மந்திர ஆசைகள்

9/21/2010

உழைப்பு


டேய் பஷீர்  , சீக்கிரம் ஒரு கொலை பண்ணிடுவேன் போல .??!!

 ஹரி, நீ புரியும் படி பேசவே மாட்டியா?

மச்சி , இன்னைக்கி தாண்டா அப்பரைசல் சம்பளம் வந்துச்சு . 10% ஹைக்   மட்டும் தான் போட்டு இருக்கானுங்க  .இனிமே இவனுங்களை  கண்ணுல விரலை விட்டு ஆட்டனும் டா .

என்னடா சொல்ற ? 10% ஹைக் ? என்னாலையே தாங்க முடியலே . நீ எப்படிடா  தாங்குற ?

உடைந்து போன மனங்கள் ஒன்றாக சொல்லும் ஒரே வாக்கியம் அங்கும் வந்தது .

கொய்யலா , டேய் பஷீர் , ஒரு குவார்ட்டர் சொல்லுடா  .

ஹரி வேணாம் டா , அது பத்தாது , ஒரு ஹாவ்  வாங்கிட்டு வரேன் . 

பூஜை ஆரம்பமானது . புலம்பல்கள் , சலம்பல்கள் . மேனஜெரின்  தூரத்து சொந்தம் கூட ஹரியின் வாயில் வந்து ,விழுந்து நொந்து போனது . 

ஹரி ,என்னடா சீக்கிரம் கிளம்பிட்ட ?

செத்தான்டா  அந்த மேனஜேர் .அவனுக்கு ஆப்பு ரெடி பண்ணத்தான் சீக்கிரம் போகிறேன் .

ஹாய் ராம்ஜி , எப்படி இருக்கீங்க ?

என்ன ஹரி , ஒரே சந்தோசமாய் இருக்கிற .. ஒ  அப்பரைசல் சந்தோசமா .. எப்ப ட்ரீட்? .
இவன் ஒன்னுக்கு போனால் கூட  ட்ரீட் கேட்கிற  மேனஜேர் என்று மனதுக்குள் திட்டப்படி 
உங்களுக்கு இல்லாமலையா , சீக்கிரம் வச்சிடுறேன் . சீக்கிரமாவே .

ஒரு சின்ன கேப்பிற்கு பிறகு ,
ஹரி , ஒரு ரெகுலர் வொர்க் தான் . நைட் 9 மணிக்கு , ஒரு con- கால் கிளைன்ட் கூட பண்ணிட்டு , code செக் அவுட் பண்ணி , பில்ட் பண்ணி சர்வரை ரெடி பண்ணி வச்சிரு . ஓகே  ?

ராம்ஜி , இனிமே அதை ஸ்டெல்லா பண்ணட்டுமே 

what happened ?

அது என் வேலை கெடையாது . கொஞ்ச நாள் நான் செஞ்சேன் . இனி  ஸ்டெல்லா செய்யட்டுமே .

That is impossible. She has family . You know ?

பேச்சுலர் அப்படின்னா அனாதைன்னு நெத்தியுல எழுதி ஒட்டிருக்கா என்ன  ?

என்ன அப்பரைசல் சரியில்லன்னு கோபமா ?

இல்லை , நான் என் வேலையை மட்டும் பார்ப்பேன்னு சொல்ல வரேன் .

இல்லை , உனக்கு எதோ ப்ரோப்ளம் , வா பேசுவோம் ,

எனக்கு இண்டரஸ்ட் இல்லை .. 


என்னடா ஹரி , இன்னைக்கு எப்படி போச்சு ?

 பஷீர் ,அதை ஏன் கேட்குற . வாயுல ஆப்பை மேனஜெருக்கு வச்சொம்ல . அவன் முகத்துல ஈ ஆடல . இன்னைக்கே கிளைன்ட் ராடு  ஏத்திட்டான் . மூஞ்சு அவனுக்கு செத்துப் போச்சு . இனி ,அவனுக்கு தினமும் தீபாவளி தான் .

அப்படி போடு அருவாளை . உலக மகா கேப்மாரி நீ . உனக்கே அவன் அல்வா கொடுத்தா எப்படி ?.

சரி விடு ,விடு ,. ரொம்ப  நேரமாச்சு . நம்ம அண்ணாச்சி மெஸ்சுக்கு போலாம் .

என்ன அண்ணாச்சி , தட்டு எடுக்கிற பய புதுசா இருக்கிறான் ?

ஒன்னும் இல்ல தம்பி , படிக்க பணம் இல்லை . நைட் வேலை செஞ்சி அந்த பணத்துல படிக்கிறேன்னு சொல்லி வந்தான் .அதான் போன போகட்டும் அப்படின்னு வச்சிகிட்டேன்.

நல்லா வேலை பார்கிறேன் இந்த பயப் புள்ள . என்னடா சொல்ற பஷீர் ?.


