மந்திர ஆசைகள்

1/22/2010

கள்ளக் காதல்

ஏன் டீ , அங்க எவனை பார்த்து பல்ல காண்பிச்சு மயக்குற ? புருசனின் குரல் காதில் விழுந்தாலும் மெதுவாகவே அவள் திரும்பினாள்.
பழக்கப்பட்ட வார்த்தைகள் அவளிடம் பலம் இழந்து போயின.

விஷம் தெளித்த வார்த்தைகளை தாங்கி கொண்டு வெளியில் இருந்து வீட்டினுள் அடைப்பட்டாள்.

என்னடி , நான் இவ்வளவு கத்தியும் , துளியும் அசையாமல் எருமை மாடு மாதிரி நிக்குற ?

வழக்கம் போல அவள் கண்களில் கண்ணீர் .

என்னடி பத்தினி வே ஷம்  போடுற , முதல்  ராத்திரில்லே என்க்கிட்டையே நீ ஒருத்தனை லவ் பண்ணினேன்னு சொன்னவள் தானே ..!

கணவனிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததற்கு தினம் தினம் பரிசு மழை அவளுக்கு .


டிரைவர் பாண்டியன் அப்போது உள்ளே வந்தார் . ஐம்பது வயதை கடந்த நிலையால் நிதானம் சற்று அதிகம் அவருக்கு . ஆனால் அவராலே இவள் படும் துன்பங்களை தாங்க முடியாது .

என்னய்யா , இவ்வளவு லேட்டா வருகிறாய் ? சரி , சரி சீக்கிரம் வண்டியை கிளப்பு , போகலாம் .

அவன் வெளியேறினான் . அவன் இட்ட வடுக்கள் மட்டும் இவளுடன் .
மாலை , வில்லனுடன் அவன் நண்பனும்  வந்தான் .

டேய் ரகு  , என்னோட மனைவியை நீ பார்த்தது இல்லைல. இரு நான் கூப்பிடுறேன் .
அவன் கூப்பிடுவதற்க்குள் , அவளே அங்கு பயந்து நிற்க

உடனே ரகு , தேவதை மாதிரி உனக்கு மனைவிடா , நீ ரொம்ப  கொடுத்து வைததவன்டா.

நன்றி . சரி என்ன குடிக்க வேணும் உனக்கு ?

நான் வேண்டுமென்றால் காப்பி கொண்டு வரட்டா  என்று அவள் அப்பாவியாக கேட்க .
சிரித்து கொண்டே சரி என்றான் ரகு .

பின் அவள் கணவனிடம் , விருந்தாளிக்கு என்ன பிடிக்கும் என்று உன் மனைவிக்கு நன்றாக தெரிகிறது என்று பாராட்டினான் .
ரகு போன பிறகு ,
வீட்டினுள் ஒரு அணுகுண்டு வெடித்தது .

ஏண்டி , அவனை உனக்கு முன்னாடியே  தெரியுமா ? நான் கூப்பிடுவதற்க்குள் நீ ஏன் வந்தாய் ?
அவனுக்கு காப்பி தான் பிடிக்கும் என உனக்கு எப்படி தெரியும் ?
என்னடி இவனும் முன்னாள் காதலனா ?
இன்னும் எத்தனை பேருடி?

சொற்கள் எல்லாம் அவளை சுட்டு தின்றன .

அவன் போன பிறகு , இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த டிரைவர் பாண்டியன்,
தாயி , எப்படி தாயி ,இந்த பயலோட இருக்க , பேசாம உங்க வீட்டுக்கு  போய்டு தாயி .

நான் எங்கப்பா ,போவேன் . வீட்டுல இருந்தப்ப , காதலை ஒரு கொலை குற்றம் போல பார்த்து திட்டு , அடி , உதை வாங்கினேன் . இப்ப இவர்கிட்ட வாங்குறேன் .
நான் எதுக்குப்பா வாழனும் ? காதலிச்சது ஒரு தப்பா ?

நீ என்னோட மகளா இருந்தா , எப்பவோ உன்னை என் கூட அழைத்துக் கொண்டு போயி இருப்பேன் . இந்த பய ,உன்னை கொஞ்சம் , கொஞ்சமா கொன்னுடுவானே

விதி அதுவாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும் ?

கண்களில் கண்ணீர் இல்லை . கண்ணீரும் வற்றிப் போயி பல நாட்கள் ஆகிறது .


அடுத்த நாள் , அவன் போன பிறகு ரகு வந்தான் .

எங்கங்க அவன் இல்லையா ?

இல்லை , இப்பத்தான் அவர் வெளியே போனார் ..

அச்சோ . சரி நான் அவனை மறுபடியும் வரை சொல்கிறேன் . நீங்க எனக்கு அன்னைக்கு போட்ட காப்பி மாதிரி போட்டு எனக்கு எடுத்துக் கிட்டு வாங்க . ப்ளீஸ் .

