அவளை பார்க்க சூரியன் சற்று சீக்கிரமே வந்து விட்டான் . நிலவும் சூரியனும் சந்தித்து கொண்டன . ஆம் . அவள் சூரியனை பார்த்து சோம்பல் முறித்தாள்.

"நல்ல தூக்கம் இல்லையா ?" - அவள் .
" இல்லே , கெட்ட தூக்கம் " - நான்
"அடடா , கலையிலே ஆரம்பிச்சிட்டன்யா " - அவள் .
" இன்னும் ௨ மணி நேரத்திலேயே சென்னை வந்துவிடும் " - என்றது பக்கத்தில் நின்ற பெருசு ..
என்னது ரயில்வே ஒழுங்கா வேலை செய்யுதா ?..
டிக்கெட் இல்லாமல் பஸ்சில் மாட்டிகொண்டது மாதிரி ஒரு அவஸ்தை ...
இதயங்களின் பரிமாற்றத்திற்கு பின் விலாசங்களை பரிமாற்றிகொண்டோம்.அந்த 2 மணி நேரமும் மௌனம்தான் எங்களை பேச வைத்துக்கொண்டு இருந்தது .
சென்னையும் வந்தது ..வில்லனும் வந்தான் . மன்னிக்கவும் வந்தார் .
என்னடா காதல் கதையில் சோகமே இல்லைன்னு நீங்க போருமனது ஆண்டவனுக்கு கேட்டுவிட்டது போல ..
என் உயிரை என்னை கேட்காமலே அழைத்து கொண்டு சென்றார் அவள் அப்பா .
அவள் கண்களில் நான் .
அதனால் கண்ணீர் வெளி நடப்பு செய்தது .
அவள் என்னை பார்த்து கொண்டு இருந்தாள்.அவள் தந்தை என்னையும் , அவளையும் மாறி மாறி பார்த்தார் .என்னை அழைத்தார் .
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை போல ஒரு பார்வை அவரிடம் இருந்து ..
"என்ன காதலா ? " - அக்னி கனலாக கேள்வி அவரிடம் இருந்து .
" ஆமாம் " என்றேன் ஆழமாக .
" இந்த இரண்டு நாளுக்குள் அப்படி என்ன காதல் உங்களுக்கு " -அவர் ."
இரண்டு விநாடி போதும் காதலிக்க " - நான்
" அப்பா ... " என்று அவள் எதோ சொல்ல துவங்க ..
" நிறுத்தும்மா , எதாவது சொல்லாதே . நான் மட்டும் இல்லை நம்ம குடும்பமே தாங்காது " - அவர் .
"இல்லையப்பா .அவர் நல்லவரு " - அவள்
"நாங்க எப்பம்மா கேட்டவங்கள மாறினோம் ? " - அவர் .
அவள் மௌனத்தில் பாசம் தெறித்தது.
" ஏன் தம்பி , அக்கா , தங்கச்சி எல்லாம் உங்களுக்கு இருக்காங்களா ? - அவர் .கண்டிப்பாக பாசம் இல்லை , விசம் இருந்தது அவர் பேச்சில் .
" அவங்களும் இப்படிதானா , 2 நாளுக்குள் யார்கிட்டவது " என்று அவர் முடிக்கும் முன் .
" மரியாதையாக பேசுங்க " -நான் கோபமாக .
" ஏம்பா, உன் கூட பிறந்தவங்களை நான் ஒருத்தன் தப்பா பேசுவது கூட உன்னால தங்க முடியலை . என்னால எப்படிப்பா நான் பெத்த பிள்ளையை " என்று அவர் முடிக்கும் முன் கண்ணீர் முந்தி கொண்டது .
"காதலிப்பது குற்றமா ? " என் கேள்வி .
" எதுக்கு காதல் " - அவரிடமும் கேள்வி ..
" சந்தோசமாக வாழ்வதற்கு " -என் பதில் .
" இப்ப , நீங்க சந்தோசமாக இல்லையா ? - அவர்
" சாவதில் கூட சந்தோசம் தருவது காதல் " - நான்
" வாழ , போராட தெரியாத கோழை யாக்குவது தானே உங்க காதல் " - அவர் "பேசி புரிவதில்லை காதலும் , கடவுளும் " - நான்
" அதே போல்தான் , கடமையும் , பாசமும் " - அவர் .
" ஏன் சார் , காரணமே இல்லாமல் காதலை எதுகிறீங்க ? " நான் .

அவர் " என்னா , பிள்ளைங்களை பெத்தவங்க காதலிக்கிறது தான் . அது சரி நீங்க ஏன் காரணமே இல்லாமல் காதலிகிறீங்க "
" நீங்க உங்க தங்கச்சி , அக்காவுக்கு காதல் கல்யாணம் பண்ணிட்டு வாங்க , நான் ஏன் பொண்ணை தரேன் ." -அவர்
" சார் , நான் நீங்க நெனைக்கிற மாதிரி இல்லை , நான் " - என்று முடிக்கும் முன்
" ராமனகவே இருந்துட்டு போ . ஆனால் என் பொண்ணு உன்னோட சீதா இல்லை .வேண்டாம்மா இந்த உறவு " - அவர்
" அப்பா " என்றாள் கண்ணீருடன் ..மெதுவாக கரைந்து கொண்டு இருந்தது என் காதல் அவள் கண்ணீருடன் .
" ஏன் தம்பி , நான் தந்த 20 வருஷ பாசத்தை விடவா உங்க 2 நாள் காதல் பெருசு ? " - அவர் .
" ஏன் தம்பி , நான் தந்த 20 வருஷ பாசத்தை விடவா உங்க 2 நாள் காதல் பெருசு ? " - அவர் .
" ஏன் சார் , காதலா , பாசமா என்று போட்டி போடுறீங்க " - நான் .
" அப்பா , அவர் ....அப்பா " - பேச திராணியற்று சிலையனால் என்னவள் .
நிலநடுக்கம் எனக்குள் .
பாதிப்பு அவள் மனதில் .
அவள் நிழல் கூட ரொம்ப நேரம் நிற்கவில்லை அங்கே .
தனிமையை எனக்கு பரிசாக தந்து விட்டு பாசமும் ,காதலும் சென்று விட்டன .
என் கதையை படிக்கிறீங்களே நீங்க எந்த பக்கம் . அது சரி கடவுளே என் பக்கம் இல்லை .நீங்க மட்டும் விதி விலக்கா என்ன..?
என் காதலை தோற்க விட மாட்டேன் .. ஜெயிப்பேன் .. கண்டிப்பாக ..
என் காதலை தோற்க விட மாட்டேன் .. ஜெயிப்பேன் .. கண்டிப்பாக ..
என் நிழல் கூட நெருக்கம் காட்டவில்லை அந்த ரயில்வே நிலையத்தில் ..
" நந்தி மாதிரி நிக்கிறானே " என்ற யாரோ ஒருவரது திட்டுதான் எனக்கு சொன்னது என் வாழ்நாளில் களவு போயிருந்த 4 மணி நேரத்தை ..
( தொடரும் )