எப்படி நடந்துகிறன்னு வேவு பார்க்க சொன்னான் .நான் மட்டும் அவன் கிட்ட போயி ,
உன் பொண்டாட்டி நல்லவள் இல்லை .அப்படி இப்படி சொன்னால் என்னவாகும் ?
பித்து பித்து பிடித்தவள் போல் அவள் முகம் வெளிறிப் போயி இருந்த்தது .
இரகுவே மீண்டும் ,
கொஞ்ச நேரம் எனக்கு சந்தோசம் தந்த்தால், நீ நன்றாக வாழாலாம் . என்ன சொல்ற ? உனக்கு வேற வழியில்லை என்று சொல்லி விட்டு அவளை நெருங்கினான் .
நெருப்பில் இடப்பட்ட பஞ்சு போல அவள் மனம் எரிந்து கொண்டு இருந்ததது .
இன்னும் நெருக்கமாக
இன்னும் ..
திடிரென அங்கு டிரைவர் வர, ரகு பயந்து நெளிந்து வெளியேறினான் .
பைத்தியம் பிடித்தவள் போல் அவள் அங்கு வெறித்து பர்ர்த்து கொண்டிருந்தாள் .
என்னமா நடந்ததது . யாரும்மா அவன் .. சொல்லு தாயி , என்ன நடந்ததது ?
கொட்டி தீர்த்தாள் . அமைதி அங்கு சிறிது நேரம் உயிர் வாழ்ந்த்தது .
பின் , அவர் விடும்மா , எல்லாத்தையும் விடும்மா .
என் கூட வாம்மா , தாயி , இனி நீ என் மகள் .
அவள் கண்களில் முதல் முதாலாக அனந்த கண்ணீர் .
அடுத்த நாள் தினமலரில்
22 வயது பெண் 55 வயது வாலிபருடன் தப்பி ஓட்டம்
- மக்கள் எல்லாரும் சுதந்திர வேட்கை கொண்டு பயங்கரமாக வீறு கொண்டு போராடினார்கள் .
- வெள்ளையர்கள் நம்மை கொன்று குவித்தார்கள் .
- கடைசியில் ரத்தம் சிந்தி , உயிர் துறந்து சுதந்திரம் வாங்கினோம் .
தப்பு , குற்றம் , பாவம் எல்லாம் வெள்ளையர்கள் மட்டுமே செய்தார்கள் . நாம் எதுவுமே செய்யவில்லை .நாம் ஒரு அப்பாவிகள் . நாம் ஒரு பாதிக்கப்பட்ட பாவிகள் .
நமக்கு தெரிந்தது "கொடி காத்த குமரனின் " சாவு மட்டும் தான் .அச்சில் ஏறாமால் செத்த குமரன்கள் எத்தனையோ ?
எனக்கு வரலாற்றில் புரியாத ஒன்று, நாம் யாரிடம் இருந்து விடுதலை பெற்றோம் ?
ரெண்டுக்கும் கொஞ்சம் கூட பேசத்தெரியாது , ஆனால் ரொம்ப நேரமாக சிரிப்பதும் , விளையாடுவதும் ஒரே அக்கப் போர் .சிரிக்கும் மிருகம் பெண் என்று அந்த ஆட்டோவின் பின் புறம் எழுதி இருந்தது .
இந்த பதிவை படித்தவுடன் , என்டா , இதைப் போய் படித்தோம் என்று கண்டிப்பாக நினைக்க போகிறீர்கள் .
ஜாக்கிரதை .நான் என்னை சொல்லி கிட்டேன் .
என்னை , நான் ஒரு முற்போக்குவாதி , பிற்போக்கு வாதி , நடு போக்கு வாதி என்று சொல்லிக்கொள்ள மாட்டேன் .இருந்தாலும் இந்த புத்தாண்டை பற்றிய சில ஐயப்பாடுகள் எனக்குள்ளன .
2010 இது எதைக் குறிக்கிறது? . இயசு பிறந்து 2010ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதைத்தான் . ஆனால் அறிவியல், அப்படி ஒருத்தர் , இருந்தாரா இல்லை அந்த ஆண்டுத்தான் , அந்த கிழமைத்தான் பிறந்தாரா என்பதை இன்னும் அறிவிக்கவில்லை .பின் எப்படி அதை உண்மை எனவோ , அதன் அடிப்படையில் அமைந்த இந்த தினத்தை புத்தாண்டு என்று கொண்டாடுவது ?