எத்தனாவது டா படிக்கிற ?

எட்டாவது படிக்கிறேன் அண்ணா .நாளைக்கு பரிச்சை இருக்குது , சீக்கிரம் போகணும் அண்ணா .

சரி ,சரி சீக்கிரம் சாப்பிடுறோம் .

எல்லாரும் வெளியே வரும் போது,
என்னடா ,திருப்பி  எங்கடா ஓடுற ? பரிச்சை இருக்குன்னு சொன்ன ?

ஒரு தட்டோட பின்னாடி ,லேசா  கொஞ்சம்  அழுக்கு  இருக்குது அண்ணா .

டேய் ,அது பின்னாடி தாண்டா இருக்குது , யாருக்கு தெரிய போகுது ?

அவன் சிரித்துக் கொண்டே, 
எனக்கு தெரியுமே அண்ணே 

-ஒரு சின்ன  கீத உபதேசம் .


9/20/2010

நீ கேளேன்

என்னதான் நடக்குது . நான் தெரியாமத்தான் கேட்கிறேன் என்ன நடக்குது ? அரசியல் நடக்குதா இல்லை அராஜகம் நடக்குதா . அப்படி என்ன செய்து விட்டார் .என் கட்சி காரர் நயன்தாரா . எதோ கொஞ்சம் அப்படி ,இப்படி  ஆசைப்பட்டு பிரபுதேவாவை லவ் பண்ணிட்டு இருக்கார் . கல்யாணம் கூட பண்ணிக்க போறார் . பிடிச்சா , கலையான பந்தியில் உட்கார்ந்து ஒரு முக்கு முக்கிட்டு போக வேண்டியது தானே . அதுதானையா உலக வழக்கம்.

அதை விட்டுட்டு , சின்ன புள்ளத்தனமா , அடிக்க போறேன் , உதைக்க  போறேன் , கல்யாணத்தை நிறுத்தப் போறேன் அப்படின்னு சில எதிர் கட்சிகள் பீதியை கிளப்புறாங்க . கடுபேத்துறாங்க யுவர் ஆனர் .

எனக்கு  சுத்தி  வளைச்சி பேசத் தெரியாது . டைரெக்டா விசயத்திற்கு வரேன் .  நம்ம கைப்புள்ள பிரபு தேவா , பொண்டாட்டி இருக்கும் போதே  இன்னொருத்திக் கூட லவ் பண்ணி புதுசா கல்யாணம் பண்ணிக்க போறார் .    இதுல என்ன தப்பு ? இதே மாதிரி பொண்ணுங்களும் , புருஷன் இருக்கும் போதே  இன்னொருத்தனை லவ் பண்ணி புதுசா  கல்யாணம் பண்ணிக்கலாம் .  அப்படி பண்ணினால் இந்த நாடு ரொம்ப நல்லா விளங்கிடும் . இது தெரியாம சில நொன்னைகள்  , இது குத்தாமாம் , தப்பாம்  அப்படி இப்படி
குதிக்கிறாங்க .

இது ஒரு  காதல்  

இல்லை, இல்லை. 

கள்ளகாதல் 
இல்லை .. இல்லை 

தெய்வீக காதல்
 இல்லை . என்னடா நமக்கே டங்கு எப்படி ரோல் அவுதே . சரி விடுங்க உங்களுக்கு தெரியாத காதல் இல்லை . அதனால அதை உங்க முடிவுக்கே விடுறேன் .





9/16/2010

கல்லறை வரை காதல்

  ஆதலால் காதலி
------------------------------

கண்களின்றி 
உன்னால் காண முடிந்தால் ,
வார்த்தைகளின்றி
உன்னால் பேசப்  முடிந்தால் ,
காற்றின்றி
இதயத்தால் சுவாசிக்க முடிந்தால் ,
உணவின்றி
உன்னால் புசிக்க முடிந்தால்
நீயும் காதலிக்கிறாய் .
சொர்கத்தின் கதவுகளை ,
நரகத்தில் தேடுவதைப் போல .
இனி ,
நண்பர்கள்  தான் தெய்வம்
பெற்றோர்கள் தான்  எமன் .
தாய்மொழியும் உன்னிடம் தடுமாறும் ,
வெட்கத்தை விலைக் கொடுத்து வாங்குவாய் .
வாழ்ந்து கொண்டே இறக்க தொடங்குவாய் .
வரமாய் நினைத்து சாபம் பெறுவாய் .
ஆனால் ,
முத்தத்தின் ஈரம் காயின் முன் ,
தோல்வி உன்னை தத்து எடுத்தால் ,
நடமாடும் கல்லறைகளில்
நீயும் ஒருவன் .


பொய்
--------------
ஷாஜகான் கூட
எனக்கு  பிச்சைகாரன் தான் .
என்னை இங்கு
ஒரு  தாஜ்மகால் அல்லவா
காதலிக்கிறது.