மந்திர ஆசைகள்

4/12/2008

காதலும் கற்று மற (பாகம் 5)


அவளை பார்க்க சூரியன் சற்று சீக்கிரமே வந்து விட்டான் . நிலவும் சூரியனும் சந்தித்து கொண்டன . ஆம் . அவள் சூரியனை பார்த்து சோம்பல் முறித்தாள்.


"நல்ல தூக்கம் இல்லையா ?" - அவள் .

" இல்லே , கெட்ட தூக்கம் " - நான்

"அடடா , கலையிலே ஆரம்பிச்சிட்டன்யா " - அவள் .

" இன்னும் ௨ மணி நேரத்திலேயே சென்னை வந்துவிடும் " - என்றது பக்கத்தில் நின்ற பெருசு ..

என்னது ரயில்வே ஒழுங்கா வேலை செய்யுதா ?..
டிக்கெட் இல்லாமல் பஸ்சில் மாட்டிகொண்டது மாதிரி ஒரு அவஸ்தை ...

இதயங்களின் பரிமாற்றத்திற்கு பின் விலாசங்களை பரிமாற்றிகொண்டோம்.அந்த 2 மணி நேரமும் மௌனம்தான் எங்களை பேச வைத்துக்கொண்டு இருந்தது .

சென்னையும் வந்தது ..வில்லனும் வந்தான் . மன்னிக்கவும் வந்தார் .

என்னடா காதல் கதையில் சோகமே இல்லைன்னு நீங்க போருமனது ஆண்டவனுக்கு கேட்டுவிட்டது போல ..

என் உயிரை என்னை கேட்காமலே அழைத்து கொண்டு சென்றார் அவள் அப்பா .

அவள் கண்களில் நான் .
அதனால் கண்ணீர் வெளி நடப்பு செய்தது .

அவள் என்னை பார்த்து கொண்டு இருந்தாள்.அவள் தந்தை என்னையும் , அவளையும் மாறி மாறி பார்த்தார் .என்னை அழைத்தார் .

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை போல ஒரு பார்வை அவரிடம் இருந்து ..

"என்ன காதலா ? " - அக்னி கனலாக கேள்வி அவரிடம் இருந்து .

" ஆமாம் " என்றேன் ஆழமாக .

" இந்த இரண்டு நாளுக்குள் அப்படி என்ன காதல் உங்களுக்கு " -அவர் ."

இரண்டு விநாடி போதும் காதலிக்க " - நான்

" அப்பா ... " என்று அவள் எதோ சொல்ல துவங்க ..

" நிறுத்தும்மா , எதாவது சொல்லாதே . நான் மட்டும் இல்லை நம்ம குடும்பமே தாங்காது " - அவர் .

"இல்லையப்பா .அவர் நல்லவரு " - அவள்

"நாங்க எப்பம்மா கேட்டவங்கள மாறினோம் ? " - அவர் .

அவள் மௌனத்தில் பாசம் தெறித்தது.

" ஏன் தம்பி , அக்கா , தங்கச்சி எல்லாம் உங்களுக்கு இருக்காங்களா ? - அவர் .கண்டிப்பாக பாசம் இல்லை , விசம் இருந்தது அவர் பேச்சில் .

" அவங்களும் இப்படிதானா , 2 நாளுக்குள் யார்கிட்டவது " என்று அவர் முடிக்கும் முன் .

" மரியாதையாக பேசுங்க " -நான் கோபமாக .

" ஏம்பா, உன் கூட பிறந்தவங்களை நான் ஒருத்தன் தப்பா பேசுவது கூட உன்னால தங்க முடியலை . என்னால எப்படிப்பா நான் பெத்த பிள்ளையை " என்று அவர் முடிக்கும் முன் கண்ணீர் முந்தி கொண்டது .

"காதலிப்பது குற்றமா ? " என் கேள்வி .

" எதுக்கு காதல் " - அவரிடமும் கேள்வி ..

" சந்தோசமாக வாழ்வதற்கு " -என் பதில் .

