சொல்லிவிடு ஒருமுறையேனும்
காதலிக்கவில்லை என்றாவது .
நொடிக்கு ஒருமுறை நிகழும்
மரணம் நிற்கும்
என்னுடன் நிரந்தமாக .
பேசும் கண்களை நீ வரமாய்
பெற்றதால் என்னவோ
ஊமையாய் போய் விட்டன
அத்தனை மொழிகளும் .
சொல்லிவிடு
காதலின் விலையை
செய்கூலி இன்றி தந்து
விடுகிறேன் சேதாரமாக
என் உயிரை
உன் மௌனத்தை
உடைக்கும் அணுகுண்டை
தேடி கொண்டு இருக்கிறேன்
என் காதலின் ஆய்வகத்தில் .
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
எத்தனை முறை கொலை செய்தாலும் சலிக்க வில்லை . ரத்தம் பார்க்காமல் சித்தம் தணியாது . மீண்டும் இன்னொரு கொசு .
இன்னொரு பொய் . ஆயிரம் பொய் கடந்தால் என்ன ? அத்தனையையும் தின்று கொண்டு இருக்கிறது அடியில் இருக்கும் ஒரு மெய் .
தமிழை தமிழில் பேசினேன் .புரியவில்லையாம் .
எனக்கு புரியவில்லை .யார் தமிழன் ?
வெட்கத்தை கேட்டேன் . கொடுக்கிறேன் என்றாள் . எனக்கு தெரியவில்லை பதிலுக்கு என் கண்களை கேட்பாள் என்று .
மௌனத்தின் மொழியை புரிந்துக்க் கொள்ள அதனையை கொலை வல்லவா செய்ய வேண்டி யுள்ளது .
காதலை தின்று காமத்தில் கற்ப்பை வளர்க்கும் காதலர்களுக்கும் வழி சொல்கிறாள் மெரினாவில் கண்ணகி .
உலகின் செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாம் . மரணத் தேதி சொல்லப்பட்ட இன்னொரு தாய் .