மந்திர ஆசைகள்

1/12/2009

இப்பவே கண்ணை கட்டுதே

நமது நாட்டில் உள்ள எல்லை சாமிகள் யார் யாருன்னு தெரியுமா?
நமது உள் துறை அமைச்சர் ,நமக்காக ஒரு புதிய உளவு துறையை உருவாக்க போறாராம் . நாம் இனி நிம்மதியாக இருக்கலாம் .

இனி ஒரு தீவிரவாதி கூட நம் நாட்டில் நுளைய போவது இல்லை . குண்டு இல்லை .
மனித பலிகள் தேவை இல்லை .
தாலிகள் இனி தூக்கு மேடை ஏற போவது இல்லை .
அம்மா சாமிக்கிட்ட போய்கிட்டாங்க அப்படின்னு ஒரு பிஞ்சுக்கிட்ட பொய் சொல்ல தேவை இல்லை .
நாளைய மன்னர்கள், இன்று கைகளை இழக்க தேவை இல்லை .

 இவை எல்லாம் நடக்க போவதுன்னு நினைக்கிறதற்க்கு முன்னாடி, நம்மிடம் உள்ள இந்த படைகளை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுகுங்க .
 1.உளவுத் துறை.
2.அமைச்சரவை செயலாக்கத்தின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா )
3.வருவாய்த்துறை உளவு இயக்கம்.
 4.மத்திய பொருளாதார உளவுத் துறை.
 5.அமலாக்க இயக்கம்
6.போதைப்பொருள் கட்டுபாட்டுத் துறை.
 7.சிறப்பு எல்லைப் படை.
 8.எல்லை பாதுக்கப்பு படை.
 9.மத்திய இடர் காப்பு படை.
10.இந்திய திபத் எல்லைக் காப்பு படை.
11.மத்திய தொழிற்ச்சாலை பாதுகாப்பு படை.
12.தேசிய பாதுகாப்பு படை.
 13.அசாம் சுழற் துப்பாக்கி படை.
 14.சிறப்பு பிரிவு-அந்தமான் மற்றும் நிகோபார் பாதுகாப்பு படை.
15.குற்றப் பிரிவு குபி,தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி
16.சிறப்பு பிரிவு - லட்சத் தீவு காவற் படை.

 தமிழ்நாடு அளவில்
 1.குற்றப்பிரிவு சி.ஐ.டி
 2.சிறப்பு புலனாய்வு குழு
3.போதைப் பொருள் தடுப்பு பிரிவு
4.கொள்ளை கூட்டத் தடுப்புப் பிரிவு
 5.சிலைத் திருட்டுப் பிரிவு
 6.சிவில் சப்பளை சி.ஐ.டி
7.சிறப்பு அதிரடி படை
8.கமாண்டோ படை
9.மாவட்ட குற்றப்பிரிவு

 இன்னும் ,இன்னும் நெறையா.... இனி மேல் உருவாக போகிற அந்த ஒரு அமைப்பு தான் ,நம்மை காப்பத்த போவுதுன்ன ..
 இவங்களை என்ன பண்ண போறங்க .?
 இன்னொரு குண்டு வெடிப்பு ... இன்னொரு புதிய அமைப்பு .. விளம்பிரங்களுக்கு இடையே துக்கம் விசாரிக்க போகின்றன நம் தொலைக்காட்சிகள். எங்களை எந்த சாமியும் காப்பத்தல.. எங்களுக்கு எந்த சாமியும் தேவை இல்லை. குறைந்த பட்சம் சாத்தானாவது வந்து நம் கவலை தீர்த்து வைக்காதா?


1/08/2009

அட கொய்யால , இப்படியா ஏமாத்தறது ?

நாம எழுதிறத யார் பார்க்க போறா ?

இந்த பதிவை யார் படிக்க போறா ?

அதனால நமக்கு என்ன லாபம் .

இப்படி நினைத்து சுமார் 6 மாசம் ஒன்னும் எழுதல. (அதுக்கு முன்னாடியும் ஒன்னும் கிழிக்கல .)
ஒரு வருஷம் இந்த தமிழ் வலை உலகை ஒரு பார்வையாளனாக பார்த்து கொண்டு இருந்தேன் . ஆனால் நீங்கள் நினைப்பதை போல இந்த தமிழ் வலை உலகம் ஒன்றும் உத்தமம் அல்ல . பல வலை உலக பிரம்மாக்கள் செய்யும் ,செய்த உள் குத்துகளை சில சூழ்ச்சிகளை நீங்களும் பயன் படுத்தி நீங்களும் வலை உலக பிரம்மாவாக மாறுங்கள் .