" இப்ப , நீங்க சந்தோசமாக இல்லையா ? - அவர்

" சாவதில் கூட சந்தோசம் தருவது காதல் " - நான்

" வாழ , போராட தெரியாத கோழை யாக்குவது தானே உங்க காதல் " - அவர் "பேசி புரிவதில்லை காதலும் , கடவுளும் " - நான்

" அதே போல்தான் , கடமையும் , பாசமும் " - அவர் .

" ஏன் சார் , காரணமே இல்லாமல் காதலை எதுகிறீங்க ? " நான் .

அவர் " என்னா , பிள்ளைங்களை பெத்தவங்க காதலிக்கிறது தான் . அது சரி நீங்க ஏன் காரணமே இல்லாமல் காதலிகிறீங்க "

" நீங்க உங்க தங்கச்சி , அக்காவுக்கு காதல் கல்யாணம் பண்ணிட்டு வாங்க , நான் ஏன் பொண்ணை தரேன் ." -அவர்

" சார் , நான் நீங்க நெனைக்கிற மாதிரி இல்லை , நான் " - என்று முடிக்கும் முன்

" ராமனகவே இருந்துட்டு போ . ஆனால் என் பொண்ணு உன்னோட சீதா இல்லை .வேண்டாம்மா இந்த உறவு " - அவர்

" அப்பா " என்றாள் கண்ணீருடன் ..மெதுவாக கரைந்து கொண்டு இருந்தது என் காதல் அவள் கண்ணீருடன் .
" ஏன் தம்பி , நான் தந்த 20 வருஷ பாசத்தை விடவா உங்க 2 நாள் காதல் பெருசு ? " - அவர் .
" ஏன் சார் , காதலா , பாசமா என்று போட்டி போடுறீங்க " - நான் .

" அப்பா , அவர் ....அப்பா " - பேச திராணியற்று சிலையனால் என்னவள் .

நிலநடுக்கம் எனக்குள் .

பாதிப்பு அவள் மனதில் .

அவள் நிழல் கூட ரொம்ப நேரம் நிற்கவில்லை அங்கே .
தனிமையை எனக்கு பரிசாக தந்து விட்டு பாசமும் ,காதலும் சென்று விட்டன .

என் கதையை படிக்கிறீங்களே நீங்க எந்த பக்கம் . அது சரி கடவுளே என் பக்கம் இல்லை .நீங்க மட்டும் விதி விலக்கா என்ன..?
என் காதலை தோற்க விட மாட்டேன் .. ஜெயிப்பேன் .. கண்டிப்பாக ..

என் நிழல் கூட நெருக்கம் காட்டவில்லை அந்த ரயில்வே நிலையத்தில் ..
" நந்தி மாதிரி நிக்கிறானே " என்ற யாரோ ஒருவரது திட்டுதான் எனக்கு சொன்னது என் வாழ்நாளில் களவு போயிருந்த 4 மணி நேரத்தை ..

( தொடரும் )


3/29/2008

காதலும் கற்று மற (பாகம் 4)


"அவள் அழகாக பேசுறா ,அளவா சிரிகிறா, அவளை பார்த்தாலே ஜில்லென்று மனசுக்குள் ஒரு மின்னல் .ஆனால் பெண்கள்கிட்ட நான் அதிகமாக பேசாததால் ,அவள் என்னை ரொம்ப பாதிக்கிறாலோ ..." என்று நான் முடிக்கும் முன் .


அவள் கோபமாக "அப்புறம் , காதல்னா என்ன ?"

"காதல்னா ..பாதுகாப்போட ஒரு பாசம் .சொல்லாமலே பசிகுதுன்னு அம்மாவுக்கு தெரியுது பாருங்க ,அது மாதிரி ஒரு புரிதல் இருக்கனும் .நம்ம அம்மாவை எந்த பெண்ணுடமவது நாம் ஒப்பிட்டு பார்த்து இருகோமோ ?. அழகோ , பணமோ , வயசோ எதுவும் அன்புக்கு காரணமாக இருக்க கூடாது ." என்றேன் நான் .


