மந்திர ஆசைகள்

12/30/2009

வாலுவிடம் ஒரு வாலுத்தனம்


நம்ம பிரபல பதிவர் வால்பையன், இப்போ 500 followers தாண்டி வெற்றி நடைப் போட்டு கொண்டு இருக்கிறார் .நமக்கு இங்க குவாட்டர் போடுவதற்கே நாக்கு நாக்  அவுட் ஆய்டுச்சு . ஆனால் இவர் ஐந்தாவது சென்டுரி போட்டுவிட்டு அசால்டாக இருக்கிறார் .

அவருக்கும் எனக்கும் ஒன்னும் பெரிய பழக்கம் எல்லாம் இல்லை . ஆனால் அவருடைய எல்லா பதிவுகளையும் நான் படிப்பதுண்டு .

என்னை போன்று சின்ன பையன்களை (நிஜம் தான் நம்புங்க ..) தூக்கி விடுவதற்காக  , அவர் என்னை பற்றி சில வரிகள் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார் .
ஆனால் "யாருடா இவன் புதுசா?" என்று ஒருவர் கூட கேட்க வில்லை என்பது எனக்கு சற்று மகிழ்ச்சியை தந்ததது .என்னா, நமக்குத்தான் பப்ளிசிட்டி  புடிக்காதே ..

வாலுவின் , எல்லா பதிவுகளிலும் ஒரு மென்மையான நகைச்சுவை இழையோடிக் கொண்டு இருக்கும் . படித்த பதிவுகளையே என்னை திரும்ப ,திரும்ப   படிக்க வைத்தவர் இவர் .

வாலுவிடம்  சில சமயம் , சில விசயங்களில்  (இங்க்ளிஷ்காரன் பதிவில் ) நான் சண்டை போட்டு இருக்கிறேன் . மன்னிக்கவும் கருத்து வேறுபாடு( எல்லாம் அரசியல் ) கொண்டு இருக்கிறேன் . இருந்தாலும் ரசிக்க முடிந்த அளவுக்கு , வாலுவை வெறுக்க முடிய வில்லை .

பொதுவாக தொலைக்காட்சிகளில் தான் எதாவது ஒரு பிரபலத்தின் பேட்டியையை போடுவார்கள் . கொஞ்சம் மாற்றத்திற்காக வால் கொடுத்த பேட்டியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் ..



மந்திரன் :  வணக்கம் வால்  .

 வால்பையன்: வணக்கம் தல

 மந்திரன் : முடியல 
  பேரை  சொல்லி  கூப்பிட்டால்    கூட  .. இப்படி  யா  ..
  
  சில கேள்விகள் உங்க கிட்ட கேட்காலாமா ?
(விவகாரம் உள்ள இருக்கும் , பரவா இல்லையா )


 வால்பையன்: தராளமா..

 மந்திரன் : பக்கத்தில் VAT 69 புட்டி ,23 வயசு குட்டி ரெண்டும் ஒரே நேரத்தில உங்கள கூப்பிட்டால் எங்க போவீங்க ?
 

 வால்பையன்: குட்டிகிட்ட தான்.

 மந்திரன் : போங்க வால் ..இந்த பதில் எதிர்பார்த்தேன் .. ஆனால் கொஞ்சம் விதியாசாம ..
குட்டி என்கிற என் நண்பன் கிட்ட
  பதில்:"குட்டி என்கிற என் நண்பன் கிட்ட"

 வால்பையன்: ஏன் பொண்ணுகிட்ட நான் போககூடாதா?
  என்ன கொடும சார் இது
  சரக்கு எல்லா பக்கமும் கிடைக்கும்
 குட்டி தான் டிமாண்டு
  

 மந்திரன் : கேள்வி one way .. திரும்பி கேள்வி வரக் கூடாது ..
 நீங்க எல்லாம் பெரியவா .. அப்படி எல்லாம் சொல்ல கூடாது ..
  சரி நெக்ஸ்ட் question .

 வால்பையன்: எனக்கு பெரிய வாய் ஒத்துக்கிறேன்
  ஆனா பெரியவா இல்ல

 மந்திரன் :: இப்பவே கண்ணை கட்டுதே
 சரி,நீங்க கடவுளா இருந்தால் , முதல்ல பண்ற காரியம் ?

 வால்பையன்: செத்து போவேன்

 மந்திரன் : ஏன் இந்த வெறி ?

 வால்பையன்: பின்ன என்ன செய்யுறதாம்

 மந்திரன் : டமில் ல புடிக்காத வார்த்தை ?




 வால்பையன்: சரக்கடிக்காதே

மந்திரன் :  10 தடவை divorce ஆன பெண் உங்களை கல்யாணம் பண்ண ஆசை பட்டால் என்ன சொல்வீங்க ?

 வால்பையன்: ஒரு வருடத்தில் எனக்கும் டைவர்ஸ் கொடுத்துடனும்னு கண்டிஷன் போடுவேன்.

 மந்திரன் : "ஈரோடு அழகிரி" என்ற பட்டம் உங்கள்ளுக்கு D.M.K கொடுக்க முன் வந்தால் ?

 வால்பையன்: சிவகிரிக்கு ஓடிப்போவேன்

 மந்திரன் :  நீங்கள் சைட் அடித்து கொண்டு இருக்கும் போது , அந்த பெண்ணே , உங்களிடம் வந்து என்ன கேட்க வேண்டும் நினைப்பீர்கள் ?

 வால்பையன்: என்னைய பிடிச்சிருக்கா

 மந்திரன் : ஆசை யை பாரு .. :)
  வப்பாட்டி Vs பொண்டாட்டி , நீங்க எந்த பக்கம் ?

 வால்பையன்: ரெண்டு பக்கமும் தான்

 மந்திரன் : one answer maddy..

 வால்பையன்: ஒரு வீடு இரு வாசல் மாதிரி

 மந்திரன் : உடம்பு என்றால் ஒரு தலை தான் ஒரு வால் தான் .. so only one side ,u have to answer.

 வால்பையன்: பொண்டாட்டி  பக்கம் 


மந்திரன் :அடுத்த நிமிடம் , நீங்க சாக போறீங்க .. என்ன பண்ணுவீங்க ?

 வால்பையன்: படுத்து தூங்குவேன்
 

 மந்திரன் : குஷ்பு , மந்திரா பேடி -- ஒப்பிடுக

வால்பையன்: குஷ்பூ- ஆண்டி

                       மந்திரா-போண்டி

 மந்திரன் : கவிதை , கவிதை :)



 மந்திரன் : யாரை போல் வாழ ஆசை ? யாரை போல் சாக ஆசை ?

 வால்பையன்: என்னை போல வாழ
  என் கொள்ளு பேரனை போல் சாக

 மந்திரன் : சபாஷ்
  நான் ரொம்ப போர் அடிகிறேனா ?