இயசு பிறப்பதற்கு முன் (அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள் ) 10 மாதங்கள் தான் இருந்தன . ஒவ்வொரு அரசனின் ஆட்சியிலும் சில நாட்கள் , மாதங்கள் கூட்டப்பட்டன .
நீங்கள் கேட்கலாம், தமிழ் புத்தாண்டு என்று கூட உள்ளது என்று ?
தமிழில் 12 மாதங்கள் மட்டுமே உண்மை . அதன் வரிசை மட்டுமே நாம் அறிந்தது . ஆனால் அதன் முதன் மற்றும் கடைசி மாதத்தின் அடையாளம் நமக்கு தெரியாது .வட்டத்தின் ஆரம்பத்தை எந்த புள்ளி என்று சொல்வது ?
தமிழ் வருடங்கள் 60 என்கிறார்கள் . அதில் ஒன்று கூட தூய தமிழில் இல்லை . அது இந்து மதத்தின் திணிப்பு .
நமது தமிழ் இலக்கியத்தில் எல்லாம் புத்தாண்டு என்றோ , புத்தாண்டு கொண்டாட்டம் என்றோ எந்த செய்தியும் இல்லை . அப்படி இருந்திரந்தால் தை 1 தமிழ் புத்தாண்டாக மாறி , பின் மீண்டும் சித்திரை 1 ௧ மாறி இருக்காது .
ஆக தமிழர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட வில்லை . அது நாம், மற்ற நாட்டினரை பார்த்து காப்பி அடித்தது (வழக்கம் போல ).
நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையின் பின்னும் ஒரு காரணம் இருக்கிறது . அது அறிவியலுக்கு , அறிவுக்கு ஒவ்வாதது என்றாலும் ஒரு காரணம் உள்ளது . அது உழைப்பாக(பொங்கல் ) , இறப்பாக(தீபாவளி ) , பிறப்பாக (கிறிஸ்மஸ் ) என ஒன்றாவது உள்ளது .
ஆனால் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் என்ன உள்ளது .?
இப்படி எல்லாம் மூளை யோசித்தாலும் , என் மனம் வேறு ஒன்றை சொல்கிறது ? மூளை ஏன் கொண்டாடுகிறாய் என்று கேட்கிறது . மனம் ஏன் கொண்டாடகூடாது என்று கேட்கிறது .
வாழ்வில் இந்த மாதிரி சில கொண்டடட்டங்கள் தான் ஒரு பிடிப்பை ஏற்படத்துகின்றன . இதை கொண்டாடவில்லை என்றால் என்ன ஆகிவிடும் ?
ஒன்னும் இல்லை . ஆனால் கொஞ்சம் கொண்டாடினால் , எதோ மனதில் ஒரு தன்னிறைவு , ஒரு புத்துணர்ச்சி .
நாம் தினமும் கவலை பட ஆயிரம் காரணங்கள் . நாம் கொண்டாட சில தினங்களே நமக்கு உள்ளது .
மதத்தை , மொழியை , இனத்தை ,தேசத்தை கடந்து இந்த புத்தாண்டை கொண்டாடுவோம் ..இனிவரும் நாட்கள் இனிமையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ..
என்ன சொல்ல வரேன் என்றால் ..
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .
டிஸ்கி : இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எனக்கு யாரும் டீரீட் வைக்க வில்லை என்ற கோவத்தில் எழுதியது .. மூளைக்கு வேலை கொடுக்காதீங்க .அது எந்த வேலையையும் நம்மள பண்ண விடாது .
வக்கிரம் யாருக்கு ? என்று கேட்டால் , இப்போதைக்கு செக்ஸ் அர்ச்சகர் "தேவநாதன் " என்று நச்சுன்னு பதில் வரும் ..
ஆனால் "ஒழுக்கமாக இருப்பது கேனத்தனமானது " என்று நினைக்கும் மனபாங்கு என்னை தடுமாற செய்கிறது ....
நிஜம் தான் , நான் சொல்ல போவது எல்லாம் நிஜம் ..
1. 1978 -ல், கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள் வெளியானது . ஒரு வருடம் கழித்து சைகோ ராமன் என்பவன் தமிழகத்தையே அதிரவைத்தான் தன் மன்மத கொலைகளால் .
2. 1988 -ல், கமலின் நடிப்பில் "சத்யா " வெளியானது . 1990- ல் நாடு மாபெரும் வேலை இல்லா திண்டாட்டத்தை பார்த்தது .
