மந்திர ஆசைகள்

6/28/2010

தீனி

எத்தனை முறை கொலை செய்தாலும் சலிக்க வில்லை . ரத்தம் பார்க்காமல் சித்தம் தணியாது . மீண்டும் இன்னொரு கொசு .




இன்னொரு பொய் . ஆயிரம் பொய் கடந்தால் என்ன ? அத்தனையையும் தின்று கொண்டு இருக்கிறது அடியில் இருக்கும் ஒரு மெய் .



தமிழை தமிழில் பேசினேன் .புரியவில்லையாம் .
எனக்கு புரியவில்லை .யார் தமிழன் ?
 
 
வெட்கத்தை கேட்டேன் . கொடுக்கிறேன் என்றாள் . எனக்கு தெரியவில்லை பதிலுக்கு என் கண்களை கேட்பாள் என்று .
 
 
மௌனத்தின் மொழியை புரிந்துக்க் கொள்ள அதனையை கொலை வல்லவா செய்ய வேண்டி யுள்ளது .
 
 
காதலை தின்று காமத்தில் கற்ப்பை வளர்க்கும் காதலர்களுக்கும் வழி சொல்கிறாள் மெரினாவில் கண்ணகி .
 
 
உலகின் செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாம் . மரணத் தேதி சொல்லப்பட்ட இன்னொரு தாய் .


6/03/2010

நர்சிம் வாழ்க


இப்படி தலைப்பு வைக்கவே பெரிய தைரியம் வேண்டும் போல .
 அப்பாடி ? நர்சிம்க்கு இவ்வளோ எதிரிகளா ? 

நானும் அந்த பூக்காரி கதையை படித்தேன் . ஒரு எழவும் புரியல . அப்புறம் தான் அதன் பின்னர் இருந்த அரசியல் புரிந்த்தது . 

இதுவரை பதிவர்களை , பதிவர்களாக மட்டுமே பார்த்து வந்த எனக்கு இப்போது அவர்களின் சாதி சாயமும் தெரிகிறது . இருவரின் தனி பட்ட வெறுப்புக்கு ஜாதி , பெண்ணியம் , ஆணாதிக்கம் என எல்லா பூக்களும் புனைய பட்டது .

நரசிம் ஒரு ஆம்பிளையை இப்படி எழுதி இருந்தால் , அது ஒரு காமெடி பதிவாக இருந்து இருக்கும் . நல்ல வேளை, சந்தன முல்லை பெண்ணாக இருந்து விட்டார் . தன் தவறுக்கு நரசிம் மன்னிப்பு கேட்டதே ஒரு பெரிய வெற்றியாக பலர் கொண்டாடுகிறார்கள் . 

ஆமாம் , இதற்க்கு என்ன காரணம் ?  ஜாதி வெறி என வினவு கூறுகிறார் . ஆணாதிக்கம் என பல பதிவர்கள் கூவுகிறார்கள் ..  எது உண்மை என நர்சிம்க்கு மட்டுமே தெரியும் . 

ஆனால் இது வரை பதிவர்கள் பற்றிய ஒரு நல்ல கண்ணோட்டம் தலை கீழாக மாறி இருக்கிறது .  பதிவர் ஒருவருக்கு மருத்துவ செலவுக்கு யார் என்று தெரியாமல் பணம் அனுப்பிய வர்களை பார்த்த போது , எப்படி இவ்வாறு செய்ய தோன்றுகிறது என வியந்து இருக்கிறேன் .  

என்னுள் பெண்ணியம் பற்றிய ஒரு ஆழ்ந்த பார்வைகளை ஏற்படுத்தியது இந்த பதிவர்கள் தான் . ஆனால் இப்போது அந்த பூக்கரியை  விட மிக கேவலமாக நடந்து கொண்டது 
நர்சிம் மட்டும் அல்ல , நீங்களும் தான் .

தன்னையும் , மற்றவர்களையும் காட்டி கொடுத்த நர்சிம் வாழ்க .

சண்டை போட்டுக் கொள்ளுங்கள் . ஆனால் பதிவுலகம் என்ற இந்த வீட்டை எரித்து விடாதீர்கள் . 


5/11/2010

மொக்கையை தாண்டி வருவாயோ ???

மொக்கை பதிவை தேடி நாம் போக கூடாது .அதுவா நடக்கணும் . நம்மை தலைகீழா போட்டுத் தாக்கனும் . அடி பின்னனும் . எப்பவுமே பயங்கரமாக வெறுப்பு ஏற்றணும் . அது தான் உங்களுக்கு இப்ப நடந்து கிட்டு இருக்கு .

Actually  இந்த பதிவை நீங்க தேர்ந்து  எடுக்கல . அதுவா நடந்துச்சு . அதான் மந்திரன் பதிவு . அவ்வளவு மொக்கை .  கேவலமா எழுதுறான் .But மந்திரன் கிட்ட ஒரு மயக்கம் இருக்கு .

ஏய் , இன்னுமா  தொடர்ந்து படிக்கீறீங்க ? .

நான் சீக்கிரம் ஒரு நல்ல பதிவை எழுதுறேன் .அதை பத்தி என்னோட அடுத்த பதிவில் சொல்லுறேன் . திரும்பி வந்து படிங்க .

நீங்க : போடா பன்னாடை ..

நான்  : Thank you

நீங்க : வேணாம் டா
             வேணாம் டா  ,
            பிரச்சனை ஆய்டும் .ஆமாம் உன் மனசுல இந்த பதிவை பத்தி  என்ன சொல்லுது ?

நான் : சூப்பர் சூப்பர் அப்படின்னு சொல்லுது

நீங்க : நான் வேறு ஒரு நல்ல பதிவை படிக்க போறேன் . இது சரிபடாது மந்திரன் .

நான் : பிம்பில்லிக்கே பிலேப்பி ..

நீங்க : எவ்வளோவோ நல்ல பதிவு இருக்க ,நான் ஏன் இந்த
பதிவை படிக்கிறேன் ?

Bibliography :