மந்திர ஆசைகள்

2/15/2010

நான் ஏன் காதலிக்க கூடாது ?

எல்லாரும் ஏன் காதலிக்கிறார்கள்  என்று என் ஒரு பக்க மூளை கேட்டது ?

இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது ?  என்று  கேள்வி வந்து விழுந்தது .

Homely பொண்ணுங்களை காதலிக்கலாமா இல்லை,  மாடர்ன் பொண்ணுங்களை காதலிக்கலாமா  என்று  அடுத்த கேள்வி .

ஹோமேலி பொண்ணுங்களை காதலிக்கலாம் என்றால் மாடர்ன் பொண்ணுங்க நல்லவங்க இல்லையா என்று இன்னொரு கேள்வி .

ரெண்டும்  சேர்ந்து  ஒரு பொண்ணை பார்த்து காதலிக்கலாம் என்றால் , அவளை எங்கு பார்ப்பது என்று கேள்வி .

கோவில் என்றால் ஒரே homely , pub என்றால் ஒரே மாடர்ன் . ரெண்டும்  சேர்ந்த ஒரு பொண்ணை ஆபீஸ்ல காதலிக்கலாம் என்றால்
வேறு  யாரையாவது அவள் காதல் செய்கிறாளா என்று திடீர் கேள்வி .

காதலை சொன்னப்பின் என் காதலை ஒத்துக் கொள்வாளா என்று அடுத்தக் கேள்வி .

ஒத்துகொண்டப்பின் பின் காதல் ,கல்யாணத்தில் போய் முடியுமா என்று சந்தேக கேள்வி .

கல்யாணம் என்றால் பெற்றோர் சம்மதத்துடன்  இல்ல ஓடிப் போய் கல்யாணமா என்று பயங்கரக் கேள்வி .

கல்யாணம் செய்தப்பின் காதலிக்க முடியுமா என்று  கேவலமான கேள்வி .

பதில் தெரியாததால்  நான் இது வரை காதலிக்க வில்லை .

போதுமா , போதுமா ..

இனிமே எவனாவது , மச்சி அப்புறம் உன் ஆளு என்ன  சொல்றா ?
அப்படின்னு  கேட்டீங்க ...!!!@@#$$$

ஏன்டா  இப்படி , ஒருத்தனை அழ வச்சி பார்ப்பதில்  நம்ம தமிழர்கள் தான் பெஸ்ட் ..

டிஸ்கி : இப்போதைக்கு விஸ்க்கி ,

அப்புறம் உங்களை மீட் பண்றேன் .

அவள் பறந்து போனாளே , என்னை மறந்து போனாளே..


2/11/2010

அரக்க குணம் ,இரக்க மனம்

இயலாமையின் வெளிபாடு கோபம் . அதனை தனிப்பதர்ககாக நான் அடிக்கடி செல்லும் இடம் அண்ணாச்சி டீ கடை .

அந்த கசங்கிய  நாளிதழ்கள் , சுட சுட வடை ,அந்த பக்கம் இருக்கிற லேடிஸ் ஹாஸ்டல் இது எல்லாம் தேவைபடுகிறது ஒண்ணுக்கும் உதாவத இந்த கோவத்திற்கு .

அன்றும் மற்றொரு நாளே . வழக்கம் போல  டீ கடை  நோக்கி  என் கோப பயணம் சென்றது .

மிக பரிதாபமாக ஒரு ஜீவன் , இல்லை ,இல்லை ஒரு " நாய்"  ஜீவன் என்னை முறைத்து பார்த்து கொண்டு இருந்தது . நாங்க எல்லாம் யாரு ? அப்படியே முறைச்சிகிட்டே  பின்னாடி நடந்து அண்ணாச்சி கடைகிட்டே வந்து சேர்ந்தேன் .


அப்பவும் அந்த நாய் என்னையே முறைசிகிட்டே இருந்தது . என்னது தொப்புளை சுத்தி 16 ஊசியா ? என் உள் மனம் கேள்வி கேட்க துவங்கியது  .

அப்போது தான், ஒரு 5 அல்லது 6 நாய் குட்டிகள் அதன் அம்மாவை சூழ்ந்து கொண்டன . ஆனால், அந்த   நாய் , அந்த குட்டிகளை தள்ளி விட்டு என்னை நோக்கி மெதுவாக வரத் துவங்கியது .

திடிரென நின்றது . குட்டிகள் பால் குடிக்க துவங்கின . ஆனால், அந்த  நாய் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோட இருக்கும் என்பது போல ரொம்ப பலவீனமாக இருந்தது .

மீண்டும் அந்த நாய் , என்னை நோக்கி வரத் துவங்கியது . அப்போதுதான் கவனித்தேன் ஒன்றை . அதன் அமுத சுரபியில் இருந்து ரத்தம் வடிந்தது கொண்டு இருந்தது .ஏனோ "ஆயரத்தில்    ஒருவன் " படம் மனதில் வந்து போனது .

நான் ஒரு பன்னை வாங்கி  அதற்க்கு வைத்தேன் , ரொம்ப பசி போல . லபக் லபக் . முடிந்தது எல்லாம் . எனக்கு ஒரு நன்றி  பார்வை பரிசளித்தது .


டீ கடை  அண்ணாச்சிக்கு உடனே ரொம்ப கோபம் ,
" இந்த சனியன்  திரும்பவம் வந்துடுச்சா !!!???..
டேய் அந்த கட்டையை  எடுடா .."
எனக்கு இதயம் மிக வேகமாக துடிக்க துவங்கியது .

சரியாக தூக்கி எறியப்பட்ட அந்த கட்டை அந்த நாயின் தலை மற்றும் அதன் ஒரு குட்டியின் காலையும் பதம் பார்த்தது . கண்டிப்பாக ரத்தம் வந்து இருக்கும் .

அந்த நாய் , அடி வாங்கிய அந்த குட்டியை நக்கி கொண்டே நகர்ந்து சென்றது .
நான் திரும்பிக் கொண்டேன் .

ஈன சுரத்தில் அது கத்திக் கொண்டே நடந்து கொண்டிருந்தது . எதோ ஜென்ம பந்தம் போல , என்னால் டீ குடிக்க முடியவில்லை .

இன்னும் ரெண்டு பன் வாங்கினேன் .  கால்கள் நடக்க துவங்கின அந்த நாயை நோக்கி . மன்னிக்கவும் அந்த தாயை நோக்கி .


2/11/2010

ச்சோ ஸ்வீட் ....