கொஞ்சம் லேட்டுதான் .. ஆனாலும் நீங்க ரசிக்கலாம் ..
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி

- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
-
▼
2010
(23)
- ► செப்டம்பர் (3)
-
►
2009
(44)
- ► செப்டம்பர் (2)
Categories
ஏன் டீ , அங்க எவனை பார்த்து பல்ல காண்பிச்சு மயக்குற ? புருசனின் குரல் காதில் விழுந்தாலும் மெதுவாகவே அவள் திரும்பினாள்.
பழக்கப்பட்ட வார்த்தைகள் அவளிடம் பலம் இழந்து போயின.
விஷம் தெளித்த வார்த்தைகளை தாங்கி கொண்டு வெளியில் இருந்து வீட்டினுள் அடைப்பட்டாள்.
என்னடி , நான் இவ்வளவு கத்தியும் , துளியும் அசையாமல் எருமை மாடு மாதிரி நிக்குற ?
வழக்கம் போல அவள் கண்களில் கண்ணீர் .
என்னடி பத்தினி வே ஷம் போடுற , முதல் ராத்திரில்லே என்க்கிட்டையே நீ ஒருத்தனை லவ் பண்ணினேன்னு சொன்னவள் தானே ..!
கணவனிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததற்கு தினம் தினம் பரிசு மழை அவளுக்கு .
என்னய்யா , இவ்வளவு லேட்டா வருகிறாய் ? சரி , சரி சீக்கிரம் வண்டியை கிளப்பு , போகலாம் .
அவன் வெளியேறினான் . அவன் இட்ட வடுக்கள் மட்டும் இவளுடன் .
மாலை , வில்லனுடன் அவன் நண்பனும் வந்தான் .
டேய் ரகு , என்னோட மனைவியை நீ பார்த்தது இல்லைல. இரு நான் கூப்பிடுறேன் .
அவன் கூப்பிடுவதற்க்குள் , அவளே அங்கு பயந்து நிற்க
உடனே ரகு , தேவதை மாதிரி உனக்கு மனைவிடா , நீ ரொம்ப கொடுத்து வைததவன்டா.
நன்றி . சரி என்ன குடிக்க வேணும் உனக்கு ?
நான் வேண்டுமென்றால் காப்பி கொண்டு வரட்டா என்று அவள் அப்பாவியாக கேட்க .
சிரித்து கொண்டே சரி என்றான் ரகு .
பின் அவள் கணவனிடம் , விருந்தாளிக்கு என்ன பிடிக்கும் என்று உன் மனைவிக்கு நன்றாக தெரிகிறது என்று பாராட்டினான் .
ரகு போன பிறகு ,
வீட்டினுள் ஒரு அணுகுண்டு வெடித்தது .
ஏண்டி , அவனை உனக்கு முன்னாடியே தெரியுமா ? நான் கூப்பிடுவதற்க்குள் நீ ஏன் வந்தாய் ?
அவனுக்கு காப்பி தான் பிடிக்கும் என உனக்கு எப்படி தெரியும் ?
என்னடி இவனும் முன்னாள் காதலனா ?
இன்னும் எத்தனை பேருடி?
சொற்கள் எல்லாம் அவளை சுட்டு தின்றன .
அவன் போன பிறகு , இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த டிரைவர் பாண்டியன்,
தாயி , எப்படி தாயி ,இந்த பயலோட இருக்க , பேசாம உங்க வீட்டுக்கு போய்டு தாயி .
நான் எங்கப்பா ,போவேன் . வீட்டுல இருந்தப்ப , காதலை ஒரு கொலை குற்றம் போல பார்த்து திட்டு , அடி , உதை வாங்கினேன் . இப்ப இவர்கிட்ட வாங்குறேன் .
நான் எதுக்குப்பா வாழனும் ? காதலிச்சது ஒரு தப்பா ?
நீ என்னோட மகளா இருந்தா , எப்பவோ உன்னை என் கூட அழைத்துக் கொண்டு போயி இருப்பேன் . இந்த பய ,உன்னை கொஞ்சம் , கொஞ்சமா கொன்னுடுவானே
விதி அதுவாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும் ?
கண்களில் கண்ணீர் இல்லை . கண்ணீரும் வற்றிப் போயி பல நாட்கள் ஆகிறது .
அடுத்த நாள் , அவன் போன பிறகு ரகு வந்தான் .
எங்கங்க அவன் இல்லையா ?
இல்லை , இப்பத்தான் அவர் வெளியே போனார் ..