உடம்பெல்லாம் கொஞ்சம் நடுங்கித்தான் போனால் அவள் . என்ன நடக்க போகிறதோ அவன் வந்தால்????

சமையலறையில் அவள் , காப்பி போட்டு கொண்டு இருக்கும் போது , பின்னாடி மிக நெருக்கமாக ரகு .

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க . எனக்கு எல்லாம் தெரியும் , உன்னை அவன் ரொம்ப கொடுமை படுத்துறான் இல்லை .

இப்படி பேசிக் கொண்டே அவளை அணைக்க முயல

நாயே , தள்ளி போடா , இல்லை இங்க நடக்கிறதே வேற .. என்று கண்கள் சிவக்க அவள் கர்ஜித்தாள் .

ரகு வோ , மிக மெல்லிய புன்னகை யுடன் , கிண்டலாக  .

இப்ப உன்னால்  என்ன பண்ண முடியும் ?. உன் புருஷன் தான் என்னை இங்க அனுப்பி நீ எப்படி நடந்துகிறன்னு வேவு பார்க்க சொன்னான் .நான் மட்டும் அவன் கிட்ட போயி ,
உன் பொண்டாட்டி நல்லவள் இல்லை .அப்படி இப்படி சொன்னால் என்னவாகும் ?

பித்து பித்து பிடித்தவள் போல் அவள் முகம் வெளிறிப் போயி இருந்த்தது .

இரகுவே மீண்டும் ,
 கொஞ்ச நேரம் எனக்கு சந்தோசம் தந்த்தால், நீ நன்றாக வாழாலாம் . என்ன சொல்ற ? உனக்கு வேற வழியில்லை என்று சொல்லி விட்டு அவளை நெருங்கினான் .

நெருப்பில் இடப்பட்ட பஞ்சு போல அவள் மனம் எரிந்து கொண்டு இருந்ததது .

ரகு இப்போது மிக நெருக்கமாக ,

இன்னும் நெருக்கமாக

இன்னும் ..

திடிரென அங்கு டிரைவர் வர, ரகு பயந்து நெளிந்து வெளியேறினான் .
பைத்தியம் பிடித்தவள் போல் அவள் அங்கு வெறித்து பர்ர்த்து கொண்டிருந்தாள் .

என்னமா நடந்ததது . யாரும்மா அவன் .. சொல்லு தாயி , என்ன நடந்ததது ?

கொட்டி தீர்த்தாள் . அமைதி அங்கு சிறிது நேரம் உயிர் வாழ்ந்த்தது .

பின் , அவர் விடும்மா , எல்லாத்தையும் விடும்மா .
என் கூட வாம்மா , தாயி ,  இனி நீ என் மகள்   .
அவள் கண்களில் முதல் முதாலாக அனந்த கண்ணீர் .

அடுத்த நாள் தினமலரில்

22 வயது பெண் 55  வயது வாலிபருடன் தப்பி ஓட்டம் 


12 பதில் செப்பியவர்கள்:

பின்னோக்கி சொன்னது…

கதை டிவிஸ்ட் நல்லாயிருக்கு.

தினமலர் பேப்பர் மேல உங்களுக்கு என்ன கோபம் ? :)

டக்கால்டி சொன்னது…

Super Machi...Good Story...

'பரிவை' சே.குமார் சொன்னது…

//22 வயது பெண் 55 தப்பி ஓட்டம் //

55 வாலிபருடனா????.

கதை நல்லாயிருக்கு.

angel சொன்னது…

very nice story

there is something to be hidden b/t everyone

மந்திரன் சொன்னது…

@இங்கிலீஷ்காரன்

என்ன ரொம்ப நாளா இந்த பக்கம் வரவே இல்லை

மந்திரன் சொன்னது…

@பின்னோக்கி
அந்த மாதிரி செய்திகளுக்கு எல்லாம் அந்த பத்திரிகை ரொம்ப பிரபலம்

மந்திரன் சொன்னது…

@Kumar
@Angel

அடிக்கடி இந்த பக்கம் வந்து போங்க ..

மந்திரன் சொன்னது…

@kumar
//55 வயது வாலிபருடனா????. //
தப்பை திருத்தி விட்டேன் ..

payapulla சொன்னது…

நல்லா கதை உட்ரிங்க மந்திரன் !

Unknown சொன்னது…

சூப்பர் ட்விஸ்ட்... நல்லா வந்திருக்கு கதை.

Bhuvanesh சொன்னது…

ஹ்ம்ம்.. நல்ல கதை.. நல்ல நடை.. நல்ல முடிவு !!

kunthavai சொன்னது…

கதை நல்லாயிருக்கு.