3.1992 ல் தேவர் மகன் வெளியானது . சரியாய் 1993- ல் நடைப்பெற்ற சாதி கலவரங்கள் தான் இன்றும் சாதி என்னும் தீயை அணையவிடாமல் தென் மாவட்டங்களில் காக்கிறது .
4.1994 , மகாநதி படத்தில் , பணத்தையும் , குடும்பத்தையும் இழந்தார் கமல் . 1996ல் தமிழகத்தில் புகழ் பெற்ற சிட் பான்ட் நிறுவங்கள் வரிசையாக மக்களுக்கு நாமம் போட்டனர் .
5. 1992 -ல், இந்து முஸ்லிம் சண்டையை "ஹே ராம் " படத்தில் வைத்தார் கமல் .2002- ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் , அதன் பின் நடந்த முஸ்லிம் இன படுகொலைகளையும் நான் என் வாயல சொல்ல மாட்டேன் . 6.2003 -ல் ,"சுனாமி" என்று அன்பே சிவத்தில் சொன்னாலும் சொன்னார் , 2004- ல் நடந்த சுனாமியின் கோரதாண்டவத்தை நாம் இன்னும் மறக்கவில்லை .
7. இது லேட்டஸ்ட் . தசாவதாரத்தில் (2008) ஒரு கொடுமையான , பயங்கரமான வைரஸ் பற்றி சொல்லி இருப்பார் .நாம் இப்போது "Swine Flu " பயத்திலேயே காலத்தை ஓட்டுகிறோம் ..
ஆமாம் , இது எல்லாம் தற்செயல்லா ? இல்லை வேற எதாவது ....... சொல்ல விருப்பம் உள்ளவர்கள் பின்னுட்டத்தில் சொல்லலாம் ..
டிஸ்கி : இது என் நண்பனின் வாய் மொழி வாயிலாக கேட்டது . இதை போன்று ஏற்கனவே எ-மெயில் (ஆங்கிலத்தில் ) வந்ததாக சிலர் கூறுகின்றனர் . ஆனந்த விகடனில் வந்ததாக "வால்" சொல்கிறார் . இரண்டும் உண்மையாக இருப்பின் , என்னை மன்னிக்கவும் .. (என் நண்பனை ,போய் உதைக்கணும் .....)
அழகில் நான் சினேகாவுக்கு போட்டி .இதை நான் சொல்ல வில்லை .என் தோழிகள் எல்லாரும் சொல்லுவார்கள்
அப்புறம், இந்த ஆம்புள பசங்க ரொம்ப மோசம் .
அப்பாடி!! என்ன பார்வை பாக்குறாங்க ?
எனக்கே கொஞ்சம் வெட்கமாக இருக்கு . ஹரி என்னை பெண் கேட்டு வரும் வரை , என் வீட்டு முன்னால் எப்போதும் பசங்க இருப்பாங்க .
காதலை நான் சினிமாவில் மட்டுமே பார்த்து வந்து இருக்கிறேன் .
ஆனால் இந்த ஹரி , தினமும் I LOVE U என்று 100 முறை சொல்லி விடுகிறான் . இதுவும் எனக்கு பிடித்து இருக்கிறது .பெண்ணாக பிறந்ததால் எவ்வளோ சந்தோசம் .
இந்த உலகம் பெண்களை சுற்றிதான் உள்ளது என்பது உண்மை தான் . வில்லன்களே இல்லாத சினிமாதான் என் வாழ்கை .
கொஞ்சி குலாவும் கணவன் ,திகட்டாத மாமியாரின் அன்பு இப்படி சொல்லி கிட்டே போகலாம் .இப்ப நினைத்தாலும் உடம்பு எல்லாம் கூசிகிறது அந்த முதல் இரவை நினைக்கையில் .
புது ஆண் , தனி இரவு ,படுக்கை அலங்காரங்கள் . எதுவுமே மறக்க முடியவில்லை .
போன மாதம் வரை நான் , நான் மட்டுமே . இன்று நான், இன்னொருவரின் மனைவி . காலத்தின் கோலங்கள் எவ்வளவு சுகமானவை .
இரண்டு மாதங்கள் என்னை தின்ன துவங்கின .