 வால்பையன்: இல்ல தல கேளுங்க

 மந்திரன் : கேள்வியே அது தானே ..

 வால்பையன்: :)  இல்ல


 மந்திரன் : இத்தோட நான் முடிச்சிக்கிறேன் ...
எதுக்கு வம்பு ..உங்களை நெக்ஸ்ட் மீட் பண்றேன் ..



12/28/2009

வக்கிரம் யாருக்கு ?

வக்கிரம் யாருக்கு ? என்று கேட்டால் , இப்போதைக்கு செக்ஸ் அர்ச்சகர் "தேவநாதன் " என்று நச்சுன்னு பதில் வரும் ..

ஆனால் உண்மையில் அது யாருக்கு என்றால், நம்மில் 90% மக்களிடம் தான் (அட என்னையும் சேர்த்துதான் ) உள்ளது .


மனிதன் தோன்றி எத்தனை கோடி வருடம் என்று தெரியாது . ஆனால் நாளை பிறக்க போகும் மனிதனுக்கு கூட செக்ஸ் பத்தி முழுவதும் தெரியாது என்பது நிதர்சன உண்மை .


அதை நாம் பரம ரசிகமாக ரசிக்கிறோம் . மெதுவாக அதன் பல பரிமாணங்களுக்கு அடிமையாய் இருக்கிறோம் .இதை பல பேர் ஒத்துக் கொள்வதில்லை .


"நான் தினமும் திருவாசகம் படிக்கிறேன் , கீதை படிக்கிறேன் .
ஐந்து முறை தொழுகிறேன் .. பல கோவில்களுக்கு போகிறேன் .
வருகிறேன் , போகிறேன் , செய்கிறேன் .நடக்கிறேன் ...அது , இது " என்று பலவாறு சொல்லி
நான் ரொம்ப நல்லவன் என்ற மாயை நாம் ரசிக்கிறோம் .


இப்பொழுது மிக சூடான செய்தி "கருவறையில் செக்ஸ் ".
இதை ஒரு செய்தியாக யாரும் படிப்பதில்லை .இது ஒரு வெறுக்கும் செய்தி என்றால்
"புதிய படங்குளுடன் செக்ஸ் அர்ச்சகரின் லீலைகள் " என்று தலைப்பு செய்தியாக "நக்கீரன் " இதழ் போட்டு இருக்க கூடாது .
அதை நாம் வாங்கி படிக்கவும் கூடாது .


ஆனால் நடந்ததது என்ன ?
நான் வழக்கமாக புத்தகம் வாங்கும் கடைகாரார் தந்த தகவல்
"எல்லா புக்கும் போய்டுச்சு , தம்பி , ஒன்னே ஒன்னு உனக்கு வச்சி இருக்கேன் "
அப்படி என்ன அண்ணாச்சி அது இருக்கு , எதுனா ப்ரீயா ?
போங்க தம்பி , எல்லாம் அந்த காஞ்சிவரம் அசிங்கம் தான் காரணம் "
என்று ஒரு மாதிரி சிரித்தார் ..


என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வி இதுதான் .
அந்த செயல் ஒரு வெறுக்க தக்க நிகழ்வு என்றால் இது எப்படி சாத்தியம் .??


என் நண்பர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது,
"அந்த" மாதிரி இடங்களுக்கு போய்க்கிட்டு இருப்பதை நிறுத்தி விட்டதாக ஒரு நண்பன் சொன்னான் ..
எனக்கோ அது மிக பெரிய அதிர்ச்சி .இவனா இப்படி , ஏன் ?
ஆனால் , மற்றவர்களோ ,
" விடு மச்சி , இனி போகாமல் இருந்தால் சரி .." மிக இலகுவாக எடுத்துக் கொண்டார்கள் .


அவர்களிடம் நான் நினைத்ததை கேட்டால் ,
"சாமியார் , வாத்தியார் , பூசாரி அவன் , இவன் என்று யார் யாரரோ தப்பு செய்கிறார்கள் . தப்பை தப்பா பண்ணினா தானே மாட்டுவோம் ..
போடா , பெரிய பருப்பு நீ , எல்லாரும் ராமன்தான் சந்தர்ப்பம் கெடைக்காத வரை "
என்று பதில் வருகிறது .


பின்னர் ஒரு நண்பன் சொன்னான்
" அம்மணமாக எல்லாரும் இருக்கிற கூட்டத்தில டிரஸ் போட்டுக்கிட்டு இருகிறவன் தான் அசிங்க படனும் ".
சில விஷயங்கள் என்னை உறுத்த தொடங்கின .
என்னுடைய வருத்தம் , அவர்கள் ஒழுக்கமாக இருக்க முயற்ச்சிக்க வில்லை என்பதில்லை ..
ஆனால் "ஒழுக்கமாக இருப்பது கேனத்தனமானது " என்று நினைக்கும் மனபாங்கு என்னை தடுமாற செய்கிறது ....


மெதுவாக நம் நெஞ்சில் சில விசங்கள் விதைக்கப் பட்டு கொண்டு இருகின்றன .
வக்கிர செய்திகள் எல்லாம் எப்படி எல்லாராலும் (நான் உட் பட ) விரும்பி படிக்க முடிகின்றது ?
மற்றவர்களின் அந்தரங்களை அவர்களுக்கு தெரியாமல் , நாம் தெரிந்து கொள்ள முற்படும் எண்ணமே இதற்க்கு எல்லாம் ஒரு விதை .


நாம் அவர்களை பற்றி படிக்கிறோம் , பார்க்கிறோம் . இது எல்லாம் ஒரு பரவசத்தை நம்முள் ஏற்படுத்துகிறது . எதுவே எல்லாவற்றுக்கும் காரணமாகிறது .
நான் ஒன்றும் யாரையும் குறை சொல்ல வில்லை .
அண்ணாந்து பார்த்து எச்சிலிட்டால் யார் மேல் அது விழும் என்று எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்று ஆசை படுகிறேன் .


ஏன் இந்த பதிவுலகத்தில் கூட செக்ஸ் என்று ஒரு வார்த்தை எழுதி விட்டால்
கொய்யோ , முய்யோ என்று கத்துவார்கள் ஏராளம் ..
அவர்கள் கூறுவதெல்லாம்


உங்கள் பதிவை படிக்க கொஞ்சம் பயமாக இருக்கிறது .
ஏன் இப்படி எல்லாம் எழுதிகிறீர்கள் ?
வேற தலைப்பே இல்லையா ?
இது எல்லாம் உனக்கு தேவையா ?


நான் ஒன்றும் இங்கே செய்முறை விளக்கம் கொடுக்க பதிவு எழுத வில்லை .
நம்மை, நாம் சீர் தூக்கி பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இது .