அச்சோ . சரி நான் அவனை மறுபடியும் வரை சொல்கிறேன் . நீங்க எனக்கு அன்னைக்கு போட்ட காப்பி மாதிரி போட்டு எனக்கு எடுத்துக் கிட்டு வாங்க . ப்ளீஸ் .
உடம்பெல்லாம் கொஞ்சம் நடுங்கித்தான் போனால் அவள் . என்ன நடக்க போகிறதோ அவன் வந்தால்????
சமையலறையில் அவள் , காப்பி போட்டு கொண்டு இருக்கும் போது , பின்னாடி மிக நெருக்கமாக ரகு .
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க . எனக்கு எல்லாம் தெரியும் , உன்னை அவன் ரொம்ப கொடுமை படுத்துறான் இல்லை .
இப்படி பேசிக் கொண்டே அவளை அணைக்க முயல
நாயே , தள்ளி போடா , இல்லை இங்க நடக்கிறதே வேற .. என்று கண்கள் சிவக்க அவள் கர்ஜித்தாள் .
ரகு வோ , மிக மெல்லிய புன்னகை யுடன் , கிண்டலாக .
இப்ப உன்னால் என்ன பண்ண முடியும் ?. உன் புருஷன் தான் என்னை இங்க அனுப்பி நீ எப்படி நடந்துகிறன்னு வேவு பார்க்க சொன்னான் .நான் மட்டும் அவன் கிட்ட போயி ,
உன் பொண்டாட்டி நல்லவள் இல்லை .அப்படி இப்படி சொன்னால் என்னவாகும் ?
பித்து பித்து பிடித்தவள் போல் அவள் முகம் வெளிறிப் போயி இருந்த்தது .
இரகுவே மீண்டும் ,
கொஞ்ச நேரம் எனக்கு சந்தோசம் தந்த்தால், நீ நன்றாக வாழாலாம் . என்ன சொல்ற ? உனக்கு வேற வழியில்லை என்று சொல்லி விட்டு அவளை நெருங்கினான் .
நெருப்பில் இடப்பட்ட பஞ்சு போல அவள் மனம் எரிந்து கொண்டு இருந்ததது .
இன்னும் நெருக்கமாக
இன்னும் ..
திடிரென அங்கு டிரைவர் வர, ரகு பயந்து நெளிந்து வெளியேறினான் .
பைத்தியம் பிடித்தவள் போல் அவள் அங்கு வெறித்து பர்ர்த்து கொண்டிருந்தாள் .
என்னமா நடந்ததது . யாரும்மா அவன் .. சொல்லு தாயி , என்ன நடந்ததது ?
கொட்டி தீர்த்தாள் . அமைதி அங்கு சிறிது நேரம் உயிர் வாழ்ந்த்தது .
பின் , அவர் விடும்மா , எல்லாத்தையும் விடும்மா .
என் கூட வாம்மா , தாயி , இனி நீ என் மகள் .
அவள் கண்களில் முதல் முதாலாக அனந்த கண்ணீர் .
அடுத்த நாள் தினமலரில்
22 வயது பெண் 55 வயது வாலிபருடன் தப்பி ஓட்டம்
- மக்கள் எல்லாரும் சுதந்திர வேட்கை கொண்டு பயங்கரமாக வீறு கொண்டு போராடினார்கள் .
- வெள்ளையர்கள் நம்மை கொன்று குவித்தார்கள் .
- கடைசியில் ரத்தம் சிந்தி , உயிர் துறந்து சுதந்திரம் வாங்கினோம் .
தப்பு , குற்றம் , பாவம் எல்லாம் வெள்ளையர்கள் மட்டுமே செய்தார்கள் . நாம் எதுவுமே செய்யவில்லை .நாம் ஒரு அப்பாவிகள் . நாம் ஒரு பாதிக்கப்பட்ட பாவிகள் .
நமக்கு தெரிந்தது "கொடி காத்த குமரனின் " சாவு மட்டும் தான் .அச்சில் ஏறாமால் செத்த குமரன்கள் எத்தனையோ ?
எனக்கு வரலாற்றில் புரியாத ஒன்று, நாம் யாரிடம் இருந்து விடுதலை பெற்றோம் ?

என்னடா , இவன் கவிதை எழுதி மொக்கை போடப் போறான்னு தப்பா நினைக்காம மேலும் படிப்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .
சிரிக்கும் மிருகம் பெண் என்று அந்த ஆட்டோவின் பின் புறம் எழுதி இருந்தது .
இந்த பதிவை படித்தவுடன் , என்டா , இதைப் போய் படித்தோம் என்று கண்டிப்பாக நினைக்க போகிறீர்கள் .