"இதுவரை ஒரு சின்ன குழப்பம் இருந்தது . இப்ப இல்லை ..நன்றி " என்றாள் என்னவள் .

அவளுக்கு குழப்பம் போச்சு. எனக்கு ?????

பேச்சு வார்த்தைக்கு ஒரு தற்காலிக முட்டுக்கட்டை போட்டு படுக்க சென்றோம் .தனி தனியாகத்தான் (குழப்பம் உங்களுக்கு வரக் கூடாது அதுக்குதான் )


அடுத்த நாள் காலையில் சூரியனும் , நிலவும் ஒரே நேரத்தில் உதயமாயின . ஆமாம் .எதிரே அவள் .

அடிக்கடி உடைந்து விடுகிறது இந்த கண்ணாடி மனசு , அவள் சிரிப்பதால்.ஜில்லென்று ஒரு காதல் மன்னிக்கவும் ஒரு காற்று இருவரையும் பேச வைத்தது.


என்னை நானே திடப்படுத்தி , அவளிடம் " என்னை , என்னை .....உனக்கு " என்று இழுத்துக் கொண்டு இருக்கும் போது ...

"பிடிச்சி இருக்குது " பதில் அவளிடம் கிடைத்தது ..


மரணத்தை வென்ற சுகம் எனக்கு ..ஆனாலும் என் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்து

"நீ , நீயாகவே இருகிறாய் , அதுதான் எனக்கு உன்னை பிடிச்சி இருக்கு " என்றாள்.


அப்புறம் நாங்கள் மௌனமானோம்.மனசுகள் பேசிக் கொண்டன .புயல் கரை கடந்தது ..அவள் பேசினாள்.


"உனக்கு என்னன்ன பிடிக்கும் " -அவள்

" எவ்வளவோ இருக்கு . இப்ப நீ மட்டும் தான்" - நான் .


பாசக்கார அண்ணன் , திருட்டுகள் அதிகம் செய்யும் அண்ணனின் குட்டி பையன் , தன் dressukku மட்டும் சண்டை போடும் தங்கச்சி , அந்நியன் அப்பா , அப்பாவி அம்மா என்று முழு குடும்பத்தை பற்றி செய்திகள் வாசித்தாள் .


திடிரன பேச்சை நிறுத்தி , " ஏன் எதுவும் பேச மட்டுங்குற ? " என்றாள் .


"நான் பேசும் நேரம் கூட உன் பிரிவை என்னால் தாங்க முடியாது என்றேன் .

" இது கொஞ்சம் ஓவர் " என்றாள் அவள் .


சில சமயம் மௌனத்தின் அமைதியை எந்த மொழியினாலும் மிஞ்ச முடியாது .


" அது என்னோவோ உன்னை பார்க்கும் போதுதான் நான் வாழ்கிறேன் என்ற உண்மையே எனக்கு உரைக்கிறது " என்றேன் ஆசையோடு .

அவள் ஒரு பேரு மூச்சோடு , குறுக்கே கை கட்டிக்கொண்டு என்னை ஆழமாக பார்த்தாள்.

புத்தனுக்கு கிடைத்த போதி மரம் என் முன்னால் அழகாக சிரிக்கிறது .
காற்று அவள் கேசத்தை செல்லமாக சேதப் படுத்தி கொண்டு இருக்கும் போது ..

"பொறாமையாக இருக்கு " என்றேன் .


" யார் மேல ? " - அவள்

" இந்த காற்று மேல " -நான்

" ஏன் ? " - அவள்

" உன்னை தொட்டு , என்னை காயப்படுத்துதே" - நான்

" அதுகென்ன , நீயும் தொட்டு .." என்று முடிக்காமல் நாக்கை கடித்து கொண்டாள்.

"பொறுக்கி , நீ பெரிய ஆளுதான் " - என்றாள் அவள் நாணம் விலகாமல் .

அப்போ அவள் முகத்தை நீங்க பார்க்க வேண்டுமே .. வேண்டாம் ..வேண்டாம் .அதுக்கு நீங்க பெரிய புண்ணியம் பண்ணி இருக்கனும் .