நாம் இன்னும் எத்தனை வருடம் ,இப்படி முகமூடி போட்டுக்கிட்டு வாழ போகிறோம் .
முகமூடிக்காக நாம், நம் முகத்தை இழந்து விட கூடாது .
நமக்கு நாமே உண்மையாக இல்லை என்றால் ,
பின் யாரிடம் உண்மையாக இருக்க போகிறோம் ?


எதோ என் மனதில் தோன்றியதை கிறுக்கி விட்டான் இந்த கிறுக்கன் .
தவறு இருப்பின் பொறுத்தருள்க .


12/24/2009

இதில் எந்த உள் குத்தும் இல்லை !...

அப்பா ..
எவ்வளோவோ பார்த்துட்டோம் , இத பார்க்கமட்டோம்மா ..


12/21/2009

வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு

விட்டத்தை பார்த்து முட்டுக் கொடுத்து தூங்கறது என்ன சுகம் ! என்ன சுகம் என்று வடிவேலு முனகும் போது ,

 "தலை, விஜய் வந்து இருக்கிறார் " என்று பூச்சியப்பன் சொல்ல .. டரியலாகிறார் வடிவேலு.  

இந்த விஜெய்க்கு, கட்டம் சரியில்லை . சரி வரச் சொல்லு

ங்ணா , எப்புடிங்க்னா இருக்கீங்க ? என்று விஜய் பல் இளிக்க,

இதுவரை நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு ..இப்பதானே நீ வந்து இருக்க , என்ன விஷயம் கண்ணா ?

நம்ம படம் பட்டை கிளபுதுங்க ங்ணா,நீங்க வந்து பார்க்கணும் ங்ணா.

என்னடா இவன் , ஓவரா பம்முறான் , பின்னாடி ரொம்ப ஆட்டுறான் என்று வடிவேலு நினைத்துக் கொண்டே ,

 ஏய் , என்னை வச்ச்சு காமெடி கீமடி பன்னைலையே ?

  ங்ணா , நான் ஒரு தடவை கமிட்ட ஆயட்டேன்ணா , என் பேச்சை நானே கேட்க்க மாட்டேன்னா ங்ணா..

கொய்யால , உன் பேச்சை நீயா கேட்கலைன்னா வேற எந்த நாய் கேட்க போறாங்க .. இப்பவே கண்ணை கட்டுதே .. ஆமாம் , ஏன் இப்ப இதை சொன்ன ?  

படம் பார்க்க வாங்க .. 

 என்ன , இவ்வளவு பாசமா கூப்பிடுறான் ..போய்த்தான் பார்ப்போமே ..

தியட்டேர் முன் ஒரு பெருங் கூட்டம் ..  

அட , படம் நல்ல இருக்கும் போல , கூட்டம் களை கட்டுதே , நாமத்தான் தப்பா பேசிட்டோமோ..

பாஸ், நான் மோசம் போய்ட்டோம் ..என்றான் பூச்சி . என்னடா சொல்ற ? அது படம் பார்க்க வந்த கூட்டம் இல்லை . படம் பார்க்க வேண்டாம் அப்படின்னு சொல்ல வந்த கூட்டம்மாம் ...

என்னடா சொல்ற , பீதியில நான் ஒன்னுக்கு போய்ட போறேன் ..அம் ... சரி விடுடா .

.என்னை ரொம்ப நல்லவன் நினைத்து படம் பார்க்க சொல்லி இருக்காங்க.. என்னத்தான் அதுல இருக்கன்னு பார்ப்போமே ..

3 மணி நேரம் கழித்து ..

தீவிர சிகிச்சை பிரிவில் , அப்போல்லோ மருத்துவ மனையில் , வடிவேலு அனுமதி என்ற செய்தி சன் T.V இல தலைப்பு செய்தியாக சொல்லப்பட்டது.

அப்போது பூச்சி வந்து, வடிவேலு விடம் ,
 
தலை , பத்திரிகை காரங்க எல்லாம் வந்து இருக்காங்க .. உங்கள் கிட்ட எதுவோ கேட்கணுமாம் ..
 
என்னவாம் ?
 
தெரியல , ஆனால் , வேட்டைக்காரன் பத்தி மட்டும் எதுவும் சொல்லிடாதீங்க மிரட்டிக் கூட கேட்பாங்க , அப்படியும் சொல்லிடாதீங்க .. அண்ணே , அடிச்சு கூட கேட்பாங்க .. அப்படியும் சொல்லிடாதீங்க ..

ஏன் டா ..அப்புடி ?
 

படம் பார்த்ததா வெளியே சொன்னால் , அமைதிக்கான நோபெல் பரிசு கொடுத்திடுவாங்களாம்.அவ்வளவு தான் நான் சொல்லுவேன் என்று பூச்சி பயம் காட்ட,  

என்னடா சொல்ற . நான் பாவம் ..அம் ..

பத்திரிகை காரர்கள் கூட்டத்தில் ..

படம் போட்ட ரெண்டே நிமிசத்தில ஒரு பாட்டு வந்துச்சு .. சரி ஓடி போய்டலாம் அப்படின்னு நினைச்சு , ஒரு ஸ்டேப் அடி வச்சு நகர்ந்தேன் ..
ரெண்டே ஸ்டேப் தான் ,
எப்படி கண்டு பிடிச்சான்களோ ..
கப்புனு பிடிச்சு , கட்டி போட்டு படம் பார்க்க வச்சானுங்க .. 

சரி , அனுஷ்கா புள்ளை வருமே , அப்படின்னு நம்பி பார்த்தேன் .. என்னை பாவம் செஞ்சேன்னு தெரியல ..அப்புறம் அந்த புள்ளைய காணோம் .. கண்ணை இறுக்கி முடிகிட்டு உட்கார்ந்தேன் ..

எல்லாம் முடிச்சதேன்னு , கிளம்புலாமுன்னு பார்த்தா , அப்ப ஒருத்தன் , ஓடி வந்து ,

"இவன் இவ்வளவு அமைதியா பார்க்குறான் . நமக்கு ஒரு அடிமை சிக்கி இருக்கிறான் அப்படின்னு சொல்லி , பக்கத்து ஊருல ஓடுற "வேட்டைக்காரன்" படத்துக்கு பேக் பண்ணி அனுப்புலாம் " அப்படின்னு சொல்றான் ..
 

நாலு தடவை ஹார்ட் அட்டாக் வந்து போச்சு .. அப்ப பார்த்து , விஜய் என் கிட்ட வந்து ,
ஒரு கேள்வி கேட்டாருங்க ..அப்புறந்தான் இங்க வந்து அட்மிட் ஆயிட்டேன் ..

பத்திக்கைகாரர்கள் அனைவரும் கோரசாக ..