எனக்கான உலகம் என்னை வெளியே துரத்தியது ஒரு தொலைப்பேசி அழைப்பின் மூலம் . செய்தி சிறியதுதான் . ஹரிக்கு எமனாக வந்தது ஒரு நாய்
. "சென்னையில் நாயை காப்பாற்ற எண்ணி விபத்தில் இறந்த வாலிபர் " என்று மாலை முரசு முதல் எல்லா பத்திரிக்கைகளிலும் என்னவர் பெயர் .
யாருக்கும் தெரிய போவதில்லை பின்னால் இருக்கும் என் எதிர்காலம் .
கூட்டம் கூடி எனக்கு பட்டம் கொடுக்க துவங்கினர்.
மொட்டச்சி ,
ரெண்டு மாசத்துல புருசனையே முளுங்கியவ .
என்னா ,மினுக்கு மினுக்கினா....
அவர் அவர்களுக்கு பிடித்தமாதிரி கெட்ட தமிழில் 1000 வார்த்தைகள் .அனைத்தும் என்னை வந்து தீண்டி போயின .
விதவை என்று ஒருவரும் திட்ட வில்லை இந்த 21 ஆம் நூற்றாண்டில் .
பிறந்த இடத்தில் மீண்டும் குடி புகுந்தேன் .
தேவதை என்று என்னை கொஞ்சிய உலகம் இன்று , வசை பாட தயாராக இருந்தது . ஜாதகம் , தோஷம் எல்லாம் என்னை தேடி வந்து அடைக்கலம் கொடுத்தன .
இரவுகள் தனிமையாயின .
சில சுகங்கள் எப்போதும் கிடைக்க வேண்டும் .இல்லையெனில் எப்போதும் கிடைக்க கூடாது .
கொடுத்து பழகியப்பின் என்னையே எரிக்க துவங்குகிறது இந்த பாவி உடல் . இளமையின் தனிமையை விட விதவையின் தனிமை கொடுமை .
நான் நானாக இருக்கும் சில சமயங்களில் , பக்கத்து வீட்டு "அம்மு " குட்டியுடன் விளையாடுவேன் .
குழந்தையாகவே இருந்திருக்கலாம் , இறந்தும் இருக்கலாம் .
அம்மு குட்டியின் அப்பாவை நான் பார்க்கவே விரும்பவதில்லை . எது வேண்டும் என்பதை அவனின் பார்வை உணர்த்திவிடும் .
முன்பு ஆண்கள் என்னை பார்த்த பார்வைகளை பாராட்டுகள் என்று எண்ணிய மனது , இப்போது பார்வையின் விஷம் அறிந்து அடங்குகிறது .
அன்றும் மற்ற நாட்களை போலத்தான் வந்தது . என் தனிமையை அழிக்கும் அந்த குட்டி சாமியை பார்க்க போனேன் சற்றே பயத்துடன் .
அவன் வீடு என்ற தைரியம் , யாரும் இல்லை என்ற துணிச்சல் ,அடைய வேண்டும் என்ற வேட்கை எல்லாம் சேர்த்து தெரிந்தது அவன் என்னை இருக்க கட்டி பிடித்ததில் .
என்ன துள்ளுற ? இதை பாரு ,
தனியா எவ்வளவு நாள் இருப்ப ? கொஞ்சம் அமைதியாய் இரு டி . ஏய் , ஏய் ..
நெருப்பில் இடப்பட்ட புழுவாய் அவனிடம் இருந்து விலகினேன் .உடம்பின் நடுக்கம் இன்னும் குறையவில்லை . கற்பு என்பது என்ன ? கணவன் இருந்தால்தானா ?
விதவைக்கும் உண்டு கற்பு .
படி தாண்டாள் பத்தினி என்பது எவ்வளவு உண்மையோ
அதே போல் தான், பதி இழந்தாலும் பத்தினி பத்தினி தான் .
விபச்சாரியிடம் கூட காசு கொடுத்தால் தானே சுகம் , என்னிடம் மட்டும் என் இந்த துணிச்சல் ?
விபச்சாரியை விட நான் என்ன கேவலமானவளா ?
தொட்டால் மாறுவேன் என்று தானே ..
தொட்டால் மடிவேனே அன்றி மாறமாட்டேன் .
பத்து மாதம் பெற்ற தாயிடம் கதறி அழுதேன் .
அவளோ , மானம் , மரியாதை , கவுரவம் என்றாள் .
அவன் வீட்டுக்கு போனது என் தவறாம் .
பெண்ணுக்கு
பெண்ணே எதிரி .