அதில் சில இதோ .

* திடீரென உங்கள் இணைய தளத்தை யாரோ hack செய்து விட்டதாக ஒரு புரளியை கிளப்பி ,அதை யாராவது ஒரு பெரிய வலை புள்ளியின் பெயரை சொல்லி அவரின் புகழை உங்களுக்கு சாதகமாக செய்து கொள்ளுங்கள் ..(இப்போ உங்களுக்கு இட்லி வடை ஞயாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல ).

* ரஜினி, ஞாநி ,வால்பையன் ,தமிழச்சி போன்ற வலை பிரபலங்களை மானா வாரியாக நீங்கள் திட்டுங்கள் . பிடிக்குதோ இல்லையோ கண்டிப்பாக உங்களுக்கு பல பின்னூடங்கள் நிச்சயம் .(நீ என்ன விருந்தாளிக்கு பொறந்தவன ? போன்ற கேள்விகளை தாங்க நீங்க ரெடி என்றால் இது உங்களுக்கு ஓகே )

 *ரொம்ப கேவலமா தலைப்பு கொடுத்து பாருங்களேன் ..உதரணத்திற்கு 16 வயது பெண்ணை 18 தடவை கற்பழித்த 95 வயது வாலிபர் ... சொன்ன நம்ப மாட்டிங்க , கண்டிப்பா பல repeat பார்வையாளர்கள் உங்களுக்கு உண்டு .

*கதை எழுவது ரொம்ப ஈசி . பொண்ணு ,பார்த்தால் ,இளித்தல்,முக்கள் ,முனகல் , அப்புறம் தடவல் ..கொஞ்சம் கருத்து . இது தான் அனைத்து காதல் கதைகளின் சாராம்சம் (நான் எழுதிய கதை உட்பட )

* உங்கள் page counter-ஐ போலியானதாக வைக்கலாம் .. ஒரு நாளில் 1000,2000 என பொய் சொல்ல இது உதவும் ... இது எப்படி சாத்தியம் என்று சின்ன புள்ள தனமா கேட்காதிங்க .Browser Simulator அப்படின்னு சில கணினி மென் பொருட்கள் உண்டு . அதை பயன் படுத்தி உங்கள் page counter-ஐ நீங்கள் 1000,2000,10000 என உயர்த்தி ,நீங்கள் வலை உலக ராஜா என தம்பட்டம் அடித்து கொள்ளலாம் (இப்படி யா ஏமாத்தி கிட்டு இருகாங்க , பாவி பயல்க )

 *உங்களுக்கு ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால் உடனே அவரை பற்றி ஓஹோ வென பாராட்டி ஒரு பதிவு போடுங்கள் ..என்னடா பிடிக்காதவனை பத்தி எதற்கு பதிவு என்று நீங்கள் கேட்டால் ,நீங்கள் இன்னும் அரசியலில் நிறைய கத்துக்கணும் .. முதல்ல பாராட்டி ஒரு பதிவு ..பின் அனானியாக நீங்களே வந்து சும்மா கிழி கிழின்னு கிழிச்சுருங்க .. இப்ப தெரியுதா ஏன் பல பாராட்டு பதிவுகள் வருது என்று ? (அட கொய்யால ....அரசியலில் ரொம்ப தூரம் போவனுமோ )

எப்படி சமர்த்தியம்மாக பின்னூட்டம் இடுவது ...திட்டுவது .... இதை பற்றிய மர்மங்கள் வரும் பதிவில் வலை உலக பிரம்மாக்களின் முகத்திரையை கிழிக்க நீங்களும் பின்னூட்டம் இட்டு சொல்லலாம் tamilsh ல உங்க முத்திரையை குத்திட்டு போங்க


5/10/2008

காதலும் கற்று மற (பாகம் 6) -கடைசி பாகம்


எப்படி பஸ் பிடித்தேன் , எப்போ வீடு போய் சேர்ந்தேன் என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை .


வீட்டில் ஒரே சந்தோசம் . நான் வாங்கி வந்த பரிசு பொருட்கள் விளம்பரப்படுத்திக் கொண்டு இருந்தது என் பாசத்தை ...