"வைரமுத்து , கண்ணதாசன் , வாலி எல்லோரை விட நான் பெரிய கவிஞன் தெரியுமா ? " - நான்

"உனக்கு கவிதை தெரியுமா ? சொல்லு ..சொல்லுப்பா ..ப்ளீஸ் .." - என்னவள் கெஞ்சலோடு

"அவங்களுக்கு தெரியாத கவிதை , எனக்கு மட்டும் தெரிந்த கவிதை நீ " என்றேன் சிரிப்போடு ..


எங்களுடைய கண்கள் சற்று நேரம் முத்தமிட்டு கொண்டன .என்னவள் என் கையை பற்றினாள் சற்று அழுத்தமாக ..அப்போது முடிவெடுத்தேன் இவளை கைபிடிக்க மரணத்தை கூட முத்தமிடலாம் என்று .


என்னடா இப்படி கடலை போடுறான்னு புலம்பாதிங்க .. அதான் நாங்க தூங்க போனோம் ..நான் தூக்கத்தை தொலைத்த இரவுகளில் அதுவும் ஒன்று ..


கனவில் கூட கண்ணியம் மீற வில்லை அவளிடம் ..

முதன் முதலாக உணர்ந்தேன் முனிவனாக ..

காதல் எனக்கு கற்று கொடுத்த முதல் பாடம் .

டார்வின் உயிரோடு இருந்தால் சொல்லியிருப்பார் குரங்கிலிருந்து மனிதனாக மாற காரணம் காதல் என்று .
போங்கப்பா போய் கொஞ்சம் காதலிச்சு பாருங்க என் உணர்வு புரியும் .

என் காதலுக்கு கல்லறை கட்ட கற்கள் சேகரிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்று தெரியாமல் நான் விளித்து கொண்டு இருக்க ,

இந்த கோவலனையும் , ராமனாக்கிய அசதியில் தூங்குகிறாள் என் செல்லம் ..
தொடரும்


3/23/2008

காதலும் கற்று மற (பாகம் 3)


ஆமாம் ..

வாய் திறந்து என்னிடம் அவள், " இந்தாங்க " என்று தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.நான் அதை வாங்காமல் , எழுந்து சென்று சற்று தொலைவில் விற்று கொண்டு இருந்த ஒருவனிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கி குடித்தேன் .

மீண்டும் அவளை பார்க்கும் போது தான் உணர்ந்தேன் . உலகிலேயே மிகச் பெரிய பாவத்தை செய்தது போல ..

அவளிடம் சென்று , " இல்லைங்க , நான் வாங்கி குடித்து விடுவேன் , பாவம் , உங்களுக்கு விக்கல் எடுத்தால் யாரிடம் வாங்குவீர்கள் ? ..

நீங்கள்தான் யாரிடமும் தண்ணீர் வாங்க மாட்டிங்களே ! அதனாலதான் " என்றேன் ..



" அப்பாதான், யாரிடம் எதுவும் வாங்காதே என்றார் " - அவள்

ஏனோ நம்பியாரின் நினைவு வந்தது . ஆஹா ! நம்பியரேதான் ..அவள் அப்பா எதிரில் நின்று கொண்டு இருந்தார் .

என்னை பார்த்து ஒரு முறைப்பு , பின் அவளிடம் " இன்னைக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகுமா !? ..என்று சமாதானம் பண்ணிக் கொண்டு இருந்தார் .ஆனால் எனக்குள்ளே ஒரே டாப்பங் குத்து பாடல்கள் ....

அவள் அப்பா சென்றப் பின் , மெதுவாக பேச்சு கொடுத்தேன் ."என்ன படிக்கிறீங்க ?" - நான் .

" இளங்கலை இறுதியாண்டு படிக்கிறேன் " -அவள் .

எதோ கணக்கு செய்தது என் மனசு .

எப்படித்தான் கடலை போடுவன்களோ ?எப்படி கடலைப் போடுவது என்று எதாவது புத்தகம் இருந்தால் என்னை மாதிரி இளைஞர் களின் புண்ணியம் கிடைக்கும் .