அது என்ன கேள்வி ?..

அது வந்துன்ங்க ..

இருங்க ஒரு பொசிசன்ல நின்னுகிறேன்.
 










அவன் கேட்டான் ..
"தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் ..
அது என்ன ? "
 
பத்திரிக்கரார்கள் அனைவரும் அப்போல்லோவில் அனுமதியாம் ..

  டிஸ்கி : வேட்டைக்காரன் படத்தை ஆஸ்காருக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்து உள்ளதாம் ..


டிஸ்கி 2:ரொம்ப கேவலம்மா பின்னூட்டங்கள் வருது ..விஜய் தான் கேவலமா நடிக்கிறார்..அவருக்கு நடிப்பு வராது ..ஒத்துக்குறேன் ..

அவர் ரசிகர்களும் அவ்வழி தானா ? நாகரீகமாக எதிர்ப்பை காட்டினால் கண்டிப்பாக உங்கள் எதிர்ப்பு பதிவு செய்ய படும் .



12/18/2009

துளி விஷம்


கடைசி துளி விஷம் மெதுவாக என் தொண்டையை நனைத்தது .

விசத்தின் சுவை அறிந்த உயிருள்ள கடைசி மனிதன் நானாகத் தான் இருப்பேன் .

நான் ஏன் சாக வேண்டும் ?
யாருக்காக நான் வாழ வேண்டும் என்ற பதில் தெரியாததால் .

அதோ யாரோ கதவை தட்டுகிறார்கள் ?
எம துதுவர்களோ ?

இல்லை என் நண்பர்கள் ..
உத்தரவு யார் தந்தார்கள் அவர்கள் உள்ளே வருவதற்கு ?

வேண்டாம் , என்னை விடுங்கடா ..
நான் சாகனும் ..
டேய் விடுங்கடா ..
எதோ ஊசி ஏற்றுகிறார்கள் .நிரந்தர மயக்கம் கொடுக்காமல்  
ஏன் இந்த நித்திரை மயக்கம்?

நான் எதோ முனகுவாதாக மற்றவர்கள் நெனைக்கலாம் . உங்களுக்கு புரியும் என்று நான் நம்புகிறேன் .

சாவதற்கு யாருக்கு பிடிக்கும்? .
எனக்கு பிடிக்கும் .

முத்த சத்தத்தில் காதலை விரட்டி விரகத்தில் விபச்சாரம் பண்ணும் "மெரீனா பீச் " காதலுக்காக ஒன்றும் நான் சாக விரும்ப வில்லை .

பிரியா , என் பிரியா . எனக்காக வாழ்ந்த பிரியா ..

வாழ்க்கையை வாழ காற்றுக் கொடுத்த என் பிரியா .

இரண்டு மாதம் முன் வரை, என் முன் இருந்தாள்.
இப்போது எனக்குள் இருக்கிறாள் .
அவளுக்கு அப்போது 8 மாசம் . 
குழந்தைக்காக குழந்தையாய் இருந்தாள் .
அவள் வயிற்றை தாங்கி பிடித்து வருகையில் நான் சொன்னேன் ..

" பிரியா , நீ எவ்வளவு அழகு தெரியுமா ?
வயிற்றில் நீ கை வைத்து நடக்கும் அழகுக்காக வருடா வருஷம்
நாம் என் குழந்தை பெற்று கொள்ள கூடாது ? "

"
அடி விழும் , ரெண்டே ரெண்டுதான் .. "இது அவள் .


"இல்லை செல்லம் ,...அது வந்து " நான் நெருங்கும் முன் ..


"பார்த்தியாடா .. உங்க அப்பாவை .. நீ கொஞ்சம் அவரை கண்டித்து வைக்கணும் " என்று தன் வயிற்றை தடவி சொன்னாள்.


"அவன் அப்பன் பிள்ளை . எனக்கு தான் அவன் சப்போர்ட் செய்வான் . பாரேன் .."

"என் செல்லம் , அப்படி எல்லாம் செய்யாது .. " என்று உதட்டை பிதுக்கி விட்டு சென்றாள்

இப்படி இருந்தவள் , எப்படி என்னை விட்டு பிரியலாம் ?
யார் செய்த தப்பு ..

மழை வந்தது தவறா ?
மழைக்காக அவள் பெட்ரோல் பாங்கு உள்ளே நின்றது தவறா ?
அருகில் யாரோ பிடித்த போட்ட "சிகரட் " துண்டு தன் கடைசி உயிர் போகும் முன் ,
அந்த பெட்ரோல் பாங்கு முழுவதையும் எரித்ததே , அது யார் குற்றம் ?

என்னவளின் கடைசி கதறல் எப்படி இருந்து இருக்கும் ?

நினைக்கும் போது, உயிரின் வலி என் உயிரினுள் ..
அம்மா .... தாங்க முடியவில்லை ..


"சிகரட் " துண்டுக்கு சொந்தக்காரன் யார் ?
பிச்சை காரானா ? 
பல லட்சம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் நாயா ?
லாரி காரனா ?
ஆட்டோ காரனா ?
அவனா இல்லை அவளா ?



யாராக இருந்தாலும் ,
யாருக்கும் தெரிய போவதில்லை ..
நான் குடித்த விசத்தின் , கடைசி துளியின் சுவை ..


12/17/2009

விஜய் ரசிகர்களுக்கு மட்டும் (இது உங்க ஏரியா )...

எனக்கு இது மெயிலில் வந்தது .. தமிழ் "சப் டைட்டில்" போட்டது மட்டும் நம்ம முயற்சி ... இதை தான் நாங்க "RUN" படத்திலே பார்த்துப் புட்டோம் .. வேட்டையாடு விளையாடு படம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல . பங்குனி வெயில் பல்லை காட்டிகிட்டு அடிக்குது . இதுல ஜெர்கின் வேற .. உள்ள ஜீன்ஸ் சட்டை வேற .. வயசுக்கு வந்த புள்ளைக்கு, துணைக்கு வர மாதிரி சுத்தியும் சொந்த காரங்க போல .. பகவதி ரீமேக் .. பூமி தாங்காது சாமி . பாட்சாவின் ஒரிஜினல் காப்பி .. அந்த மஞ்சள் கைக்குட்டையை கூட விடவில்லை .. சாமி , தர்மம் பண்ணுங்கம்மா ... ஒடுங்க! அது ரொம்ப கோவமா இருக்கு .. அந்த கொடிய மிருகம் நம்மை நோக்கி வருது .. டிஸ்கி : இது விஜய் ரசிகர்களை குசி படுத்த என்று சொன்னால் நீங்கள் நம்பவா போறீங்க ?