கடவுளிடம் கூட, முறை இட பிடிக்கவில்லை .
தனிமையில் இருந்த என் காதில் விழுந்தது என் அப்பாவின் சொற்கள் .
"எல்லாம் சாமி குத்தம் தான் . அதான் , 10 பவுனுல ஒரு தாலி செஞ்சு அம்மனுக்கு போட போறேன் . அப்புறம் ஒரு பட்டு புடவை எடுத்து புற்று அம்மனுக்கு போடணும் .. "
கல்லுக்கு கூட தாலி , புடவை .. தேடி கொண்டு இருக்கிறேன் "விதவையாய்" உள்ள ஒரு தெய்வத்தை எனக்கு துணையாக .
இது கொஞ்சம் சீரியஸ் பதிவு ..
அதனால காமெடி வேண்டுபவர்கள் வேறு பக்கம் போய் விடவும் .
அட என்ன சொன்னாலும் நம்பாம மேல படிக்கிறீங்க . உங்க தலையெழுத்தை நான் என்ன மாற்றி விடவா முடியும் ?
ரொம்ப நாளா உடம்பை , மன்னிக்கவும் தொப்பையை குறைக்க என்ன பண்ணலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன் ..
யோகா என்றால் 5 மணிக்கு எழுந்திரி என்று பயம் காட்டினார்கள் . ஜாக்கிங் என்ற பெயரில் ஓடு , ஓடு விரட்டினார்கள் .. மூட்டு வலி வந்துதான் மிச்சம் ..
30,32,34,36 என்று வேகமாக வளரும் என் செல்லத் தொப்பையை குறைக்க , ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடலாம் என்று ஒரு மனதாக பொதுக்குழு கூடி முடிவெடுத்தேன் ..
சரி , ரொம்ப சீப் விளையாட்டு பேட் மிட்டன் . அதையே விளையாட எண்ணி , நானும் , என் நண்பனும் புதுசா எல்லாம் வாங்கி விளையாட ஆரம்பித்தோம் ..
ரெண்டு நாள் தான் .. ரெண்டே நாள் தான் . எவன் கண் பட்டுதோ ? ரெண்டு நாள் கூட விளையாட முடிய வில்லை . எதிர்த்த வீட்டில் ஒரு ஆண்டி (நம்மளை விட சின்ன வயசு தான் .. ஆனால் கல்யாணம் ஆயிடுச்சே ..) ஒரு கூட்டம் சேர்த்து எங்கள் இடத்தை ஆக்கிரமித்து விளையாட ஆரம்பித்தார்கள் ..
எங்களையும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்வார்கள் என்ற நல்ல (என்னது ?) நினைப்பில் அவர்கள் விளையாடுவதை பார்க்க துவங்கினேன் ..
இது ஒரு குத்தாமாம் ..
எத்தனை வார்னிங், திட்டுக்கள் . எல்லாம் வீட்டு ஓனர் என்ற வில்லன்தான் ..
திடிரென ஒரு பெண்கள் P.G(Paying Guest) முளைக்க துவங்கியது எங்கள் தெருவில் . தேவைதைகளின் தேவதையை தேடி பல தேவதாஸ்கள் எப்போதும் உலவ துவங்கினர்.
தொப்பையை குறைக்க வில்லை என்றால் இப்போது பெண் கிடைப்பது அரிது என்று சொன்ன பெரியவர்களின் முது மொழிக்கேற்ப , மீண்டும் விளையாட துவங்கினேன் ..
இப்ப ரெண்டு நாள் இல்லை ..
ரெண்டு மணி நேரம் தான் ஆச்சு ..
திடிரென சுப்ரமணியம் ஜெய் மாதிரி ஒரு பத்து பேர் வந்தாங்க ..
கவிதா என் ஆளு, சபிதா அவன் ஆளு. சுஷ்மா என் பிகரு .. அப்படி , இப்படி .என ஒரே கூச்சல் .
கடைசியில இனிமே இங்க வந்து பிலிம் காட்டின மவனே , டங்கு வாறு அறுந்து விடும் என்று பாசமாக சொல்லி விட்டு போனார்கள் .

என்ன கொடுமை சார் இது ?
நான் ஒரு நல்ல காமெடியன் கூட இல்லை ..
என்னை ஒரு M.N நம்பியார் ,P.S வீராப்பா ரேஞ்சுக்கு பேசி கிட்டு இருகாங்க ..