என் அக்காவை பெண் பார்த்து சென்றார்கள் . வீட்டின் முதல் கல்யாண விழா . ஆனால் என் மனதிலோ ஒரு உருவமில்லா வலி என் உயிரை மெல்ல குடித்து கொண்டு இருந்தது .


அப்படி என்ன , என்ன இருக்கிறது அவளிடம் என்று நினைத்து கொண்டு இருந்தேன் . பின்னர்தான் தெரிந்தது எனக்கு எல்லாமுமாக அவள் இருகிறாள் என்று .
அவளுடன் ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் .


வேறு வழியில்லை . அவள் தந்த எண்ணையே செல்பேசியில் அழைத்தேன் .. அழகான பெண் குரல் என்னை எச்சரித்தது .. ஆம் .செல்பேசி தற்போது அணைக்கப் பட்டு உள்ளது என்று .

என் காதலின் கடைசி வாயிலும் அடைக்கப்பட்டு விட்டது .


நான் சினிமாவில் உள்ளது போல பெரிய ஹீரோ இல்லை . அதனால் பெரிய நண்பர்கள் வட்டமும் இல்லை .

எனக்கு இருந்த ஒரே ஒரு நட்பிடம் , நண்பனிடம் உதவி கேட்டேன் .


ஆனால் அவனோ
" அப்படி என்னடா பெரிய காதல் . அதுவும் ௨ நாள்ல , கவலையை விடு .அடுத்த தடவை ரயிலில் இன்னொரு காதலி கிடைப்பாள். இதற்கெல்லாம் கவலை படாதே "என்றான் .


நான் அவனிடம் மெதுவாக கேட்டேன் "உன் அம்மா என்று வேறு யாரையாவது உன்னால் ஒத்துக்கொள்ள முடியுமா ? ".


சற்றே என்னுடைய தோள்பட்டையை அழுத்தி அமர்ந்தான் . அந்த அழுத்தம் சொன்னது புரிதலின் ஆழத்தை ..

அடுத்த நாள் காலை , என் நண்பனிடம் இருந்து அழைப்பு ..என் காதலியின் இருப்பிடம் கண்டுபிடிக்க பட்டுவிட்டது என்று .


அவள் வீட்டின் அருகே சென்றோம் .விசாரணையை முழு வீச்சில் நடத்தினான் என் நண்பன் .

விசாரணையின் முடிவில் எனக்கு முடிவு இருக்கிறது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை .


விசாரணையின் முடிவு இதோ
"நேற்றே என்னவளுக்கு பெண் பார்க்கும் படலம் நிறைவு பெற்றது .
அவள் வேறு ஒரு சொந்தத்தின் வீட்டுக்கு அனுப்ப பட்டு விட்டாள்."


என் காதலுக்கு மரண ஓலை வாசிக்கப்பட்டு விட்டது .

பிணமாக வாழ்வது கடினம் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை .


அன்றே தெரிந்து கொண்டேன் சாவை விட வாழ்வு எவ்வளவு கொடியது என்று .

என்னடா இவன் இவ்வளவு ஓவரா பேசுறான் என்று திட்டாதீர்கள் .

ஏனென்றால் மூச்சு விடுவது கூட இப்போது எனக்கு பாரம் தான் .


காதலை முத்தமிட்ட நான் , சாவையும் முத்தமிட துணிந்த போது என்னை தடுமாற செய்தது பாசம் .

அக்காவின் கல்யாணமும் , தங்கையின் வருங்காலமும் என்னை சாவிடம் இருந்து கைப்பற்றியது .


கண்ணதாசனும் , இளையராஜாவும் எனக்கு சொந்தம்மானர்கள் . சோக பாடல்களே எனக்கு தேசிய கீதமாயின .


துக்கம் என் தூக்கத்தை தின்றது .


நான் இப்படி துடிப்பது போல்தானே அவளும் துடித்து கொண்டு இருப்பாள்.


நாயாக பிறந்தால் கூட காதலில் ஜெயித்து இருப்பேன் . பாவம் என்னை மனிதனாக அல்லவா படைத்தது விட்டான் பாவி இறைவன் .


காதலை வைத்து கொண்டு , காதலியை தொலைத்த நான் , மெரினா பீச்சில் என்னை தொலைத்து கொண்டு இருந்தேன் . யாரை பார்த்தாலும் அவளை போலவே இருந்தது .

என் மன நோய்க்கு மருந்தாக அவள் மீண்டும் கிடைபாளா ?.