9/22/2009

மாய மனிதன்

"Invisibility" தன்மையை அடைய பல நாடுகள் பல கோடிகளை கொட்டி ஆராய்ச்சி செய்கின்றன .. ஆனால் இவரை பாருங்கள் ... தன் மேல் "Paint" கொண்டு வரைந்து மாயமாகிறார் .. எந்த கிராபிக்ஸ் வேலையும் இல்லாமல் உருவாக்கப்பட்ட மாய மனிதன் (The Invisible Man) என்ன கண்ணை கட்டுதா ?


9/18/2009

காலம் மாறிப் போச்சு கண்ணா...

ஒரு நாளைக்கு எத்தனை தடவைதான் பணம் எடுக்கிறது என சலித்து கொள்கிறார் இந்த பெரியவர்


8/27/2009

இது எப்படி இருக்கு ?

என்ன கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு ... வரலாற்றில் உயிர் மிக முக்கியம் அமைச்சரே !


8/25/2009

நான் பொண்ணு பார்க்க போறேன் ....

"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா இல்லை பிள்ளை குட்டி பெத்துகிட்டு கட்டிகிலாமா "
பாட மட்டும் தான் இது எளிது . ஆனால் நடைமுறையில் விழி பிதுங்கி போகுது எனக்கு ..என்னடா ஆரம்பமே ஒரே அழுகாச்சியாய் இருக்குன்னு நினைக்காதீங்க ..
நிலைமை அப்படி .. நான் ஹரி , எனக்கு பெண் பார்க்க நாளை கிளம்ப வேண்டும் என்பது உத்தரவு .
அட நமக்கு கூட பெண் கொடுக்க ஒரு குடும்பம் இருக்குன்னு நினைக்க , நினைக்க ஒரே மஜாதான் .
ஆனால் அந்த பெண்ணின் , அதாங்க என் வருங்கால மனைவி (கொஞ்சம் இருங்க வெட்கப்பட்டு கிறேன் ..)

புகைபடத்தை கையில் கொடுத்தாங்க பாருங்க ..அதுக்கு அப்புறம் தான் நமக்கு சந்தேகம் .

அதை தீர்க்கத்தான் , நான் ஒரு மந்திர ஆலோசனை நடத்த அருணையும் , பிரபுவையும் கூப்பிட்டு இருக்கிறேன் .

அதோ , அவிங்க வந்துட்டாங்க ..

"டேய் ,ஹரி , எல்லாம் கேள்விபட்டேன் , ரொம்ப கஷ்ட்டமா போச்சு, அந்த பெண்ணை நினைத்து.. " ஆரம்பத்திலே அதகளம் பண்ணினான் அருண் .

"டேய் , அந்த பெண்ணுக்கு பாரத ரத்னா விருது ஒன்னு கொடுக்கலாம் என்று பிரதமர் சொன்னதாக ஒரு வதந்தி " இப்படி ஒரு பிட்டு பிரபுவிடம் இருந்து .

" அடங்குடா , இந்த புகை படத்தை ஒரு நிமிடம் பாருங்குடா " - இது நான் .

"இல்லை ... "வ்வர்ர் , வார் ,, வார்த்தையே வர வில்லை டா"
 ரெண்டு பேரும் கொஞ்சம் இல்ல , ரொம்ப குழம்பி போய்ட்டாங்க ..

என் வாயால , அப்படி சொல்ல கூடாது ..இருந்ததாலும் உங்களுக்காக ஒரு தடவை மட்டும் , ஒரே தடவை மட்டும் .. "சூப்பர் , சூப்பர் பிகரு " .
 எங்க ரெண்டு பேருக்கு என்ன பொருத்தம் இருக்குன்னு ஆண்டவன் இப்படி கூட்டணி வச்சிட்டான்னு தெரியல ..

"டேய் , ஹரி நீ ரொம்ப கொடுத்து வச்சவன் டா ..இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன் .. " என்றான் அருண் .

"சரிடா , உனக்கு என்னடா இப்ப பிரச்சினை " என்று கேள்வி கேட்டான் பிரபு

. "இல்லைடா , அந்த வித்யா , அதான் நான் கல்யாண பண்ணிக்க போகிற பெண் , ரொம்ப , ரொம்ப அழகா இருக்கா ..ஆனால் என்னை போய் கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதித்து இருப்பாள்?"

"யோசிக்க வேண்டிய விஷயம்" என்று சிரித்தான் அருண் .

"விடுடா , நாளைக்கு நேருக்கு நேரா நீயே கேட்டு விடு " என்றான் பிரபு .

"அதான் சரி , ஆனால் நாங்க அங்க வரவில்லை .." என்று மிரட்டினான் அருண் .

"ஏன்டா , ஏன்டா " இது நான் மிரட்ச்சியுடன் .

"நீ அங்கு போய் , வித்யாவை பார்த்து ரொமான்ஸ் பார்வை எல்லாம் பார்ப்பாய் ..எங்களுக்கு இருக்கிறதோ சின்ன இதயம் , இதை எல்லாம் தாங்க முடியாது " என்று இரண்டு பேரும் நழுவினார்கள் .

ச்சே , இவ்வளவு வேகமாகவா காலம் ஓடும் . நான் இப்போது வித்யாவின் வீட்டில் , பெண் பார்க்கும் படலத்தின் தற்போதைய கதாநாயகன் .

குறு குறுன்னு எல்லாரும் என்னையே ஒரு மாதிரி பார்க்குறாங்க .. கொஞ்சம் , என்னோட ஆளை , கண்ணுல காட்டுன நல்லா இருக்கும் ..
எங்கே கட்டுறாங்க ..? பெருசுங்க எல்லாம் எதோ , எதோ பேசுறாங்க .நமக்கு தான் கண்ணை கட்டுது ...

அதோ , அதோ அவள் வருகிறாள் . தரை மேல் அவள் நடந்து வரவில்லை . தரையே அவளை தாங்கி வருவது போல் ஒரு நினைப்பு .

என் உயிர் கூட சரியான விலையாகது அவள் அழகுக்கு .
பிரம்மன் புத்திசாலி , நான் அதிர்ஷ்டசாலி ..

அவளிடம் சில நிமிடங்கள் பேச வேண்டும் என்று சொன்னவுடன் "நாட்டாமை " மாதிரி ஒரு பார்வை என் வருங்கால மாமனாரிடம் இருந்து
. சில ,பல கெஞ்சலுக்கு பிறகு , இப்போது நான் வித்யாவுடன் தனி அறையில் . நேருக்கு நேர் அவளை பார்க்க கூட முடியவில்லை .

என் நிலை உணர்ந்தே , அவள் சிரிக்க துவங்கினாள். ஆம்பிள்ளை ஆச்சே , விட்டு விட முடியுமா ? துணிந்தேன் .