ஜாக்கிரதை .நான் என்னை சொல்லி கிட்டேன் .
என்னை , நான் ஒரு முற்போக்குவாதி , பிற்போக்கு வாதி , நடு போக்கு வாதி என்று சொல்லிக்கொள்ள மாட்டேன் .இருந்தாலும் இந்த புத்தாண்டை பற்றிய சில ஐயப்பாடுகள் எனக்குள்ளன .
2010 இது எதைக் குறிக்கிறது? . இயசு பிறந்து 2010ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதைத்தான் . ஆனால் அறிவியல், அப்படி ஒருத்தர் , இருந்தாரா இல்லை அந்த ஆண்டுத்தான் , அந்த கிழமைத்தான் பிறந்தாரா என்பதை இன்னும் அறிவிக்கவில்லை .பின் எப்படி அதை உண்மை எனவோ , அதன் அடிப்படையில் அமைந்த இந்த தினத்தை புத்தாண்டு என்று கொண்டாடுவது ?
இயசு பிறப்பதற்கு முன் (அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள் ) 10 மாதங்கள் தான் இருந்தன . ஒவ்வொரு அரசனின் ஆட்சியிலும் சில நாட்கள் , மாதங்கள் கூட்டப்பட்டன .
நீங்கள் கேட்கலாம், தமிழ் புத்தாண்டு என்று கூட உள்ளது என்று ?
தமிழில் 12 மாதங்கள் மட்டுமே உண்மை . அதன் வரிசை மட்டுமே நாம் அறிந்தது . ஆனால் அதன் முதன் மற்றும் கடைசி மாதத்தின் அடையாளம் நமக்கு தெரியாது .வட்டத்தின் ஆரம்பத்தை எந்த புள்ளி என்று சொல்வது ?
தமிழ் வருடங்கள் 60 என்கிறார்கள் . அதில் ஒன்று கூட தூய தமிழில் இல்லை . அது இந்து மதத்தின் திணிப்பு .
நமது தமிழ் இலக்கியத்தில் எல்லாம் புத்தாண்டு என்றோ , புத்தாண்டு கொண்டாட்டம் என்றோ எந்த செய்தியும் இல்லை . அப்படி இருந்திரந்தால் தை 1 தமிழ் புத்தாண்டாக மாறி , பின் மீண்டும் சித்திரை 1 ௧ மாறி இருக்காது .
ஆக தமிழர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட வில்லை . அது நாம், மற்ற நாட்டினரை பார்த்து காப்பி அடித்தது (வழக்கம் போல ).
நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையின் பின்னும் ஒரு காரணம் இருக்கிறது . அது அறிவியலுக்கு , அறிவுக்கு ஒவ்வாதது என்றாலும் ஒரு காரணம் உள்ளது . அது உழைப்பாக(பொங்கல் ) , இறப்பாக(தீபாவளி ) , பிறப்பாக (கிறிஸ்மஸ் ) என ஒன்றாவது உள்ளது .
ஆனால் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் என்ன உள்ளது .?
இப்படி எல்லாம் மூளை யோசித்தாலும் , என் மனம் வேறு ஒன்றை சொல்கிறது ? மூளை ஏன் கொண்டாடுகிறாய் என்று கேட்கிறது . மனம் ஏன் கொண்டாடகூடாது என்று கேட்கிறது .
வாழ்வில் இந்த மாதிரி சில கொண்டடட்டங்கள் தான் ஒரு பிடிப்பை ஏற்படத்துகின்றன . இதை கொண்டாடவில்லை என்றால் என்ன ஆகிவிடும் ?
ஒன்னும் இல்லை . ஆனால் கொஞ்சம் கொண்டாடினால் , எதோ மனதில் ஒரு தன்னிறைவு , ஒரு புத்துணர்ச்சி .
நாம் தினமும் கவலை பட ஆயிரம் காரணங்கள் . நாம் கொண்டாட சில தினங்களே நமக்கு உள்ளது .
மதத்தை , மொழியை , இனத்தை ,தேசத்தை கடந்து இந்த புத்தாண்டை கொண்டாடுவோம் ..இனிவரும் நாட்கள் இனிமையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ..
என்ன சொல்ல வரேன் என்றால் ..
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .
டிஸ்கி : இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எனக்கு யாரும் டீரீட் வைக்க வில்லை என்ற கோவத்தில் எழுதியது .. மூளைக்கு வேலை கொடுக்காதீங்க .அது எந்த வேலையையும் நம்மள பண்ண விடாது .