அந்த அளவுக்கு நான் வொர்த் இல்லைடா என்று சொன்னாலும் எவனும் ஒத்துக்க் கொள்ள மாட்டேன்குறாங்க ..
அவுங்க டாவ் அடிக்கிற பிகர்கள் எல்லாம் இவனுங்களுக்கு டாட்டா காட்டிட்டு போக போகிறார்கள் இந்த பத்தன் (அது என்ன பத்தினி சாபம் ) சாபம் கூட பலிக்கும் என்பதை மறந்து விட்டார்கள் ..
இப்ப என் தொப்பையின் அளவு 40 ...
ம்கும் .. குறையாது ..குறையாது ..
வேற என்ன விளையாட்டு விளைடாலாம் ?
நான் : நம்ப முடியவில்லை ..
மனசாட்சி : அட நம்பித்தான் ஆகனும் ..
நான் : நான் எழுதியது எல்லாம் ????
மனசாட்சி : இனி நீகூட ஒரு எழுத்தாளன் ..
நான் : அப்படி எல்லாம் சொல்லாதே ஒரே வெட்கமா இருக்கு ..
மனசாட்சி : அட நாயே ..சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதற்க்கே இப்படியா ...
யூது புல் விகடனில் என் படைப்பு வெளியானதே இந்த போராட்டத்திற்கு காரணம் ..
நீங்களும் அதை படிக்க இங்கே செல்லவும்
வீட்டின் முன் இருக்கும் அந்த பார்க்கில் ஹரியும் , அவன் தந்தையும் அருகருகே அமர்ந்து இருந்தார்கள் .
நவ நாகரீக வேகத்தில் தன்னை தொலைத்து கொண்டு இருக்கும் ஹரி , அவன் அப்பா ராஜாவை எதோ கடனே என்று கூட்டி கொண்டு வந்து இருந்தான் .
"ச்சே , ச்சே இது ஒரு வேலையா போட்சு ..சனி , ஞாயிறு இது ஒன்னு வேற ..கூட்டிட்டு போ, கூட்டிட்டு போ..அம்மாவோட புலம்பல் ..கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்ல " என்று தனக்கு தானே புலம்புவதாக எண்ணி வாய் விட்டு குமறிக் கொண்டிருந்தான் ஹரி .
காதில் விழுந்தாலும் , அமைதியாக கேட்டு கொண்டு இருந்தார் அவன் அப்பா .. திட்டினாலும், தன் மகன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தார் .
எதோ ஒரு நடிகனின் படத்துக்காக 3 ,4 மணி நேரம் காத்து கிடக்கும் நம்மை போன்ற ஹரி, இந்த வார குமுதத்தில் புதைந்து கொண்டிருந்தான் ... 10 ருபாய் குமுதம் , தன் மகனை தன்னிடம் இருந்து பிரிப்பதை அப்பாவால் தாங்கி கொள்ள முடியவில்லை .
வாரம் முழுவதும் காத்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த சில மணி நேரங்கள் தான் வாழ்கையின் பிடிமானங்கள் . மணித்துளிகள் நொடி மேகங்களாக கரைந்து , மறைந்து கொண்டிருந்தது ..
அப்போது ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து அருகே உள்ள மரகிளையில் வந்து சம்மனமிட்டது .. ஹரியின் தந்தையின் முகம் சற்றே மலர்ந்தது ..
உடனே ஹரியிடம்,
அது என்ன ?

நயன்தாராவின் காதலை படிக்க இடையுறாக இருக்கும் தன் தந்தையை கடுப்புடன் நோக்கினான் ஹரி ..
என்ன ? என்றான் எரிச்சலுடன் ..
அங்க பாரேன் என்றார் அவன் தந்தை .
அது சிட்டுக் குருவி ..ம்கும் ..
சில நிம்டங்களுக்கு பிறகு ,அவன் தந்தை திரும்பவும் அது என்ன ?
அப்பா , உங்களோட ஒரே ரோதனையாய் போச்சு. கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க முடியாதா ?
சற்று நிறுத்தி ,,, திரும்பி பார்த்து
அதே சிட்டுக் குருவிதான் ...என்றான் கோபத்துடன் .
அடுத்த சில நிமிடங்களுக்கு பிறகு , அதே கேள்வி அவன் தந்தையிடம் இருந்து .. பொறுத்திருந்த அத்தனை கோபங்களும் மொத்தமாக வெடிக்க ,
ஹரி நிதானம் தவறினான் .