பின் நான் ,
" என்னை , உண்மைலேயே உனக்கு பிடிச்சு இருக்கா ?"


" ஏன் , இப்படி? " என்று அவள் வாய் கேட்கவில்லை , அவள் கண் கேட்டது .

பின் அவளே , "என்னோட புருஷன் , அழகா மட்டும் இருக்கனும் நான் நினைக்கல . நல்லவராகவும் இருக்கணும்... "

"நான் , நல்லவன் ...அழகா ?...." என்று நான் தடுமாறிய போது,

. அவள் ,
" போன மாதம் ,பஸ் ஸ்டாண்டில் , உங்களிடம் தன்னை விலை பேச வந்த ஒரு பெண்ணிடம் என்ன கூறினீர்கள் ?"

"அது , அது .... அவளிடம் 500 ருபாய் கொடுத்து ,அவளை பக்கத்தில் கட்டிட வேலை பார்க்கும் இடத்த்தில் ஒரு மணி நேரம் நிற்க சொன்னேன் "

"எதற்கு அப்படி சொன்னீர்கள் ?"

" அங்கு , இளம் பெண்கள் , வயதான பெண்கள் , சின்ன பெண் குழந்தைகள் எல்லாரும் வேலை செய்வார்கள் .. அதை பார்த்தாவது சில மணி நேரம் தன்னை திருத்திக் கொண்டால் நல்லது என நினைத்தேன் ...

ஆனால் அப்பொழுது நீ பக்கத்தில் இல்லையே ..பின் எப்படி ..?"

நீங்கள் சொல்வது சரி , அந்த பெண் , அங்கு வேலை செய்த ஒரு நொண்டி பெண்ணை பார்த்து மனம் திருந்தி , எங்களிடம் வேலை கேட்டு வந்தாள்.

அவள் தான் எங்கள் அலுவலகத்தை இப்போது சுத்தம் செய்பவள் .உங்களோட போட்டாவை நான் பார்த்து கொண்டு இருக்கும் போது தான் , அவள் இதை கூறினாள்...
அவளின் கண்ணீரில் நான் உங்களை பார்த்தேன் .." என முடித்தாள் வித்யா.

பின் என்னை பார்த்து "உங்களை விட அழகான ஒரு ஆணை இது வரை நான் பார்த்தது இல்லை " என் கன்னத்தை கிள்ளி விட்டு சென்றாள்.
அங்கு இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நான் . கண்ணாடியில் ஹரி .
இருவரும் கேட்டுகொண்டோம்
" நீ அவ்வளவு நல்லவனா ?"


8/20/2009

கமலும் காலமும்

நிஜம் தான் , நான் சொல்ல போவது எல்லாம் நிஜம் ..
 1. 1978 -ல், கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள் வெளியானது . ஒரு வருடம் கழித்து சைகோ ராமன் என்பவன் தமிழகத்தையே அதிரவைத்தான் தன் மன்மத கொலைகளால் .
2. 1988 -ல், கமலின் நடிப்பில் "சத்யா " வெளியானது . 1990- ல் நாடு மாபெரும் வேலை இல்லா திண்டாட்டத்தை பார்த்தது .
3.1992 ல் தேவர் மகன் வெளியானது . சரியாய் 1993- ல் நடைப்பெற்ற சாதி கலவரங்கள் தான் இன்றும் சாதி என்னும் தீயை அணையவிடாமல் தென் மாவட்டங்களில் காக்கிறது .
4.1994 , மகாநதி படத்தில் , பணத்தையும் , குடும்பத்தையும் இழந்தார் கமல் . 1996ல் தமிழகத்தில் புகழ் பெற்ற சிட் பான்ட் நிறுவங்கள் வரிசையாக மக்களுக்கு நாமம் போட்டனர் .
 5. 1992 -ல், இந்து முஸ்லிம் சண்டையை "ஹே ராம் " படத்தில் வைத்தார் கமல் .2002- ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் , அதன் பின் நடந்த முஸ்லிம் இன படுகொலைகளையும் நான் என் வாயல சொல்ல மாட்டேன் . 6.2003 -ல் ,"சுனாமி" என்று அன்பே சிவத்தில் சொன்னாலும் சொன்னார் , 2004- ல் நடந்த சுனாமியின் கோரதாண்டவத்தை நாம் இன்னும் மறக்கவில்லை .
 7. இது லேட்டஸ்ட் . தசாவதாரத்தில் (2008) ஒரு கொடுமையான , பயங்கரமான வைரஸ் பற்றி சொல்லி இருப்பார் .நாம் இப்போது "Swine Flu " பயத்திலேயே காலத்தை ஓட்டுகிறோம் ..

 ஆமாம் , இது எல்லாம் தற்செயல்லா ? இல்லை வேற எதாவது ....... சொல்ல விருப்பம் உள்ளவர்கள் பின்னுட்டத்தில் சொல்லலாம் ..

டிஸ்கி : இது என் நண்பனின் வாய் மொழி வாயிலாக கேட்டது . இதை போன்று ஏற்கனவே எ-மெயில் (ஆங்கிலத்தில் ) வந்ததாக சிலர் கூறுகின்றனர் . ஆனந்த விகடனில் வந்ததாக "வால்" சொல்கிறார் . இரண்டும் உண்மையாக இருப்பின் , என்னை மன்னிக்கவும் .. (என் நண்பனை ,போய் உதைக்கணும் .....)


8/13/2009

நமது முதாலாம் சுதந்திர நாள் விழா

இப்ப நாம் எப்படி கொண்டாடுகிறோம் ? அன்று எப்படி கொண்டாடினார்கள் ....


8/10/2009

என்ன ஒரு சுகம் .! (8+ வயது வந்தவர்கள் மட்டும் )

என்ன ஒரு வேகம் .
கொஞ்சம் பொறுமையாக படியுங்க .
 நான் "8+" என்றுதான் போட்டுள்ளேன் .."18+" அல்ல .
 அதனால இந்த பதிவை எல்லாரும் படிக்கலாம் (டேய் , நீ எங்கடா இருக்க #$$%%% )..

 ரொம்ப சின்ன விஷயம் தான் .
 ஒவ்வொரு தடவை பண்ணும்போதும் ரொம்ப இனிமையாக இருக்குது .
 அடச் ச்சே ..என்ன வேற மாதிரி , பதிவு போகுது .
நேர விசயத்துக்கு வரேன் . இந்த வாரம் , முடி வெட்டிகொள்வதர்க்காக சலூனுக்கு போனேன் . அட .அட .. முடிக்கு கூட வலிக்காம , என்னமாய் வெட்டுறாங்க ..
 ஒவ்வொரு தடவை இந்தமாதிரி பீல் பண்ணி கிட்டு இருக்கும் போதே ,
ஒரு சின்ன தூக்கம் கண்ணை கட்டும் பாருங்க .. ஆஹா ...ஆஹா ...
அது என்னவோ நல்லத்தான் இருக்கு (ஏய் ,என்னமா பீல் பண்ணி கூவுற ..)
 என்ன மாதிரி நீங்க யாராவது பீல் பண்ணி இருக்கீங்களா .?.
 பொண்ணுங்க எல்லாம் பாவம் , இந்த விசயத்தை பொறுத்தவரை (என்ன ஒரு ஆணாதிக்கம் ??? !!!!) ..

