மந்திர ஆசைகள்

6/30/2010

சொல்லாமலே

சொல்லிவிடு ஒருமுறையேனும்
காதலிக்கவில்லை  என்றாவது .
நொடிக்கு ஒருமுறை நிகழும்
மரணம் நிற்கும்
என்னுடன் நிரந்தமாக .

பேசும் கண்களை நீ வரமாய்
பெற்றதால் என்னவோ
ஊமையாய் போய் விட்டன
அத்தனை மொழிகளும் .

சொல்லிவிடு
காதலின் விலையை
செய்கூலி இன்றி தந்து
விடுகிறேன் சேதாரமாக
என் உயிரை

உன் மௌனத்தை
உடைக்கும் அணுகுண்டை
தேடி கொண்டு இருக்கிறேன்
என் காதலின் ஆய்வகத்தில் .


6/28/2010

தீனி

எத்தனை முறை கொலை செய்தாலும் சலிக்க வில்லை . ரத்தம் பார்க்காமல் சித்தம் தணியாது . மீண்டும் இன்னொரு கொசு .




இன்னொரு பொய் . ஆயிரம் பொய் கடந்தால் என்ன ? அத்தனையையும் தின்று கொண்டு இருக்கிறது அடியில் இருக்கும் ஒரு மெய் .



தமிழை தமிழில் பேசினேன் .புரியவில்லையாம் .
எனக்கு புரியவில்லை .யார் தமிழன் ?
 
 
வெட்கத்தை கேட்டேன் . கொடுக்கிறேன் என்றாள் . எனக்கு தெரியவில்லை பதிலுக்கு என் கண்களை கேட்பாள் என்று .
 
 
மௌனத்தின் மொழியை புரிந்துக்க் கொள்ள அதனையை கொலை வல்லவா செய்ய வேண்டி யுள்ளது .
 
 
காதலை தின்று காமத்தில் கற்ப்பை வளர்க்கும் காதலர்களுக்கும் வழி சொல்கிறாள் மெரினாவில் கண்ணகி .
 
 
உலகின் செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாம் . மரணத் தேதி சொல்லப்பட்ட இன்னொரு தாய் .


6/03/2010

நர்சிம் வாழ்க


இப்படி தலைப்பு வைக்கவே பெரிய தைரியம் வேண்டும் போல .
 அப்பாடி ? நர்சிம்க்கு இவ்வளோ எதிரிகளா ? 

நானும் அந்த பூக்காரி கதையை படித்தேன் . ஒரு எழவும் புரியல . அப்புறம் தான் அதன் பின்னர் இருந்த அரசியல் புரிந்த்தது . 

இதுவரை பதிவர்களை , பதிவர்களாக மட்டுமே பார்த்து வந்த எனக்கு இப்போது அவர்களின் சாதி சாயமும் தெரிகிறது . இருவரின் தனி பட்ட வெறுப்புக்கு ஜாதி , பெண்ணியம் , ஆணாதிக்கம் என எல்லா பூக்களும் புனைய பட்டது .

நரசிம் ஒரு ஆம்பிளையை இப்படி எழுதி இருந்தால் , அது ஒரு காமெடி பதிவாக இருந்து இருக்கும் . நல்ல வேளை, சந்தன முல்லை பெண்ணாக இருந்து விட்டார் . தன் தவறுக்கு நரசிம் மன்னிப்பு கேட்டதே ஒரு பெரிய வெற்றியாக பலர் கொண்டாடுகிறார்கள் . 

ஆமாம் , இதற்க்கு என்ன காரணம் ?  ஜாதி வெறி என வினவு கூறுகிறார் . ஆணாதிக்கம் என பல பதிவர்கள் கூவுகிறார்கள் ..  எது உண்மை என நர்சிம்க்கு மட்டுமே தெரியும் . 

ஆனால் இது வரை பதிவர்கள் பற்றிய ஒரு நல்ல கண்ணோட்டம் தலை கீழாக மாறி இருக்கிறது .  பதிவர் ஒருவருக்கு மருத்துவ செலவுக்கு யார் என்று தெரியாமல் பணம் அனுப்பிய வர்களை பார்த்த போது , எப்படி இவ்வாறு செய்ய தோன்றுகிறது என வியந்து இருக்கிறேன் .  

என்னுள் பெண்ணியம் பற்றிய ஒரு ஆழ்ந்த பார்வைகளை ஏற்படுத்தியது இந்த பதிவர்கள் தான் . ஆனால் இப்போது அந்த பூக்கரியை  விட மிக கேவலமாக நடந்து கொண்டது 
நர்சிம் மட்டும் அல்ல , நீங்களும் தான் .

தன்னையும் , மற்றவர்களையும் காட்டி கொடுத்த நர்சிம் வாழ்க .

சண்டை போட்டுக் கொள்ளுங்கள் . ஆனால் பதிவுலகம் என்ற இந்த வீட்டை எரித்து விடாதீர்கள் .