வேறு வழியே தெரிய வில்லை . பழைய பஞ்சாங்கம் ஸ்டைல் பயன்படுத்தி .

"உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு , ஆமாம் நீங்க எந்த ஊரு ?" -நான்
அவள் சிரித்தே விட்டாள் .பாவம் என் அறியாமை அவளையும் சிரிக்க வைத்து
விட்டது

"கொஞ்சமாவது யோசிச்சு வேற மாதிரி கேட்டு இருக்கலாம் .சரி நாங்க திருச்சி " -அவள்

"அப்ப நீங்க ஸ்ரீரங்கத்து தேவதையா ? " -நான்

" பரவா இல்லை , உங்களுக்கு கூட மூளை இருக்கே " -அவள்

பதில் கிடைத்து விட்டது . அடுத்த கேள்வி .. ஒண்ணும் தோன்ற மாட்டேங்குதே ??!!அட என்னங்க நீங்களாவது உதவி ...மன்னிக்கவும் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டு விட்டேன் .நான் குழம்பி கொண்டு இருக்கும் போது ..,

"என்ன , வீட்டு அட்ரஸ் எதாவது வேணுமா ? - அவள் .

"இல்லை , ம்ம் , ஆமாம் , இல்லை .ஐயோ ..எனக்கு தெரியவில்லை " - நான்

அவளிடம் மீண்டும் அந்த ரத்தின சிரிப்பு .

அவளை பார்த்த பின் ஒரு சந்தேகம் , கடவுள் ஒரு வேலை இருப்பரோ ?வேண்டாம் இந்த ஆன்மீக தேடல் , நாம் தேவதையை தேடுவோம் .

" இல்லைங்க , எனக்கு பெண்களிடம் அதிகமாக பேசி பழக்கமில்லை , அதான் " -நான்

" பார்த்தாலே தெரியுது " -அவள்

" போய் சேருகிற வரை கொஞ்சம் ஒரு டைம் பாஸ் போல நாம் பேசலாம் " -நான்

உடன்பாடு ஒத்துக்கொள்ள பட்டது ..

அவள் நெறைய பேசினாள். ஆனால் காதை தொட்ட பேச்சு , மூளையை தொட வில்லை . ஆமாம்ங்க , சில பேர் பேச்சில் அழகிருக்கும் . ஆனால் அவள் பேசினாலே அழகா இருகிறாள் .

எதோ பேசி கொண்டு இருக்கும் போது , மயக்கத்தில் நான் , " நீங்க ரொம்பவும் அழகா இருகிறீங்க "

அவள் என் கண்களையே பார்த்தாள் .ஒரு சின்ன புன்னகை எனக்காக .

" என்னை அடிக்கடி வெட்க பட வைக்காதிங்க " - -அவள்.

பின் அவளிடம் நான் , குடும்பம் , பாசம் , வேலை என எல்லாவற்றையும் உளறினேன் .ரொம்பவும் தயங்கி , தயங்கி அந்த கேள்வியை கேட்டேன் .

" நீங்க யாரைவது காதலிக்கீறிங்களா ?"

" ரயில் எறுகிரவரை இல்லை . ஆனால் இப்ப தெரியவில்லை "- அவள் பேசிவிட்டு என் கண்ணையே பார்த்தாள் .

என் வாழ்கையின் அர்த்தம் புரிய துவங்கியது ..அப்புறம் பேச்சு வாழ்கையை பற்றி திரும்பியது .

"நீங்க எப்ப காதலிக்க , சாரி , சாரி கல்யாணம் பண்ணிக்க போறிங்க ?" - அவள்

" முதலில் காதல், பின் கல்யாணம் " -நான்

"அப்ப , யாரை காதலிகிறீங்க ? " - அவள்

"எனக்கு தெரிய வில்லை , ஒரு பொண்ணை எனக்கு புடுச்சி இருக்கு . ஆனா அது பேரு காதலா ? - தெரிய வில்லை " - நான்

"என்ன குழப்பம் " - அவள்

(தொடரும் )