ஏன் என்னோட உயிரை இப்படி வாங்குறீங்க ... வாரம் , வாரம் உங்களோட இதே இழவா போச்சு .
இனிமே அங்க கூட்டிட்டு போ , இங்க கூட்டிட்டு போ அப்படின்னு சொன்னீங்க ...அப்புறம் நான் நானாகவே இருக்க மாட்டேன் .
இம்சை பன்றதுக்குனே எனக்கு அப்பாவா வந்து வாச்சி இருக்கீங்க .. ச்சே ..
பொருமி தள்ளினான் ஹரி ..
முதுமை வலியை விட பிள்ளையின் வார்த்தைகளால் ரொம்பவே வலியை உணர்ந்தார் ஹரியின் அப்பா . வீட்டை நோக்கி , நடக்க துவங்கினார் . தன் நிம்மதி பறி போய்விட்டதாக , புலம்பினான் ஹரி .
அந்த சிட்டுக்குருவியை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் . சில நிமிடங்களில் , அவன் தந்தை மீண்டும் அவன் அருகே வந்து அமர்ந்தார் .
ஆனால் அவர் கையில் , அவரின் 1988 ஆம் வருட டைரி .
அதனை ஹரியிடம் கொடுத்து , அதன் ஒரு பக்கத்தை படிக்க சொன்னார் .
ஒன்னும் புரியவில்லை ஹரிக்கு .
சற்றே சலிப்புடன் , படிக்க துவங்கினான் ..
கொஞ்சம் சத்தமாக என்றார் அவன் அப்பா .
" ஜூலை 10, நானும் என் பையன் ஹரியும் பார்க்கில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம் ..
இவன்தான் என் சொத்து என்று ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன் . இதோ என்னை ஓட வைக்கிறான் , சிரிக்க வைக்கிறான் ..
என் வாழ்கையின் ஜீவ நாடியாக அவன் மாறி இருக்கிறான் ..
இல்லை . இல்லை என்னை மாற்றி இருக்கிறான் .
எங்கள் இருவரின் முன் ஒரு சிட்டுக்குருவி வந்து அமர்ந்தது .. அவன் என்னிடம் கேட்டான். அது என்ன ?"
படிப்பதை நிறுத்தி விட்டு தன் தந்தையின் முகத்தை பார்த்தான் . அவர் கண்களில் சிறு வெள்ளம் . மேலும் படிக்க சொன்னார் அவனை .
மீண்டும் படிக்க துவங்கினான் .. ஆனால் இம்முறை குரலில் உறுதி குலைந்து இருந்தது .. தடுமாற்றத்துடன் ஆரம்பித்தான் .
"நான் சொன்னேன் , அது சிட்டுகுருவி என்று . திரும்பவும் கேட்டான் அது என்ன வென்று . பதில் சொன்னேன் அது சிட்டுகுருவி என்று .. தொடர்ந்து 28 தடவை கேட்டான் அது என்ன என்று .. நானும் நிறுத்தவில்லை பதில் சொல்வதை ..
ஒவ்வொரு தடவை பதில் சொல்லும் போதும் , அவன் குழந்தை தனத்தை மெச்சி முத்தம் கொடுத்தேன் .. அத்தனை தடவையும் பதில் சொல்லியும் எனக்கு சலிப்பு ஏற்பட வில்லை .. ஏனெனில் அவன் என் செல்ல மகன் ..
பதில் மறந்து என்னிடம் திரும்பி , திரும்பி கேட்டானா ?
இல்லை என் முத்ததிற்காக கேட்டானா ..?
தெரியவில்லை .
தெரிந்துக்கொள்ளவும் விருப்பம் இல்லை .."
டைரியை மூடினான் ஹரி .. குமுதம் மண்ணை முத்தமிட்டது ..
இந்த முறை , இவன் கண்களில் கண்ணீர் ..
தன் அப்பாவை , தன் தோளோடு கட்டி பிடித்துக் கொண்டான் ..
"அப்பா ..அப்பா ..."
வேற எதுவும் பேச வில்லை ஹரி ..
இப்போது அவர்கள் அருகருகே இருந்தார்கள் மனதளவில் ..
டிஸ்கி : இது ஒரு ஆங்கில குறும் படத்தின் தாக்கத்தினால் , நான் எழுதியது ..நன்றிகள் பல அந்த படத்திற்கு ..



