ஒவ்வொரு தடவை முடிவெட்டிக்கொள்ள போகும் போதும் ஒவ்வொரு அனுபவம் (கொஞ்சம் அடங்குடா ..) அந்த தண்ணியை தலையில கொஞ்சம் அப்படி , அப்புறம் இப்படி அடிக்கும் போது ஜிலு ஜிலுன்னு ஒரு A.C பீலிங் .

 அப்புறம் எல்லாம் முடிந்தபின்னாடி , ஆயில் மசாஜ் கொஞ்சம் பண்ணுவாங்க பாருங்க .. அப்படியே போய், வீட்டுல சுடுத்தண்ணியில ஒரு முக்கு ... அவ்வளோதான் .. அவ்வளோதான் ..

 கட்டையை சாய்த்து, விட்டத்தை பார்த்து தூங்குனா என்ன ஒரு சுகம் ..

 இது எல்லாம் ஒரு மேட்டர், அப்படின்னு பதிவு போடனும்மான்னு ஒரு தயக்கம் .
 ஆனால் ஒரு மயக்கத்துல பதிவை போட்டுட்டேன் .(என்ன , T.R வாசம் வீசுது ..?!!)


8/08/2009

காதலால் நொந்தேன்

இந்த காதல் இருகிறதே ....
ரொம்ப Bad .
எவ்வளவு நாள் தான் வலிக்காமல் இருக்கிற மாதிரியே நடிக்கிறது ..
ஒரு decency வேணாம் ?
கடந்த ஒரு மாதமாக ஒரே தொலைப்பேசி அழைப்புகள் ..
நீங்க என்ன நினைசீங்க ?
இவனுக்கு பல காதல் தொந்தரவுகள் என்று நினைத்தால் , (நினைச்சீங்களா இல்லையா )
நான் கொஞ்சமாவது புண்ணியம் பண்ணி இருக்கேன்னு நான் நம்புறேன் ..
பின்ன என்னங்க ?
எல்லா பயல்களும் போன் பண்ணி ,
"மாப்பு , அவ சரின்னு சொல்லிட்டா "

எவடா ?

"டேய் , உனக்கு தெரியாதா , அவதாண்டா ..மச்சி , ரொம்ப சந்தோசமாக இருக்குடா ,கடவுள்ன்னு ஒருத்தன் இருக்கான் என்ன சொல்ற ?"

"கொய்யால , என் இப்படி அருக்குற ? என்ன விஷயம் , சொல்றா? "

"போடா , எனக்கு வெட்கமா இருக்கு, டேய் , டேய்..
என் ஆளு லைன் ல இருக்குறா , உன்னை அப்புறம் .. "

டோங் .
நான் மட்டும் தனியாக
"டேய் , டேய் .. ஹலோ ..ஹலோ "

இப்படி மட்டும் இல்லைங்க ..இன்னும் கேளுங்க ,
எங்க போறீங்க ?? ..
நீங்க கொஞ்சம் கேளுங்களேன் ..
 இப்படிதான் ஒருத்தன் போன் பண்ணி ,

"டேய் , கொய்யால , அவளும் லவ் பண்றன்னு சொல்லிட்டா ?"

"எவளும் ?"

"டேய் , நாயே , அதான் முந்தாநேத்து என் டீம் சுமி சொன்னாளா, இன்னைக்கு சுஜாதா கூட என்னையே லவ் பண்றாளாம் ?"

"என்னடா சொல்றா , உனக்கு மச்சம் டா .."

"போடா , என் கஷ்டம் எனக்கு தான் தெரியும் , பக்கத்து டீம் ல , புதுசா ஒரு north இந்தியன் figure வந்து இருக்கு , அதைத்தான் நான் உசார் பண்ணும்ன்னு நெனைச்சா? இப்ப வந்து , எனக்கு ஒரு சத்திய சோதனை ..என்ன பண்ண சொல்ற ?"

"ஏன்டா , உனக்கு மனசாட்சியே இல்லையே "

"போடா , நீ ஒரு வேஸ்ட் , உன்கிட்ட சொன்னேன் பாரு "

டோங் ..
அவனுக்கும் என்னை பத்தி தெரிஞ்சு இருக்கு ..
ஒரு தடவை மேலும் , கீழும் பார்த்தவுடனே நம்மளை பத்தி ஒரு முடிவுக்கு வந்துடுறாங்க ..என்னை என்ன பண்ண சொல்றீங்க .. (டேய் அவனா நீ ...)  

 இப்படிதான் ஒருத்தன் , போன் பண்ணி , 
"மாப்பு, காதல் ஒரு வியாதி , மருந்தும் இல்லை , மருத்துவனும் இல்லை "  

நான் குழப்பமாக  
"டேய் , என்னாச்சு டா உனக்கு ?" 
 
"வெளியில் இருந்து பார்த்தா எல்லாம் நல்ல இருக்கிற மாதிரி தெரியும் , ஆனால், சாரிடா , அவ கூபிடுரா ..அப்புறம் உன்னை ... "

டோங் .. 
 ஹலோ ,ஹலோ ... இது நான் . 

அவனுமா காதலிக்கிறான் .??!!!!!!.
அஜித் படம் கூட 500 நாள் ஓடுது அப்படின்னு சொன்னாகூட நான் நம்பிடுவேன் .
.பட் அவன் லவ் பண்றான் சொன்னால் என்னால நம்பவே முடியல .. 
FRIEND என்கிற பேருல இவிங்க பண்ற லவ் டார்ச்சர் தாங்க முடியல சாமி .. 

பேசாம நானும் காதலிச்ச என்ன? (நீ ,,,,,பேசியே காதலிக்கலாமே ..) சிரிக்காதீங்க ,,
நான் சீரியஸா பேசுறேன் ..
என்ன அங்க சிரிப்பு , படவா ராஸ்கல் ..


7/16/2009

கற்பின் களங்கம்

அழகில் நான் சினேகாவுக்கு போட்டி .இதை நான் சொல்ல வில்லை .என் தோழிகள் எல்லாரும் சொல்லுவார்கள்

அப்புறம், இந்த ஆம்புள பசங்க ரொம்ப மோசம் .
அப்பாடி!! என்ன பார்வை பாக்குறாங்க ?