திடீரென நான் சுவாசித்த அதே குரல் , என்னை மயக்கிய அந்த இசை , எனக்கு மிக அருகிலே கேட்டது ...

ஆஹா என் தேவதை ..

என் சொர்க்கம் .,

என் விடியல் ,

என் வாழ்க்கை என மொத்தமுமாக நின்று கொண்டு இருந்தாள்.


என் தேவதை சிவப்பு நிற புடவை கட்டி இருந்தாள் . மன்னிக்கவும் புடவை அவளை கட்டி கொண்டு இருந்தது .


அடி மேல் அடி வைத்து அவள் முன் நின்றேன் . வரம் தரும் சாமியின் முன் நின்றேன் நான் .


அவள் கண்களில் காதலுக்கு பதில் அதிர்ச்சி . பயம் ..என் மனதை காயமக்கிய அவள் கண்களில் காதல் இல்லையே ????


புரியவில்லை எதுவுமே எனக்கு .


அவள் கண்ணீர் , என் காதலின் எடை தாங்காமல் , அவள் கன்னத்தை
நனைத்து

பின் ..

பின் ...

அவள்.....

அவள் தாலியையும் நனைத்தது ...


இப்போது புரிந்தது எல்லாம் ..


நான் கனவிலும் நினைத்திராத அந்த காட்சி அங்கே மௌனமாக நடைபெற்று கொண்டு இருந்தது .


அவளிடம் எந்த கேள்வியும் கேட்காமல் என் கால்கள் நடக்க துவங்கின .


நான் என்ன கேட்பேன் ?


எப்படி மாறினாள் ?


ஏன் மாறினாள் ?


அவள் கண்களில் அன்று காதலை பார்த்தேனே ! இன்று அந்த காதல் எப்படி மறித்தது ?


உண்மை காதலை மறக்க முடியுமா ?


அப்படி எனில் ஏன் காதல் உண்மை கிடையாதா ?


இவள் இன்னொருவனின் மனைவி . அப்படி எனில் ஏன் காதலி ?


அவளின் நிழலுக்கு கூட நான் தான் எஜமான் என்று நினைத்தேனே ! ஆனால் இப்போது ?


தாயின் கற்பை போல அல்லவா என் காதலையும் நினைத்தேன் . ஆனால் இன்று என் காதல் , கற்பு ????


என்னை நினைத்த மனதில் இன்னொருவனா ? எப்படி முடியும் ? ஆனால் அது தானே நடந்து கொண்டு இருந்தது .


நான் காதலிக்கும் போது உலகமே என்னை கவனிப்பதாக ஒரு கர்வம் . இப்போது நான் இந்த உலகத்தையே கவனிக்க வில்லை ..



பாவம் எதிரே வந்து கொண்டு இருந்த அரசு மன்னிக்கவும் அசுர பேருந்தையும் நான் கவனிக்க வில்லை .




" சின்ன வயசு போலிருக்கு "


" எதாவது பைத்தியமாய் இருக்கும் "


" எவளையாவது சைட் அடிச்சு , இப்படி மாட்டி கொண்டானோ ? "


" இப்பவெல்லாம் இந்த சின்ன பசங்களுக்கு உடேம்பேல்லாம் பண திமிர் . அதான் இப்படி ? "


" தம்பி , உயிர் இருக்கா என்று பாரு "


" யாருய்யா அது .இங்க உடம்பையே காணோம் "


" உடம்பை தூக்கிட்டு பக்கத்தில் இருக்கிற மருத்துவமனைக்கு போலாமா ?"


"எங்க தூக்குகிறது ? பொறுக்கி கிட்டு தான் போகணும் ."


" எங்கப்பா தலையையே காணோம் ?"


" யோவ் , அடங்குயா . பாவம் இந்த சின்ன வயசிலேய சாவு வரணும் ?"


எல்லோருடைய குரலும் எனக்கு கேட்கிறது .

என் அழுகை தான் யாருக்குமே கேட்கவில்லை .


இறந்தப்பினும் , மறக்க முடியாமல் அழுகிறேன் .

இந்த பாவியின் அழுகை என்னவளுக்கு கூட கேட்க வில்லை .



உங்களுக்காவது கேட்கிறதா ??????



(முற்றும்)... கீழே உள்ள Tamilish ஓட்டளிப்பு பட்டையில் உங்க வோட்டை குத்திட்டு போங்க