எனக்கே கொஞ்சம் வெட்கமாக இருக்கு . ஹரி என்னை பெண் கேட்டு வரும் வரை , என் வீட்டு முன்னால் எப்போதும் பசங்க இருப்பாங்க .

காதலை நான் சினிமாவில் மட்டுமே பார்த்து வந்து இருக்கிறேன் .
ஆனால் இந்த ஹரி , தினமும் I LOVE U என்று 100 முறை சொல்லி விடுகிறான் . இதுவும் எனக்கு பிடித்து இருக்கிறது .பெண்ணாக பிறந்ததால் எவ்வளோ சந்தோசம் .

இந்த உலகம் பெண்களை சுற்றிதான் உள்ளது என்பது உண்மை தான் . வில்லன்களே இல்லாத சினிமாதான் என் வாழ்கை .

கொஞ்சி குலாவும் கணவன் ,திகட்டாத மாமியாரின் அன்பு இப்படி சொல்லி கிட்டே போகலாம் .இப்ப நினைத்தாலும் உடம்பு எல்லாம் கூசிகிறது அந்த முதல் இரவை நினைக்கையில் .

புது ஆண் , தனி இரவு ,படுக்கை அலங்காரங்கள் . எதுவுமே மறக்க முடியவில்லை .

போன மாதம் வரை நான் , நான் மட்டுமே . இன்று நான், இன்னொருவரின் மனைவி . காலத்தின் கோலங்கள் எவ்வளவு சுகமானவை .
இரண்டு மாதங்கள் என்னை தின்ன துவங்கின .

எனக்கான உலகம் என்னை வெளியே துரத்தியது ஒரு தொலைப்பேசி அழைப்பின் மூலம் . செய்தி சிறியதுதான் . ஹரிக்கு எமனாக வந்தது ஒரு நாய்

. "சென்னையில் நாயை காப்பாற்ற எண்ணி விபத்தில் இறந்த வாலிபர் " என்று மாலை முரசு முதல் எல்லா பத்திரிக்கைகளிலும் என்னவர் பெயர் .
யாருக்கும் தெரிய போவதில்லை பின்னால் இருக்கும் என் எதிர்காலம் .

கூட்டம் கூடி எனக்கு பட்டம் கொடுக்க துவங்கினர்.

மொட்டச்சி ,
ரெண்டு மாசத்துல புருசனையே முளுங்கியவ .
என்னா ,மினுக்கு மினுக்கினா....

அவர் அவர்களுக்கு பிடித்தமாதிரி கெட்ட தமிழில் 1000 வார்த்தைகள் .அனைத்தும் என்னை வந்து தீண்டி போயின .
விதவை என்று ஒருவரும் திட்ட வில்லை இந்த 21 ஆம் நூற்றாண்டில் .

பிறந்த இடத்தில் மீண்டும் குடி புகுந்தேன் .
தேவதை என்று என்னை கொஞ்சிய உலகம் இன்று , வசை பாட தயாராக இருந்தது . ஜாதகம் , தோஷம் எல்லாம் என்னை தேடி வந்து அடைக்கலம் கொடுத்தன .

இரவுகள் தனிமையாயின .

சில சுகங்கள் எப்போதும் கிடைக்க வேண்டும் .இல்லையெனில் எப்போதும் கிடைக்க கூடாது .

கொடுத்து பழகியப்பின் என்னையே எரிக்க துவங்குகிறது இந்த பாவி உடல் . இளமையின் தனிமையை விட விதவையின் தனிமை கொடுமை .

நான் நானாக இருக்கும் சில சமயங்களில் , பக்கத்து வீட்டு "அம்மு " குட்டியுடன் விளையாடுவேன் .

குழந்தையாகவே இருந்திருக்கலாம் , இறந்தும் இருக்கலாம் .

அம்மு குட்டியின் அப்பாவை நான் பார்க்கவே விரும்பவதில்லை . எது வேண்டும் என்பதை அவனின் பார்வை உணர்த்திவிடும் .

முன்பு ஆண்கள் என்னை பார்த்த பார்வைகளை பாராட்டுகள் என்று எண்ணிய மனது , இப்போது பார்வையின் விஷம் அறிந்து அடங்குகிறது .

அன்றும் மற்ற நாட்களை போலத்தான் வந்தது . என் தனிமையை அழிக்கும் அந்த குட்டி சாமியை பார்க்க போனேன் சற்றே பயத்துடன் .

அவன் வீடு என்ற தைரியம் , யாரும் இல்லை என்ற துணிச்சல் ,அடைய வேண்டும் என்ற வேட்கை எல்லாம் சேர்த்து தெரிந்தது அவன் என்னை இருக்க கட்டி பிடித்ததில் .  
என்ன துள்ளுற ? இதை பாரு ,
தனியா எவ்வளவு நாள் இருப்ப ? கொஞ்சம் அமைதியாய் இரு டி . ஏய் , ஏய் ..

நெருப்பில் இடப்பட்ட புழுவாய் அவனிடம் இருந்து விலகினேன் .உடம்பின் நடுக்கம் இன்னும் குறையவில்லை . கற்பு என்பது என்ன ? கணவன் இருந்தால்தானா ?
விதவைக்கும் உண்டு கற்பு .
படி தாண்டாள் பத்தினி என்பது எவ்வளவு உண்மையோ
அதே போல் தான், பதி இழந்தாலும் பத்தினி பத்தினி தான் .

விபச்சாரியிடம் கூட காசு கொடுத்தால் தானே சுகம் , என்னிடம் மட்டும் என் இந்த துணிச்சல் ?

விபச்சாரியை விட நான் என்ன கேவலமானவளா ?
தொட்டால் மாறுவேன் என்று தானே ..
தொட்டால் மடிவேனே அன்றி மாறமாட்டேன் .

பத்து மாதம் பெற்ற தாயிடம் கதறி அழுதேன் .
அவளோ , மானம் , மரியாதை , கவுரவம் என்றாள் .

அவன் வீட்டுக்கு போனது என் தவறாம் .

பெண்ணுக்கு பெண்ணே எதிரி .

கடவுளிடம் கூட, முறை இட பிடிக்கவில்லை .

தனிமையில் இருந்த என் காதில் விழுந்தது என் அப்பாவின் சொற்கள் .  

"எல்லாம் சாமி குத்தம் தான் . அதான் , 10 பவுனுல ஒரு தாலி செஞ்சு அம்மனுக்கு போட போறேன் . அப்புறம் ஒரு பட்டு புடவை எடுத்து புற்று அம்மனுக்கு போடணும் .. "

கல்லுக்கு கூட தாலி , புடவை .. தேடி கொண்டு இருக்கிறேன் "விதவையாய்" உள்ள ஒரு தெய்வத்தை எனக்கு துணையாக .